செய்திகள் :

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

post image

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அப்பெண் கூச்சலிட்டதால், ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அந்தப் பெண்ணிடம் ரயில்வே போலீஸார் விசாரித்ததில், தன்னுடைய பெட்டியில் பயணித்த முதியவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த, திருவள்ளூரைச் சேர்ந்த அருளானந்தம் (63) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: திமுக முன்னாள் எம்.பி-யின் காரை சேதபடுத்திய வழக்கு - தலைமறைவான அதிமுக நிர்வாகி!

சென்னை வேளச்சேரி செக் போஸ்ட் நேரு நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரன். இவர் தி.நகர் ஹபிபுல்லா சாலையில் தி.மு.க-வின் முன்னாள் எம்.பி ஜெயதுரைக்குச் சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனையில் மேலாளராகப் பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா. சுனில் குமார் வழக்... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டாவில் இளம்பெண்ணுக்கு ஆபாச வீடியோ - இளைஞரைத் தட்டித்தூக்கிய சைபர் க்ரைம் போலீஸ்!

சென்னை, போரூர் பகுதியில் 35 வயதான இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரைப் பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். 1... மேலும் பார்க்க

கோவை கல்லூரி மாணவி மீது கத்தியால் குத்தி தாக்குதல் - சக மாணவன் வெறிச் செயல்

கோவை சத்தி உள்ள தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு 17 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அதே வகுப்பில் ஹர்ஷவர்தன் என்கிற 18 வயது மாணவர் படித்து வருகிறார். ஹர்ஷவர்தன் மாணவ... மேலும் பார்க்க

குஜராத்: 33 கிராமங்களுக்காக ரூ.21 கோடிக்கு கட்டிய தண்ணீர் தொட்டி- திறக்கப்படுவதற்கு முன்பே இடிந்தது!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் உள்ள தட்கேஷ்வர் என்ற கிராமத்தில் மாநில அரசு, 33 கிராமங்களுக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக ரூ.21 கோடியில் 9 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் 15 மீட்டரில் பிரம்மாண்... மேலும் பார்க்க

நெல்லை: சாலையில் தூக்கி வீசப்பட்ட ஆண் சிசுவின் சடலம்; நாய் கவ்விச் சென்ற அவலம்; பின்னணி என்ன?

நெல்லை, மேலப்பாளையம் அருகில் உள்ளது மேலநத்தம். இங்கு பழைய அரிசி ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலைக்குச் செல்லும் சாலையின் ஓரத்தில் தெருநாய் ஒன்று சிவப்பு நிறத் துணி சுற்றப்பட்ட ஒரு பார்சலை கவ்விச் சென்று வாய... மேலும் பார்க்க