செய்திகள் :

குறுக்கு வழி பயணத்தால் விபரீதம்: கிணற்றுக்குள் பாய்ந்த கார்... குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

post image

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் அருகில் உள்ள தீண்டோரி என்ற இடத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு கார் ஒன்று சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் விழுந்து 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். சுனில் தர்குடே என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெரியவர்களும் ஆறு குழந்தைகளும், திண்டோரியில் உள்ள ஒரு பயிற்சி மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றிற்கு காரில் சென்று இருந்தனர். இரவில் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்கள் வீட்டிற்கு காரில் புறப்பட்டனர்.

சுனில் காரை ஓட்டினார். அவர்களது ஊர் நிகழ்ச்சி நடந்த கிராமத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. காரில் சுனில் தர்குடே தவிர அவரது மனைவி ரேஷ்மா (27), மகள் குண்வந்தி (11), சுனிலின் மைத்துனி ஆஷா (32), ஆஷாவின் குழந்தைகள் ஸ்ரேயஷ் (11), ஸ்ராவணி (11), ஸ்ரத்தா (13) மற்றும் ஸ்ருஷ்டி (14), மற்றும் ஒரு உறவினரின் குழந்தையான சம்ரித்தி (7) ஆகியோர் இருந்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில் சுனில் வீட்டிற்கு வேகமாக செல்லும் நோக்கில் காரை மெயின் ரோடு வழியாக செலுத்தாமல் குறுக்கு வழியில் செலுத்தினார். சாலை முழுக்க கடுமையான இருட்டு இருந்தது. வழியில் கார் அவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்றது. இதில் சாலையோரம் இருந்த ஒரு கிணற்றின் சுவரின் மீது மோதி கார் 40 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்தது.

காரில் இருந்தவர்கள் உயிருக்கு போராடி கூச்சலிட்டனர். அவர்களது சத்தம் கேட்டு பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் கிணறு அதிக ஆழமாக இருந்ததாலும், இருட்டாக இருந்ததாலும் அவர்களால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். நீச்சல் வீரர்கள் கிணற்றுக்குள் குதித்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மின் விளக்கு வசதியுடன் கயிறு கட்டி காரை வெளியில் இழுத்தனர்.

ஆனால் அதற்குள் காரில் இருந்த 9 பேரும் பரிதாபமாக மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டனர். ஒரு குழந்தையின் உடல் காருக்குள்ளேயே இருந்தது. கிணறு ரோட்டிற்கு மிகவும் அருகில் இருந்தது. இதையடுத்து கிணற்றை மூடிபோட்டு பாதுகாப்பான முறையில் வைத்திருக்க தவறியதாக கிணற்று உரிமையாளர் ராஜேந்திரா மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து கிணற்றை மண் போட்டு நிரப்பிவிட்டனர்.

நெருங்கும் ட்ரம்ப் காலக்கெடு; ஈரான் மின் உற்பத்தி மையங்களை பாதுகாக்க மனிதச் சங்கிலி?

ஈரான் தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை இன்று மாலை 8 மணிக்குள் திறக்கவில்லையெனில் ஈரானில் உள்ள மின் உற்பத்தி மையங்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள... மேலும் பார்க்க

"GMTக்குப் பதில் மகாகால் ஸ்டாண்டர்ட் டைம்(MST)"- நேரக்கணக்கீட்டு முறையை மாற்ற கோரும் மத்திய அமைச்சர்

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் நகரில் இருக்கும் மகாகால் கோயில் மிகவும் பிரபலமான கோயில்.தர்மேந்திர பிரதான்சமீபத்தில் உஜ்ஜைன் நகரில் சர்வதேச நேரக் கணக்கீட்டு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து க... மேலும் பார்க்க

சிறப்புப் படை, 12 விமானங்கள், ஹெலிகாப்டர்கள்- ஈரானுக்குள் நுழைந்த அமெரிக்கா விமானியை மீட்டது எப்படி?

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஈரான் மீது அமெரிக்க படைகள் F-15E மூலம் குண்டுகளை வீசியது. அப்போது ஈரான் வான் பாதுகாப்பு தடுப்பு ஏவுகணை மூலம் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்த இரண்டு பே... மேலும் பார்க்க

"என் மகளின் கண்ணியமே எனக்கு முக்கியம்" - விவாகரத்து பெற்ற மகளை மேள தாளங்களுடன் அழைத்து வந்த தந்தை

உத்தரப்பிரதேசத்தில் கோர்ட்டால் விவாகரத்து வழங்கப்பட்ட மகளை ஆரவாரத்துடன் மேளதாளங்களுடன் தந்தை ஒருவர் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஞானேந்திர சர்மா. ஓய்... மேலும் பார்க்க

600 மைல் சென்று தாக்கும் ஏவுகணை தயார்: ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தும் அமெரிக்கா!

அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் இரண்டாவது மாதத்தில் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா கூட்டுப்படை நடத்தி வரும் வான்வெளித்தாக்குதலுக்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகி... மேலும் பார்க்க

வீட்டுப் பணியாளருக்கு உரிமையாளர் காட்டிய அன்பு; நெகிழ வைத்த வைரல் வீடியோ!

நவீன உலகில் இயந்திரத்தனமான வாழ்க்கைக்கு நடுவே, எளிமையான அன்பு இன்னும் உயிர்ப்புடன் இருப்பதைச் சில எளிய சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. சமீபத்தில் வைரலான இந்தச் செய்தி, ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கு... மேலும் பார்க்க