செய்திகள் :

``திருமண ஆசைகாட்டி ரூ.2 கோடி பணம், தங்க நகை மோசடி'' - பெண் டி.எஸ்.பி மீது ஹோட்டல் அதிபர் புகார்

post image

சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா என்ற இடத்தில் டி.எஸ்.பி.யாக உள்ளவர் கல்பனா சர்மா. இந்த பெண் போலீஸ் அதிகாரி ஹோட்டல் உரிமையாளரை திருமண ஆசைகாட்டி பணமோசடி செய்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராய்கட்டில் ஹோட்டல்கள் நடத்தி வருபவர் தீபக் தண்டன். இவருக்கும் போலீஸ் அதிகாரி கல்பனா சர்மாவுக்கும் இடையே கடந்த 2021ம் ஆண்டு முதல் முறையாக அறிமுகம் ஏற்பட்டது.

திருமணமானவரான தீபக் தண்டனுடன் கல்பனாவிற்கு நெருக்கமான நட்பு ஏற்பட்டது.

தீபக் தண்டனுடன் கல்பனா
தீபக் தண்டனுடன் கல்பனா

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி தீபக்கை திருமணம் செய்து கொள்வதாக கூறி ரூ.2 கோடி பணம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள வைரமோதிரம், ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் யுனோவா காரை வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக தீபக் குற்றச்சாட்டுச் செய்துள்ளார்.

அதோடு, ராய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலை தனது சகோதரர் பெயருக்கு மாற்றிக்கொடுக்கும்படி நெருக்கடி கொடுத்ததால் ரூ.30 லட்சம் செலவு செய்து அந்த ஹோட்டலை கல்பனா வர்மா பெயருக்கு எழுத்துப்பூர்வமாக மாற்றிக்கொடுத்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “தான் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுக்கவில்லையெனில் போலி வழக்கில் சிக்க வைத்துவிடுவேன்” என்று தன்னை மிரட்டுவதாக தீபக் போலீசில் புகார் செய்துள்ளார்.

தனது குற்றச்சாட்டுக்கு சாட்சியாக வாட்ஸ் ஆப் சாட்டிங் விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் இரு தரப்பிலும் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர். ஆனாலும், இன்னும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

கல்பனாவின் தந்தை ஹேமந்த் இரண்டு மாதங்களுக்கு முன்பு தீபக் தொழில் விஷயமாக அவரது மனைவி வங்கி கணக்கில் இருந்து கொடுத்த காசோலை பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டதாக போலீசில் தெரிவித்துள்ளார்.

இவ்வழக்கு இப்போது கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. கல்பனா தன் மீதான குற்றச்சாட்டுக்களை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சாட்டிங்
சாட்டிங்

தனது தந்தைக்கும் தீபக்கிற்கும் இடையிலான தொழில் பிரச்னையில் தேவையில்லாமல் தனது பெயர் இழுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

தீபக் தாக்கல் செய்துள்ள சாட்டிங் தகவல்கள் போலியானவை என்றும், தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை திருடி இது போன்ற சாட்டிங் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தீபக் தாக்கல் செய்துள்ள சாட்டிங் தகவல்கள் போலியானவை என்றும், தனது சமூக ஊடகப் பக்கத்திலிருந்து புகைப்படங்களை திருடி இதுபோன்ற சாட்டிங் உருவாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

தீபக் கார் கொடுத்ததாக கூறப்படுவது குறித்து கல்பனா கூறுகையில், தீபக் மனைவியிடமிருந்து முறைப்படி அந்த கார் விலைக்கு வாங்கப்பட்டுள்ளது. தீபக் தான் கூறும் குற்றச்சாட்டுக்கு சாட்சியங்களை தாக்கல் செய்ய முடியுமா? கடந்த நான்கு ஆண்டுகளாக ஏன் புகார் செய்யவில்லை? காசோலை மோசடி வழக்கில் அவரது மனைவிக்கு நேரடி தொடர்பு இருந்தும் எந்தவித புகாரும் கொடுக்கவில்லை. தீபக்கின் புகார் அனைத்தும் கட்டுக்கதையாகும். சட்டச்சிக்கலில் இருந்து தப்பிக்க இதுபோன்று செய்துள்ளார்.

கல்பனா வர்மா
கல்பனா வர்மா

எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இதுபோன்று தீபக் செய்கிறார் எனத் தெரிவித்தார்.

இது குறித்து இருவரின் புகார்களையும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் கொடுக்கப்பட்ட பணத்தை திரும்ப கேட்டதால்தான் பிரச்சனை உருவானதாகத் தெரிகிறது.

தீபக்கும் கல்பனாவும் ஹோட்டலில் பல மணி நேரம் அமர்ந்து பேசியதாகவும், அடிக்கடி வீடியோ காலில் பேசிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி சத்தீஷ்கர் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மின்சாரம் தாக்கி மகன் உயிரிழப்பு; துக்கம் தாங்காமல் உயிரை மாய்த்த தந்தை - ராமநாதபுரத்தில் சோகம்!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீனவர் காலனியைச் சேர்ந்தவர் களஞ்சியம். இவர் நேற்று காலை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் உள்ள மோட்டார் மின் சுவிட்சினை பழுது பார்த்து... மேலும் பார்க்க

ஈரோடு: காதல் திருமணம்; தங்கையைக் கடத்திச் சென்ற அக்கா உள்ளிட்ட 5 பேர் கைது - விவரம் என்ன?

ஈரோடு மாவட்டம், எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). பெருந்துறை சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், அந்தியூர் மேல்தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந... மேலும் பார்க்க

யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்த டாக்டர்; பலியான பெண் - விசாரணையில் வெளிவந்த திடுக் உண்மைகள்!

உத்தரப்பிரதேசத்தில் வயிற்றுவலி காரணமாக கிளினிக்கில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவர் யூடியூப் பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில் அப்பெண் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தில், அந்த மருத்துவர்கள் போலி மருத... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் அச்சடித்து பொன்னானியில் சப்ளை; 10 லட்சம் பேருக்கு போலி சான்றிதழ் விற்ற மோசடி கும்பல்

கேரள மாநிலம், மலப்புறம் மாவட்டம், பொன்னானி பகுதியில் நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உள்ள போலி சான்றிதழ்கள் தயாரித்து வழங்கப்படுவதாக போலீஸ் எஸ்.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில்... மேலும் பார்க்க

காதலனிடம் தப்பிக்க கார் ஓட்டுநர் மீது புகார் அளித்த நர்சிங் மாணவி - பெங்களூருவில் அதிர்ச்சி

பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், தனது கழுத்தில் இருந்த காயங்களை மறைப்பதற்காக, காதலனிடம் பொய் கூறியதுடன், கார் ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

`ஊழல் புகார், வருமானத்திற்கு அதிகமாக சொத்து' - ஊராட்சி செயலாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே படிக்காசுவைத்தான்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் (48) என்பவர் பிள்ளையார்குளம் ஊராட்சியில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் வருமானத்திற்கு அதிகமாகச... மேலும் பார்க்க