செய்திகள் :

`சவுக்கு சங்கர் கைது அப்பட்டமான துன்புறுத்தல்' - கார்திக் சிதம்பரம் கருத்து!

post image

யூடியூபர் சவுக்கு சங்கர் இன்று (டிசம்பர் 13) அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்திக் சிதம்பரம்.

கார்த்திக் சிதம்பரம்

தனது யூடியூப் சேனலில் அவ்வப்போது திமுக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார் சவுக்கு சங்கர். இதன் காரணமாக, அவர் மீது வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவதூறாக பேசி தன்னிடம் ரூ. 2 லட்சம் பறித்துவிட்டதாக சினிமா தயாரிப்பாளர் ஆயிஷா என்பவர் கடந்த மாதம் சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது புகாரளித்திருந்தார்.

இந்த வழக்கில் அவரைக் கைது செய்ய ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலையில் காவல்துறையினர் சென்றிருக்கிறார்கள். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரை உடனே கைது செய்ய முடியவில்லை.

savukku shankar
savukku shankar

தீயணைப்பு படையினர் உதவியுடன் அவரது வீட்டுக்கதவை உடைத்து திறந்தனர். பின்னர், சவுக்கு சங்கர் ஆதம்பாக்கம் வீட்டில் வைத்து இன்று (டிச., 13) மதியம் கைது செய்யப்பட்டார். 

கைதாவதற்கு முன் வீட்டுக்குள் இருந்த சவுக்கு சங்கர், தன்னை கைது செய்வதற்காக போலீஸார் வந்துள்ளதாக, வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பேசுபொருளானது.

இந்தநிலையில் காங்கிரஸ் எம்.பி கார்திக் சிதம்பரம், "நான் சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவது அப்பட்டமான துன்புறுத்தலாகும்." என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

"நன்றி திருவனந்தபுரம்"- சிபிஎம் கோட்டையைக் கைப்பற்றிய பாஜக; வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற்றன. 14 வருவாய் மாவட்டங்களில் 14 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 6 மாநகராட்சி மேயர்கள், 86 நகராட்சி தலைவர்கள்... மேலும் பார்க்க

'மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத்தை விஞ்சிய தமிழ்நாடு ' - ஸ்டாலின் பெருமிதம்

தமிழ்நாடு 'மொத்த உள்மாநில உற்பத்தியில்' முதல் இடத்தைப் பிடித்துள்ளது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்."வானுயர் GSDP வளர்ச்சி விகிதம்; பெருமாநிலங்களை எல்லாம... மேலும் பார்க்க

தமிழ்நாடு வரும் அமித் ஷா; இறுதி முடிவை ஒத்திவைக்கும் ஓ.பன்னீர்செல்வம் - என்ன நடக்கிறது?

அமித் ஷா வருகிற 15-ம் தேதி தமிழ்நாடு வருகிறார். ஆனால், அவர்‌ வருவதற்கான சிக்னல்கள் இப்போதே தமிழ்நாட்டில் தெரிகிறது.தற்போது தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட... மேலும் பார்க்க

”கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதல்வர் எனச் சொல்லி பலர் வந்துள்ளனர்” - திருமாவளவன்

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநில மாநாடு தூத்துக்குடியில் நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்... மேலும் பார்க்க

`தாங்க முடியாத துர்நாற்றம்; இதுதான் சர்வதேச விமான நிலையமா?' - ப.சிதம்பரம் ஆவேசம்

சென்னை விமான நிலையம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " சென்னை விமான நிலையத்தின் 4-வது முனைய... மேலும் பார்க்க

எடப்பாடியுடன் சந்திப்பு; வரவிருக்கும் அமித் ஷா - டெல்லி பயணமான நயினார் நாகேந்திரன்

இந்த ஆண்டின்‌ தொடக்கத்தில் இருந்தே, தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் தொற்றி கொண்டன.இப்போது தேர்தலுக்குச் சில மாதங்கள்‌தான் உள்ளன. அதனால், பரபரப்புகள் பற்றி சொல்லவே தேவையில்லை.தமிழ்நாட்டில் இப்போது வர... மேலும் பார்க்க