செய்திகள் :

சென்னை புத்தகக் காட்சி நிறைவு; இவ்வாண்டு அதிகம் விற்பனையான முதல் 5 புத்தகங்கள் என்னென்ன தெரியுமா?

post image

தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில் 49 வது சென்னை புத்தகக் காட்சி 8 ஆம் தேதி தொடங்கியது. தொடங்கிய நாள் முதலே நூல் வெளியீடுகளும், இலக்கிய அமர்வுகளும், கலை நிகழ்ச்சிகளும் எனப் புத்தகக் காட்சியே களைகட்டியது.

புத்தகக் காட்சியில் வாங்கப்பட்ட அனைத்துப் புத்தகங்களுக்கும் சிறப்புத் தள்ளுபடியும் வழங்கப்பட்டது. 13 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த புத்தகக் காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது.

இந்த 49 வது புத்தகக் காட்சியில் சில பதிப்பகங்களும் அவற்றில் இந்த ஆண்டு அதிக விற்பனையான 5 புத்தகங்களைப் பற்றிப் பார்க்கலாம்..!

முதலாவது நமது விகடன் பிரசுரம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை நன்றாகவே இருந்ததாகவும், எப்போதும் போல சு. வெங்கடேசன் எழுதிய வேள்பாரி, காவல் கோட்டம் ஆகிய நூல்கள் இந்த ஆண்டும் நன்கு விற்பனையாகியதாகவும் தெரிவித்தனர்.

விகடன் பிரசுரம்
விகடன் பிரசுரம்

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் விகடன் பிரசுரத்தில் அதிக விற்பனையான ஐந்து புத்தகங்கள் பின்வருமாறு,

1. இயக்குநர் மாரி செல்வராஜ் எழுதிய சம்படி ஆட்டம்,

2. இயக்குநர் பிரேம் குமாரின் மெய்யழகன் கதை,

3. வெ.நீலகண்டன் எழுதிய ஸ்டார்ட் அப் ஸ்டார்ஸ்,

4. சு.வெங்கடேசன் எழுதிய காலத்தின் மீது எரியும் கல்,

5. இயக்குநர் இரா. சரவணன் எழுதிய சங்காரம்.

ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இந்த ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகங்களின் முன்பக்க அட்டைகள் பேசுபொருளாகவும் ஆகியிருக்கின்றன என்றும் பதிப்பகத்தார் தெரிவித்தனர்.

நீலம் பதிப்பகம்
நீலம் பதிப்பகம்

நீலம் வெளியீடாக இந்த ஆண்டு 23 புத்தகங்கள் சிறப்பு அழைப்பாளர்களைக் கொண்டு வெளியிடப்பட்டுள்ளதாக நீலம் புத்தக விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு நீலம் பதிப்பகத்தில் அதிக விற்பனையான முதல் ஐந்து புத்தகங்கள்,

1. கேரளத்தின் மறைக்கப்பட்ட வரலாறு

மலையாள நூலான இது தமிழில் சுஜா ராஜேஷ் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது.

2. உப்பளத்தான்

அறிமுக எழுத்தாளரான ஆறு பேச்சிபாண்டியன் எழுதிய நாவல்

3. யானும் ஒரு சித்தனடா

என்.டி ராஜ்குமார் கவிதைகளின் முழுத் தொகுப்பு

4. மணிபல்லவம்

வாசுகி முருகவேல் எழுதிய நாவல்

5. மராத்வாடா: தலித் சமையலறை

மராத்தியிலிருந்து சா.முத்துக்குமாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வாசகர்களும் குறிப்பாக இளைஞர்களும் இந்த ஆண்டு அதிகம் வருகை புரிந்தார்கள் எனவும் ஜெயமோகனின் அறம் மற்றும் லதாவின் 'கழிவறை இருக்கை' புத்தகங்கள் எப்போதும் போல இந்த ஆண்டும் அமோக விற்பனை ஆகி உள்ளன என விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

பனுவல் புத்தக நிலையம்
பனுவல் புத்தக நிலையம்

பனுவல் புத்தக நிலையத்தில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அதிக விற்பனையான ஐந்து புத்தகங்கள்,

1. எழுத்தாளர் லதா எழுதிய கழிவறை இருக்கை,

2. க்ரிஷ் பாலாவின் 'மெல்ல செத்து மீண்டும் வா' என்ற கவிதை தொகுப்பு.

3. ஃபிரான்ஸ் காஃப்கா எழுதிய உருமாற்றம் என்ற உலகப் புகழ்பெற்ற குறுநாவல்.

4. ஜெர்மன் எழுத்தாளர் ஹெர்மன் ஹெஸ்ஸேவின் புகழ்பெற்ற நாவல் சித்தார்த்தன்,

5. லியோ டால்ஸ்டாயின் 'இரண்டு கிழவர்கள்'.

வருடா வருடம் எங்கள் பதிப்பகத்தில் பலதரப்பட்ட வாசகர்களின் வரவேற்புடன் புத்தக விற்பனை சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. எப்போதும் போல இந்த வருடமும் ஜெயமோகன், பெருமாள் முருகன் ஆகியோரின் புத்தகங்கள் நன்கு விற்பனையாகியுள்ளன.

காலச்சுவடு
காலச்சுவடு

30க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இந்த அரங்கில் வெளியிடப்பட்டதாகவும் விற்பனையாளர் நம்மிடம் கூறினார்.

காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான முதல் ஐந்து புத்தகங்கள்

1. புக்கர் பரிசு பெற்ற பானு முஸ்தாக்கின் 'ஒரு முறை பெண்ணாகி வா கடவுளே' புத்தகம். சகாதேவன் என்பவரால் மொழிபெயர்க்கப்பட்ட நூல்.

2. தி. ஜானகிராமனின் கவிதை தொகுப்பான ரசிகரும் ரசிகையும் என்ற புத்தகம்

3. இசைப்பட வாழ்தல்

எழுத்தாளர் கிருபாஜி அவர்களால் எழுதப்பட்ட தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம்.

4. டச்சு மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட உன் கதை, என் கதை.

5. சீன எழுத்தாளர் சூ.டிஷானின் மெட்ராஸ் வணிகரின் சீன மனைவி என்ற தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட புத்தகம்.

இந்த ஆண்டு புத்தகக் காட்சியை முன்னிட்டு 150-க்கும் மேற்பட்ட புதிய தலைப்புகளி்ல் புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். மறுபதிப்பாக 175 நூல்கள் எனப் புதியதும், பழையதுமாக 350-க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்டு வந்திருக்கிறோம்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மக்களின் வருகை அதிகளவில் இருந்தது என விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் அதிக விற்பனையான முதல் 5 புத்தகங்கள்

1. புத்தகத் திருவிழாப் பேருரைகள் - ஐஏஎஸ் அதிகாரி இறையன்பு அவர்களின் புத்தகக் காட்சிப் பேருரைகளின் தொகுப்பு

2. மிட்டாய் நினைவுகள்

சியாமளா ரமேஷ்பாபு எழுதிய புத்தகம் இது

3. 'காலனிய தமிழகத்தில் திசை மாறிய இசை' - எஸ் ஜெயசீல ஸ்டீபன் எழுதிய மொழிபெயர்ப்பு நூல்

4. வாழ்க்கை மீதான பேராவல்

வான்காவின் வாழ்க்கை நாவல் வடிவில் எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது.

5. பிரபாஹரன் ஜெ. மூணாறு அவர்களின் 'மலக்காடு' நாவல் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

வேங்கைநேரி: `அந்தப் புத்தகம் எனக்குள் கடத்திய வலி...' - இளம் எழுத்தாளர் நிகேஷ்

49-வது சென்னை புத்தகக் காட்சி ஒரு வாரத்தைக் கடந்து தற்போது நிறைவடைந்துள்ளது. வாசகர்களின் நிறைவு கட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக வேங்கைநேரி நாவல் வ... மேலும் பார்க்க

Chennai Book Fair : கருநாக்கு, முள்ளிப்புல்... மிஸ் பண்ணக் கூடாத 5 கவிதைத் தொகுப்புகள்!

கருநாக்கு கருநாக்கு - முத்துராச குமார்முத்துராச குமாரின் படைப்பு நிலத்தையும் தொன்மங்களையும் மையமிட்டு எழுந்தாலும், எந்த இடத்திலும் நிலப்பெருமிதம் கொள்ளாமல், நிலத்தின் மீதிருக்கும் முரண்பாடுகளையும், சா... மேலும் பார்க்க

`சுவடியியல் ஒரு பரந்து பட்ட உலகம்.!' - எழுத்தாளர் ய.மணிகண்டன்

49-வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடந்து கொண்டிருக்கிறது.இந்தப் புத்தகக் காட்சியில் எழுத்தாளரும் நூல் பதிப்பியல் துறையில் நிபுணருமான சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழி ... மேலும் பார்க்க

``எழுத்துக்கள், சமத்துவ சமூகத்தை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும்" - எழுத்தாளர் புனித ஜோதி

49 ஆவது சென்னை புத்தகக் காட்சி வாசகர்களின் அமோக வரவேற்புடன் தற்போது நடைபெற்று வருகிறது. நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியமாக புத்தக வெளியீடுகளும், புத்தக விற்பனையும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இல்லத்தரசி... மேலும் பார்க்க

`யார் சார் இப்ப ரேடியோ கேக்குறாங்க?' - `வானொலி' புத்தகங்களை பரிந்துரைக்கும் தங்க.ஜெயசக்திவேல்

49-வது சென்னை புத்தகக் காட்சி தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாசகர்களின் இறுதிகட்ட புத்தக நுகர்வும், புத்தக விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் காட்சியில் வானொலித... மேலும் பார்க்க

Chennai Book Fair : பராசக்தி தடை, ஜல்லிக்கட்டு கிளர்ச்சி எனும் சூழ்ச்சி... தவறவிடக்கூடாத 5 நூல்கள்!

பராசக்தி தடைபராசக்தி தடை - கடற்கரய் மத்தவிலாச அங்கதம்பராசக்தி என்றவுடன் இயல்பாகவேஒரு பரபரப்பும் பரவசமும் தொற்றிக்கொள்ளும். அந்தப் பரபரப்பை இன்னும் கூடுதலாக்க ‘பராசக்தி தடை’ என்ற புத்தகத்தை நமக்கு கொடு... மேலும் பார்க்க