`தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாட்டில் வான்வழி அமைப்பு டு மேகதாது! - விஜய் மோடியிட...
காலடியில் சமோசா; பயணிகளை அதிரவைத்த வியாபாரியின் வீடியோ - விளக்கமளித்த ரயில்வே!
ரயில் பயணங்களின் போது ஜன்னலோரம் அமர்ந்து, வேடிக்கை பார்த்தபடியே சுடச்சுட ஒரு கப் டீயும், சமோசாவும் சாப்பிடுவது எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்ச விஷயம். ஆனால், அடுத்த முறை நீங்கள் ரயிலில் சமோசா வாங்கும்போது இந்த வீடியோ உங்கள் நினைவுக்கு வந்து பயத்தை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை. நாம் அவ்வளவு ஆசையாக வாங்கிச் சாப்பிடும் சமோசாக்கள் எவ்வளவு அசுத்தமாக விற்கப்படுகின்றன என்பதைக் காட்டும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி, ஒட்டுமொத்தப் பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் வாசலுக்கு அருகே அமர்ந்திருக்கும் வியாபாரி ஒருவர், மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். அதிர்ச்சி என்னவென்றால், பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காகத் திறந்து வைக்கப்பட்டிருந்த சமோசா பெட்டியின் மீது, கொஞ்சம் கூட பயமே இல்லாமல் தனது இரண்டு கால்களையும் நீட்டி, அதன் மீது மிதித்தபடி அமர்ந்திருக்கிறார். பார்ப்பதற்கே அருவருப்பாக இருக்கும் இந்தச் செயல், ரயில் உணவுகளின் சுத்தம் மற்றும் மக்களின் உடல்நலம் குறித்துப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த வீடியோ வைரலாகி மக்களின் கோபம் அதிகமானதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் உடனடியாக விசாரணையில் இறங்கியது. வீடியோவில் இருக்கும் நபர் ரயில்வே ஊழியரோ அல்லது அனுமதி பெற்ற வியாபாரியோ கிடையாது என்றும், அவர் ரயிலுக்குள் திருட்டுத்தனமாக நுழைந்து தின்பண்டங்களை விற்ற வெளி ஆள் என்றும் ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
இனிவரும் காலங்களில் பயணிகளின் உடல்நலத்தோடு விளையாடும் இதுபோன்ற அசுத்தமான சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, ரயிலில் உணவு விநியோகம் செய்ய அனுமதி பெற்ற நிறுவனங்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரயிலுக்குள் முறையற்ற வெளி வியாபாரிகள் நுழைந்தால் உடனுக்குடன் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்களில் விற்கப்படும் உணவுகளின் தூய்மையைக் கண்காணிக்க இன்னும் கடுமையான நடவடிக்கைகள் தேவை என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் நிரூபித்துள்ளது.

















