செய்திகள் :

சத்தீஸ்கர்: பயணிகள் ரயில், சரக்கு ரயிலில் மோதி 11 பேர் பலி - என்ன நடந்தது?

post image

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள பிலாஸ்பூர்-கட்னி பிரிவில் லால் காடன் பகுதிக்கு அருகே செவ்வாய்க்கிழமை (நவ 4) கோர்பா பயணிகள் ரயில், நின்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், பயணிகள் ரயிலின் முன்பகுதி பெட்டிகள் முழுமையாக சேதமடைந்தது.

விபத்து நடந்த இடத்திலிருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், மோதலின் கடுமையான விளைவுகளைக் காட்டுகின்றன.

சத்தீஸ்கர் ரயில் விபத்து
சத்தீஸ்கர் ரயில் விபத்து

விபத்து நடந்த உடனேயே ரயில்வே அதிகாரிகள், உள்ளூர் நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உட்பட மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நொறுங்கிய பெட்டிகளுக்கு நடுவில் சிக்கி இருந்த பயணிகளை மீட்பு குழுவினர் கவனமாக மீட்டனர்.

மருத்துவக் குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இடிபாடுகள் காரணமாக உடனடியாக வெளியே வர முடியாமல் சிக்கியிருந்தவர்களுக்கு, ரயிலுக்குள் சென்று முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஒரு கைக்குழந்தை உட்பட பலரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட அறிக்கைகள், இது சிக்னல் கோளாறு அல்லது மனிதப் பிழை காரணமாக இருக்கலாம் எனக் குறிப்பிடுகின்றன.

சத்தீஸ்கர் ரயில் விபத்து
சத்தீஸ்கர் ரயில் விபத்து

இந்த மோதலால் மேல்நிலை மின்சார வயரிங் மற்றும் சிக்னல் அமைப்புகள் பெருமளவில் சேதமடைந்து, அந்தப் பாதையில் ரயில் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.

மின்சார அமைப்புகள் மற்றும் தண்டவாளங்களை சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரத்தில் சிறுத்தை வந்தது எப்படி? - விக்கிரவாண்டி டோல்கேட்டில் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி

விழுப்புரம் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை விக்கிரவாண்டி டோல்கேட்டுக்கு அருகே, இன்று அதிகாலை வராக நதியின் மேல் அமைந்திருக்கும் பாலத்தில் சிறுத்தை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அதைப் பார்த்த வாகன ஓட்டிகள், வ... மேலும் பார்க்க

தெலங்கானா கோர விபத்து: ஜல்லிகளில் புதைந்த பேருந்து; 20 பயணிகள் பலி - முதல்வர் இரங்கல்

தெலுங்கானா மாநிலம் தந்தூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி நேற்று இரவு தெலங்கானா அரசு பேருந்து புறப்பட்டது. அந்தப் பேருந்தில் 70 பயணிகள் பயணித்தனர். பேருந்து செவெல்லா மண்டலத்தில் உள்ள மிர்சாகுடா கிராமத்திற்க... மேலும் பார்க்க

கரூர்: எம் சாண்ட ஏற்றிச்சென்ற லாரி விபத்து; வடமாநில தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்; நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள கோடந்தூரில் செயல்பட்டுவரும் அரவிந்த் புளூ மெட்டல் கல்குவாரியில் தங்கி 20-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், இன்று அதிகாலை 5 ம... மேலும் பார்க்க

ஆந்திரா: வெங்கடேஷ்வரா கோயிலில் கூட்ட நெரிசலில்; பெண்கள், குழந்தைகள் உட்பட 10 பேர் பலி; என்ன நடந்தது?

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் அருகில் உள்ள காசிபுக்கா என்ற இடத்தில் இருக்கும் வெங்கடேஷ்வரா என்ற கோயிலில் நேற்று ஏகாதசி பண்டிகை கொண்டாடப்பட்டது.இதையடுத்து கோயிலில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: உயிரிழந்தர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவக் காப்பீடு; ஆறுதல் சொன்ன விஜய்

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி விஜய் மேற்கொண்ட பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், விஜய் தரப்பில் உயிரிழந்த குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல்படுத்தினார... மேலும் பார்க்க

ஆந்திரா பேருந்து தீ விபத்து: போதையில் பைக் ஓட்டிய இளைஞர்கள்தான் காரணமா? - போலீஸ் சொல்வது என்ன?

ஆந்திரா மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்ன தெகுரு என்ற இடத்தில் பெங்களூருவை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று அதிகாலையில் தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழந்தனர். பலர் பஸ்சில் இருந்து ஜன்னல் ... மேலும் பார்க்க