செய்திகள் :

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

post image

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவர் மூலம் நீலாங்கரையைச் சேர்ந்த இன்ஜினீயர் பீட்டர் அறிவரசன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.

பின்னர் பீட்டர், உமாவிடம், மகளுக்கு அந்த மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார். அதற்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனப் பீட்டர் கூற, உமாவும் ஓகே கூறியிருக்கிறார். இதையடுத்து 30.05.2025-ம் தேதி 2 தவணைகளாக 10 லட்சம் ரூபாயை பீட்டர் அறிவரசனிடம் உமா கொடுத்திருக்கிறார். இதையடுத்து எப்படியும் கல்லூரியில் சீட் கிடைத்துவிடும் எனப் பீட்டர் நம்பிக்கை கொடுத்து வந்திருக்கிறார்.

கைது
கைது

இந்தநிலையில் கல்லூரியில் சீட் உறுதியாகி விட்டது. அதனால் உடனடியாக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறிய பீட்டர், 1.65 லட்சம் ரூபாயைக் கேட்டிருக்கிறார். அதனால் சந்தோஷமடைந்த உமா, 01.08.2025-ம் தேதி பீட்டரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் பீட்டர் வாக்குறுதி அளித்தபடி கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதனால் கொடுத்த பணத்தைத் திரும்பத் தரும்படி உமா கேட்க, அவரை மிரட்டியிருக்கிறார் பீட்டர். இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் உமா, இன்ஜினீயர் பீட்டர் மீது மோசடி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பீட்டரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் உமாவிடம் பணம் வாங்கி ஏமாற்றியதை பீட்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீட்டர், சொந்தமாக பிசினஸ் செய்து வந்திருக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தனக்குத் தெரிந்தவர்களிடம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

உமா கொடுத்த புகாரில் கைதான பீட்டர், இன்னும் சிலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் தொடர்ந்து பீட்டரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க

`பொண்டாட்டினு கூட பார்க்காம அசிங்கமா வீடியோ எடுத்து.!’ அதிர வைக்கும் வரதட்சனை புகார்; விபரீத முடிவு

விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஏ பட்டதாரியான பிரியங்காவுக்கும், புதுச்சேரி பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயனுக்கும் கடந்த 2025 அக்டோபர் 31-ம் தேதி திரும... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவுக்கு இடையூறு; 4 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து கொன்ற கொடூரன்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் இருளப்பபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா . இவருக்கும் ராஜா என்பவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. ராஜா இறந்து விட்டதால், தற்போது அந்தக்குழந்தை ராஜாவின் தாயிடம் வ... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகை: முதியவர்களைக் குறிவைத்து ரூ. 500ஐ அமுக்கிய ரேஷன்கடை ஊழியர்; அதிகாரிகள் விசாரணை

தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசாக குடும்ப அட்டைக்கு ரூ.3000 மற்றும் ஒரு கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சீனி மற்றும் வேட்டி, சேலை அறிவித்தது. இந்தப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப... மேலும் பார்க்க