செய்திகள் :

சென்னை: டெல்லி நபரைச் சந்திக்க வந்தவருக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக பெண் நிர்வாகிகள்- போலீஸில் புகார்!

post image

நாமக்கல் மாவட்டம், பாப்பம்பாளையம், கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கோகில் ஆனந்தம் (45). இவர். பா.ஜ.க-வின் சமூக ஊடகப் பிரிவில் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். அதோடு ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரின் தோழியான பூங்குழலி, பா.ஜ.க-வின் நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் பூங்குழலி, தன்னுடைய காரை எடுத்துச் சென்றுவிட்டதாக சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் கோகில் ஆனந்தம் புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``நானும் பூங்குழலியும் பள்ளி பருவத்திலிருந்தே நண்பர்களாக இருந்து வருகிறோம். 26.03.2025-ஆம் தேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பூங்குழலி, சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி எனக்கு கிடைக்க பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி என்பவர் உதவுவதாகக் கூறியிருக்கிறார். அதோடு அவருக்குத் தெரிந்த முக்கிய நபர் டெல்லியிலிருந்து சென்னைக்கு வருகிறார். அதனால் அவரைச் சந்தித்துப் பேசினால் எம்.எல்.ஏ சீட் கிடைத்துவிடும் எனக் கூறியிருக்கிறார்.

பா.ஜ.க
பா.ஜ.க

அதைத் தொடர்ந்து என்னுடைய காரில் பூங்குழலி, தமிழ்ச்செல்வி, நான் என மூன்று பேரும் சென்னைக்கு 27.03.2026- ம் தேதி வந்து பெரியமேடு பகுதியில் உள்ள லாட்ஜில் இரண்டு அறைகளை எடுத்து மூன்று பேரும் தங்கினோம். அப்போது பூங்குழலியும் தமிழ்ச்செல்வியும் இந்த லாட்ஜ்ஜில் அறை சரியில்லை அதனால் வேறு லாட்ஜை பார்த்து விட்டு வருவதாகக் கூறி என்னுடைய காரை எடுத்துக் கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர்கள் வரவில்லை. இருவரையும் செல்போனில் தொடர்பு கொண்ட போதும் பதிலளிக்கவில்லை. எனவே என்னுடைய காரை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் பெரியமேடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரை எடுத்துச் சென்ற பூங்குழலி, தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு போலீஸார் கேட்டதற்கு, சென்னை வந்து என்ன நடந்தது என்பதை சொல்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்த பிறகே உண்மை தெரியவரும் என பெரியமேடு போலீஸார் தெரிவித்தனர்.

திருவள்ளூர்: தவெக மா.செ, பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் புகார் - அவரின் மனைவி சொல்வதென்ன?

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தவெக-வின் மகளிரணி நிர்வாகி ஒருவர், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது, ``கடந்த 8.6.2025-... மேலும் பார்க்க

குவைத்: அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் தாக்குதல்; முதுகுளத்தூர் வாலிபர் பலி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது அணிக்குருந்தன் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகன் சந்தான செல்வம் (37).இவருக்கு கெளசல்யா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள... மேலும் பார்க்க

சென்னை: மனைவியின் கழுத்தில் கத்திரிக்கோல்; போதை கணவரிடம் போலீஸ் விசாரணை!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரின் மனைவி சுகன்யா (31). கார்த்திக் வீட்டில் நேற்றிரவு பயங்கர சத்தம் கேட்டது. அதனால் அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்கள் என்னவென்று வ... மேலும் பார்க்க

`மனைவியிடம் சொல்வேன்'- மிரட்டிய காதலி; கொன்று உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த கடற்படை அதிகாரி

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவீந்திரா என்பவருக்கு டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் மோனிகா என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் 2021ம் ஆண்டு அறிமுகமாகிக்கொண்டனர். அடிக்கடி விசாகப்பட்டினத்தின் பல பகுத... மேலும் பார்க்க

உத்தரப்பிரதேசம்: கொலையில் முடிந்த வாக்குவாதம்; வியாபாரியின் தலையை வெட்டி எடுத்த நபர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி அருகில் உள்ள பார்சவால் என்ற கிராமத்திற்கு பப்லு என்பவர் ஐஸ்கிரீம் விற்பனை செய்ய சென்றார். அங்கு ஐஸ்கிரீம் விற்பனை செய்யக்கூடாது என்று சங்கர்(50) என்பவர் தெரிவித்தார். ஆன... மேலும் பார்க்க

தகாத ஆசைக்கு இணங்கமறுத்த பணிப்பெண்; குத்திக் கொலைசெய்துவிட்டு ஆந்திராவிற்கு ஓடிய மும்பை டிவி நடிகர்!

மும்பை மீரா ரோடு பகுதியில் வசித்து வருபவர் ஆசிஷ் மேஸ்ரம். டிவி நடிகரான ஆசிஷ் வீட்டில் சுமன் காம்ப்ளே என்ற 37 வயது பெண் வீட்டு வேலை செய்து வந்தார். அவர் வீட்டில் வேலை செய்தபோது அடிக்கடி ஆசிஷ் பாலியல் த... மேலும் பார்க்க