செய்திகள் :

கூட்டணி ஆட்சி: "ஸ்டாலினும், ராகுலும்தான் முடிவெடுக்கணும்" - ஐ.பெரியசாமிக்கு செல்வப்பெருந்தகை பதில்

post image

2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் பங்கு தர வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

தமிழகத்துக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் எம்.பிக்கள் உள்ளிட்டோர் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி வருகின்றனர்.

அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் ஐ.பெரியசாமி

இந்நிலையில் நேற்று (ஜன.11) திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக துணைப் பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, "ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது காங்கிரஸின் உரிமை. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதை எப்போதுமே நாங்கள் ஏற்றுக் கொண்டது இல்லை.

திமுகவைப் பொறுத்தவரை எப்போதுமே கூட்டணி ஆட்சி கிடையாது. அதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார்" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அமைச்சர் ஐ.பெரியசாமியின் கருத்துத் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "எல்லோருக்கும் ஒரு கருத்து இருக்கிறது. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். எங்கள் கட்சியில் இருப்பவர்கள் அவர்களுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை

கருத்துரிமை இருப்பதால் பேசுகிறார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க வேண்டியது தமிழ்நாட்டின் இந்திய கூட்டணியின் தலைவராக இருக்கக்கூடிய முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும்தான்" என்று பதிலளித்திருக்கிறார்.

ADMK: ``ராஜபாளையம் தொகுதியில் நான் போட்டியிட்டால் 100% வெற்றி" - நடிகை கௌதமி ஓப்பன் டாக்!

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் ... மேலும் பார்க்க

வர்த்தகர்கள் மீண்டும் Iran தலையெழுத்தை மாற்றுவார்களா? - 15 நாள்களைக் கடந்த போராட்டம் | Explained

ஓர் இரவு அனைத்தையும் மாற்றுமா? ஈரானில் மாற்றியிருக்கிறது... மாறியிருக்கிறது. கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலையில் இருந்து ஈரானில் பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. இதற்கு காரணம், முந்தைய நாள் உறங்கும்... மேலும் பார்க்க

கீழ்பாக்கம் மருத்துவமனை வளாகத்தில் ரௌடி வெட்டிக் கொலை; ஆளும் அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், பிரசவ வார்டின் எதிரே உறங்கிக்கொண்டிருந்த பிரபல ரௌடி ஆதி (20) இன்று அதிகாலை வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்ப... மேலும் பார்க்க

`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!

பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்க... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் போட்டியிடும் கவுன்சிலருக்கு ரூ.124 கோடி சொத்து! - 8 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரிப்பு

மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் சபாநாயகர் சகோதரனான மகரந்த் நர்வேகரின் சொத்து கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 20 மடங்கு அதிகரித்துள்ளது. மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர... மேலும் பார்க்க

அண்ணாவின் `முதல்’ வெற்றி - காங்கிரஸ் சரிவு தெரியும்; கம்யூனிஸ்ட் சரிந்தது ஏன்? | முதல் களம் - 01

`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அப்படியான தலைவர்களின் முதல் தேர்தலும் அதனை சுற்றி நடந்த முக்கிய சம்பவங்களும் சுவாரஸ்ய தகவல்களின் ... மேலும் பார்க்க