செய்திகள் :

கொழுக்குமலையில் 400 அடி பள்ளத்தாக்கில் குதித்து இளைஞர் தற்கொலை; காதல் தோல்வி காரணமா?

post image

வேலூர் மாவட்டம் காட்பாடி தண்ணீர் தொட்டி தெருவைச் சேர்ந்தவர் வரதராஜன், அவருடைய மகன் பரத் (வயது 21). இவர் சென்னை எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகக் கல்லூரியில் இறுதியாண்டு பட்டப்படிப்பு படித்து வந்தார்.

விடுமுறைக்கு அவர் தனது நண்பர்கள் 11 பேருடன் தேனி மாவட்டம், குரங்கணி மலை உச்சியில் உள்ள கொழுக்குமலைக்குச் சுற்றுலா வந்தார். கேரளா மாநிலம் சூரிய நெல்லிக்கு அருகில் உள்ளது இந்தக் கொழுக்கு மலை.

மேகங்களுக்கிடையில் சூரியன் உதிப்பதை நேருக்கு நேராகப் பார்க்க முடியும் என்பதால் பல மாநிலங்களிலிருந்து இளைஞர்களும் இங்கு வருகை புரிகின்றனர். நேற்று முந்தினம் இரவு சூரியநெல்லிக்கு வந்த பரத்தும் அவருடைய நண்பர்களும் இரவு தங்கி விட்டு காலையில் ஜீப்பில் கொழுக்குமலைக்குச் சென்றனர்.

நேற்று அதிகாலையில் அவர் தனது நண்பர்களுடன் சூரியநல்லியில் இருந்து ஜீப்பில் கொழுக்குமலைக்குச் சென்றார். காலை 6 மணியளவில் கொழுக்குமலையில் சிங்கப்பாறை என்ற இடத்தில் ஜீப்பை நிறுத்தி சூரிய உதயத்தை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

பரத் தனது நண்பர்களுடன் சூரிய உதயத்தைப் பார்த்து கொண்டிருந்தார். அவருடைய நண்பர்கள் பக்கத்தில் உள்ள  பள்ளமான பகுதியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். திடீரென பரத் அங்குள்ள சுமார் 400 அடி பள்ளத்தை நோக்கி குதித்தார். அதைச் சற்றும் எதிர்பாராத அவருடைய நண்பர்களும், சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இளைஞர் குதிக்கும் காட்சி
இளைஞர் குதிக்கும் காட்சி

உடனடியாக இதுகுறித்து கேரள மாநில போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே கேரள வனத்துறையினரும், தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்து பள்ளத்தில் விழுந்த பரத் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். சில மணி நேரத்துக்கு பிறகு அவர் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

பரத் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இரண்டு நாள்களுக்கு கொழுக்குமலைக்குச் சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாணவர் பரத் தற்கொலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

தஞ்சாவூர்: பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்பட்ட வீடு; கதறிய பெண்... என்ன நடந்தது?

ஓட்டு வீடு, பெண் ஒருவர் கதறி கொண்டு இருக்க ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்பகலில் அந்த வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிக் கொண்டிருந்தனர். மேற்கூறையில் ஓட்டை உடைத்து நொறுக்குகின்றனர். `அடப்பாவிகளா ஏண்... மேலும் பார்க்க

`என்னை போகவிடு' கெஞ்சிய கடற்படை அதிகாரியின் மனைவி; பாலியல் வன்கொடுமை; கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி

மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவை சேர்ந்தவர் அய்யாஸ் தாஜ்(26). இவருடன் கல்லூரியில் ஒன்றாக படித்த 24 வயது பெண் அதே ஊரில் வசித்து வந்தார். அவரது கணவர் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அப்பெண்ணின் கண... மேலும் பார்க்க

சென்னை: தங்க காசு மோசடி வழக்கில் பெண் இன்ஸ்பெக்டர் - பின்னணி விவரிக்கும் அதிகாரிகள்!

சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை கொளத்தூரைச் சேர்ந்த பிரபுமணி என்பவர் தொடர்பு கொண்டு, எங்களிடம் 4,500 ரூபாய் முதலீடு செய்தால் 15 நாள்களுக்குள் ஒரு கிராம் தங்கக் காசை கொடுப்போம் என கூறி... மேலும் பார்க்க

கோவை: 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சாட்சி விசாரணை 24ஆம் தேதி முதல் துவக்கம்

கோவை மாவட்டம் சூலூரில் கடந்த மே மாதம் 21ஆம் தேதி 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கார்த்திக் மற்றும் அவருக்கு உதவிய... மேலும் பார்க்க

`நான் சொல்பவர்களுடன், நீ உறவுகொள்ள வேண்டும்'- நிர்வாண புகைப்படம் எடுத்து மிரட்டல்; கதறும் மதுரை பெண்

மதுரையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அதன் பின் செய்தியாளார்களை சந்தித்து பேசிய இளம்பெண்,... மேலும் பார்க்க

வேலூர்: சிறுவன் இறப்பில் விலகிய மர்மம்; அடித்துக்கொன்ற கொடூர அத்தை; பகீர் கிளப்பும் `படுபாதக’ செயல்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி ஆஷா. இவர்களின் 6 வயது மகன் முகிலன். கடந்த 5 ஆண்டுகளாக மனைவி மற்றும் மகனைப் பிரிந்து வாழ்ந்துவந்த ராஜ... மேலும் பார்க்க