செய்திகள் :

சென்னை: பிரபல மருத்துவக் கல்லூரியின் பெயரைச் சொல்லி ரூ.11 லட்சம் மோசடி; இன்ஜினீயர் சிக்கியது எப்படி?

post image

சென்னை, பாலவாக்கம், கரீம் நகரைச் சேர்ந்தவர் உமா (50). இவரின் மகள், உயர்கல்வி படிக்க சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்திருந்தார். அப்போது உமாவுக்குத் தெரிந்த குடும்ப நண்பர் ஒருவர் மூலம் நீலாங்கரையைச் சேர்ந்த இன்ஜினீயர் பீட்டர் அறிவரசன் என்பவர் அறிமுகமாகியிருக்கிறார்.

பின்னர் பீட்டர், உமாவிடம், மகளுக்கு அந்த மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாக உறுதியளித்திருக்கிறார். அதற்கு 10 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனப் பீட்டர் கூற, உமாவும் ஓகே கூறியிருக்கிறார். இதையடுத்து 30.05.2025-ம் தேதி 2 தவணைகளாக 10 லட்சம் ரூபாயை பீட்டர் அறிவரசனிடம் உமா கொடுத்திருக்கிறார். இதையடுத்து எப்படியும் கல்லூரியில் சீட் கிடைத்துவிடும் எனப் பீட்டர் நம்பிக்கை கொடுத்து வந்திருக்கிறார்.

கைது
கைது

இந்தநிலையில் கல்லூரியில் சீட் உறுதியாகி விட்டது. அதனால் உடனடியாக கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறிய பீட்டர், 1.65 லட்சம் ரூபாயைக் கேட்டிருக்கிறார். அதனால் சந்தோஷமடைந்த உமா, 01.08.2025-ம் தேதி பீட்டரின் வங்கிக் கணக்கிற்குப் பணத்தை அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் பீட்டர் வாக்குறுதி அளித்தபடி கல்லூரியில் சீட் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்திருக்கிறார்.

அதனால் கொடுத்த பணத்தைத் திரும்பத் தரும்படி உமா கேட்க, அவரை மிரட்டியிருக்கிறார் பீட்டர். இதையடுத்து நீலாங்கரை காவல் நிலையத்தில் உமா, இன்ஜினீயர் பீட்டர் மீது மோசடி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பீட்டரிடம் விசாரித்தனர்.

விசாரணையில் உமாவிடம் பணம் வாங்கி ஏமாற்றியதை பீட்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பீட்டர், சொந்தமாக பிசினஸ் செய்து வந்திருக்கிறார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் தனக்குத் தெரிந்தவர்களிடம் கல்லூரியில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

உமா கொடுத்த புகாரில் கைதான பீட்டர், இன்னும் சிலரை ஏமாற்றியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதனால் தொடர்ந்து பீட்டரிடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

காதல் கணவனை கைவிட்டுவிட்டு வேறொருவருடன் திருமணம் - பழிவாங்க பெண் ஆட்டோ டிரைவரை சுட்டுக்கொன்ற காதலன்

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி என்ற இடத்தில் அனிதா செளதரி என்ற பெண் கடந்த 4ம் தேதி இரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ டிரைவராக கருதப்பட்ட அனிதா இரவில் ஆட்டோ ஓட்டிச்சென்று கொண்... மேலும் பார்க்க

சென்னை: பால்கோவாவில் மயக்க மருந்து; தாலிச் செயினைத் திருடிய பெண் - சிக்கியது எப்படி?

சென்னை, திருவல்லிக்கேணி, சின்னப்பா தெருவைச் சேர்ந்தவர் மாலத்திரி (44). இவர் கார் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுஜாதா. இவர், வீட்டிலிருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். 0... மேலும் பார்க்க

All India Pregnant Job: குழந்தையில்லாத பெண்களை கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம் - சிக்கிய மோசடி கும்பல்

பீகாரில் இப்போது புது வகையாக மோசடி பரவி வருக்கிறது. சோசியல் மீடியாவில் All India Pregnant Job என்ற பெயரில் புதுமையான விளம்பரம் ஒன்று வைரலாகி இருக்கிறது. இந்த விளம்பரத்தை பார்த்து அந்த வேலைக்கு விண்ணப்... மேலும் பார்க்க

சபரிமலை கோயில் தங்கம் கொள்ளை வழக்கு: தேவஸ்தான தந்திரி கண்டரரு ராஜீவர் கைது! - என்ன நடந்தது?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலகர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக... மேலும் பார்க்க

சென்னை: நகைக்காகக் பெண் கொலை - இளைஞர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சென்னை, அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55). இவரின் மனைவி அமுதா (53). கடந்த 8-ம் தேதி மாலை சீனிவாசனின் வீட்டிலிருந்து ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அதோடு வீட்டுக்குள் இருந்து புகையும... மேலும் பார்க்க

திண்டுக்கல்: ஜாமீனில் வந்த 21 நாள்களில் கணவன் - மனைவி வெட்டி படுகொலை; பின்னனி என்ன?

திண்டுக்கல் யாகப்பன்பட்டியைச் சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது 41). மீன் வியாபாரி. இவர் நேற்று கொசவபட்டியில் புதிதாக மீன் கடை வைப்பதற்காக இடம் பார்த்துவிட்டு அவரது மோட்டார் சைக்கிளில் நத்தத்திலிருந்து திண்டு... மேலும் பார்க்க