செய்திகள் :

கோவை: பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை; கைதான காவலர் பணியிடை நீக்கம்

post image

திருப்பூரைச் சேர்ந்தவர் மணிவேந்தன்(32). காவலரான இவர், கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட போத்தனூர் விசாரணை பிரிவு காவல் ஆய்வாளரின் வாகன ஓட்டுநராக உள்ளார்.

அவர் வேலை விஷயமாக நேற்று காலை பொள்ளாச்சிக்குச் சென்றார். பின்னர் காவலர் மணிவேந்தன் பொள்ளாச்சியில் இருந்து தனியார் பேருந்து மூலம் கோவை திரும்பினார். அப்போது அவர் காவலர் சீருடையில் இருந்தார்.

இந்நிலையில் அவர் பயணித்த பேருந்து கிணத்துக்கடவு நிறுத்தத்தில் நின்றபோது, கல்லூரி மாணவிகள் பலர் ஏறியுள்ளார்கள். அப்போது மணிவேந்தன் கோவையைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவிக்கு பேருந்தில் ஏற உதவி செய்தார். பின்னர் அந்த மாணவி பேருந்தில் ஏறி உள்ளே வந்தார்.

அச்சமயத்தில் பேருந்தில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அந்தக் கல்லூரி மாணவிக்கு உதவுவது போல் காவலர் மணிவேந்தன் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், செய்வது அறியாமல் திகைத்தார்.

பின்னர் மதுக்கரை காவல் எல்லையில் உள்ள ஒரு நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், மாணவி அதிலிருந்து கீழே இறங்கினார். அங்கு இருந்த சக மாணவிகளிடம் தெரிவித்தார். அவர்கள் காவலரைக் கண்டித்தனர். பின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக அந்த மாணவி தன் பெற்றோரிடமும் தெரிவித்தார். 

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவலர் பாலியல் சீண்டல், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மணிவேந்தனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் துறை ரீதியாக மணிவேந்தனைப் பணியிடை நீக்கம் செய்து மாநகர காவல் ஆணையாளர் கண்ணன் உத்தரவிட்டார்.

கோவை: வீடு புகுந்து வாலிபர் படுகொலை; கொலை செய்வதை வீடியோ பதிவு செய்த கொடூரம்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சுலபம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (22). இவர் நேற்றிரவு தனது நண்பர் விஷ்ணு (19) என்பவருடன் மது குடித்துள்ளார். பின்னர் இருவரும் சிக்கலாம்ப... மேலும் பார்க்க

கூட்டுக் குடும்பத்தில் மோதல்; அதிக சத்தத்துடன் மியூசிக்; சகோதரர்கள் சண்டையில் தந்தை, மகன் கொலை

மும்பை விக்ரோலியில் வசித்து வந்தவர் சுனில் விஷ்வகர்மா(40). இவர் ஒரே வீட்டில் தனது குடும்பம் மற்றும் மேலும் 3 சகோதரர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தார். இரவில் அதிக சத்தத்துடன் சுனில் பாட்டு கேட்டுள்ளார... மேலும் பார்க்க

ஏற்கெனவே 2 மனைவிகள், 5 குழந்தைகள் - பள்ளி மாணவியுடன் 3-வது திருமணத்துக்கு முயன்ற லாரி ஓட்டுநர் கைது!

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி ஒருவர் கடந்த மே மாதம் திடீரென மாயமானார். இதுகுறித்து அவரின் பெற்றோர், காட்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். அதன்பேரில், போலீஸா... மேலும் பார்க்க

தனியாக வசித்த மூதாட்டியைக் கொன்று நகை, பணம் திருட்டு - காதலனுடன் சேர்ந்து இளம்பெண் செய்த கொடூரம்!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள சாம்பார் என்ற இடத்தில் கம்லா தேவி (65) என்ற பெண் தனியாக வாழ்ந்து வந்தார். அவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டில் இருந்த ந... மேலும் பார்க்க

கேரள சிவசேனா செயலாளர் கொலை வழக்கு; குமரியில் இருவர் கைது; 3 பேரை தேடும் போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் கண்ணகோடு பகுதி அருகே இறந்த நிலையில் ஒருவரின் உடல் மிதப்பதாக பொதுமக்கள் கடந்த 31-ம் தேதி மார்த்தாண்டம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் அங்கு... மேலும் பார்க்க

தருமபுரி : அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிப்பு! - தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9 மாணவர்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தருமபுரிதருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே தொ.காணிகரஅ... மேலும் பார்க்க