செய்திகள் :

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

post image

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்டிருந்தபோது அவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர். அவர் ஓட்டிச்சென்ற ஆட்டோ ரோட்டோரம் கிடந்தது. அவர் சாலையில் இறந்து கிடந்தார்.

இது குறித்து அனிதாவின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சிவம் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

உடனே அவர்கள் ஒரே நாளில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் இதில் முக்கிய குற்றவாளி முகேஷ் என்று தெரிய வந்தது.

அதன் அடிப்படையில் போலீஸார் முகேஷை தேடி வந்தனர். முகேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது கார் அங்குள்ள ஆற்றுப்பாலத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு தேடிப்பார்த்ததில் அவர் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடியதை தொடர்ந்து பகவான்புரா என்ற இடத்தில் முகேஷ் இருப்பது தெரிய வந்து அவரை போலீஸார் சுற்றி வளைத்தனர்.

உடனே முகேஷ் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். போலீஸாரும் திரும்ப சுட்டனர். இதில் முகேஷ் காலில் தோட்டா பாய்ந்து காயம் அடைந்தார். அவரை போலீஸார் மீட்டு மருத்துவனையில் சேர்த்துள்ளனர்.

காதலித்து திருமணம் செய்து கைவிட்ட அனிதா

இது குறித்து போலீஸ் அதிகாரி பிரீத்தி சிங் கூறுகையில்,''முகேஷிடம் விசாரித்த போது அனிதாவும், முகேஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் கோயிலில் திருமணமும் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. இதையடுத்து அனிதா முகேஷை கைவிட்டுவிட்டு சென்றுவிட்டார்.

அதோடு அனிதா வேறு ஒரு திருமணமும் செய்து கொண்டார். இதற்கு பழிவாங்கத்தான் முகேஷ் அனிதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதுவும் முகேஷும், அனிதாவும் திருமணம் செய்த நாளில் கொலை செய்ய திட்டமிட்டு தனது நண்பர்களின் துணையோடு சுட்டுக்கொலை செய்துள்ளார். அதுவும் அனிதா ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுள்ளார்'' என்று தெரிவித்தார்.

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப ... மேலும் பார்க்க

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 0... மேலும் பார்க்க

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க