செய்திகள் :

குறியீடு முக்கியமல்ல: ப.சிதம்பரம் கருத்து

post image

சிவகங்கை: முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். எனவே, அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை என முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

சிவகங்கையில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த ப.சிதம்பரம் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

தமிழகத்துக்கு மத்திய அரசு தரமறுத்த சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்துக்கான நிதியை மாநில அரசே ஒதுக்கியுள்ளதை வரவேற்கிறேன். மத்திய அரசு இப்பொழுதாவது வெட்கப்பட்டு அவா்களது நிதியை தருவாா்கள் என நம்புகிறேன்.

தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: துறைகள் வாரியாக எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

மேலும் 'ரூ'பாய் என்பது எழுதும் மொழியின் குறியீடுதான். ஆங்கிலத்தில் எழுதும் போது ஆா்எஸ்(Rs) என்றுதான் குறிப்பிடுகிறோம், பல ஆவணங்களில், தனியாா் ஆவணங்களில் ஆா்எஸ் என்றுதான் குறிக்கிறோம். ரூபாய்க்கு இந்தி எழுத்து ஆா்-ல் ஒரு கோடு போட்ட குறியீடு இருப்பதை மறுக்கவில்லை. அதை பயன்படுத்த முடிந்தால் பயன்படுத்தலாம். அதை பெரிய விஷயமாக்க வேண்டியதில்லை.

என்னைப் பொருத்த வரையில் முதல் குறியீடு முக்கியமில்லை. அதற்குப் பின்னால் வரும் எண்கள்தான் முக்கியம். 0 வந்தால் என்ன மதிப்பு இருக்கிறது. அதற்கு பிறகு 1 கோடி வந்தால், அதன்பிறகு 1000 கோடி வந்தால்தான் அதற்கு மதிப்பு. எனவே குறியீடு முக்கியமல்ல என்றாா் .

குடும்ப அட்டை வைத்திருக்கிறீர்களா? இன்னும் ஒரு சில நாள்களே உள்ளன!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் குடும்ப அட்டைதாரா்கள் தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் வரும் 31-ஆம் தேதிக்குள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் விரல்ரேகை பதிவு செய்ய வேண்டும் என்று அந்தந்த மாவட்ட ஆ... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

யூடியுபர் சவுக்கு சங்கர் வீட்டில் துய்மைப் பணியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த சம்பவத்திற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். யூடியுபர் சவுக்க... மேலும் பார்க்க

பூண்டி நீர்த்தேக்க கொள்ளளவை உயர்த்த நீர்வளத்துறை திட்டம்!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவை 35 அடியிலிருந்து 37 அடியாக உயர்த்த திட்டமிட்டு வருவதாக நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர... மேலும் பார்க்க

மார்ச் 27, 28-ல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்!

மார்ச் 27, 28 தேதிகளில் தமிழகத்தில் வெப்பநிலை 2 -3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் இதனால் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொட... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலையத்தில் தகராறு: ஊழியர் அடித்துக் கொலை!

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணியாற்றும் ஊழியருக்கும் லாரி ஓட்டுநர் - கிளீனர் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.சூலூர் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் இருந்து அன்ன... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று த... மேலும் பார்க்க