செய்திகள் :

சேலம்: ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை; கைதுசெய்யப்பட்ட முதியவர்!

post image

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி அதிவிரைவு ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின் முன்பதிவுப் பெட்டியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் பயணம் செய்தார். அந்த ரயில் நேற்று அதிகாலை சேலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்தப் பெட்டியில் பயணம் செய்த முதியவர் ஒருவர் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து அப்பெண் கூச்சலிட்டதால், ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அந்தப் பெண்ணிடம் ரயில்வே போலீஸார் விசாரித்ததில், தன்னுடைய பெட்டியில் பயணித்த முதியவர் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த முதியவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த இளம்பெண்ணுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த, திருவள்ளூரைச் சேர்ந்த அருளானந்தம் (63) என்பவரை போலீஸார் கைதுசெய்தனர். ஓடும் ரயிலில் இளம்பெண்ணுக்கு முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம் கடந்த உறவு; இடையூறாக இருந்ததாக குழந்தையை சித்ரவதை செய்த தாய் - தருமபுரி அதிர்ச்சி!

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் எழிலரசி, கணவருடன் ஏறட்ட கருத்து வேறுபடு காரணமாக 3 வயது பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார்.கைதுஇந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த அய்யப்பன் எ... மேலும் பார்க்க

திருச்சி: அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் மீட்பு - திருச்சி போலீஸ் அதிரடி!

திருச்சி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி விக்னேஷ் - சுகன்யா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், சுகன்யாவிடம் மருத்துவமனைக்கு வந்த பெண் ஒருவர் பேசி பழகி, பி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: இளைஞர்களைக் குறிவைத்து போதை ஊசிகள் விற்பனை; மூவரைக் கைதுசெய்த போலீஸ்!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்துவதோடு அதனை இளைஞர்களை குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில், குற்... மேலும் பார்க்க

கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.... மேலும் பார்க்க

`விஷத்தின் சுவை என்ன?' - சிறுமிகளின் விபரீத எண்ணத்தில் பறிபோன 4 உயிர்; நடந்தது என்ன?

பீகார் மாநிலம் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஹஸ்புரா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மோடி பிகா என்ற இடத்தை சேர்ந்த 4 மைனர் பெண்கள் விஷம் குடித்து உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் 12 முதல் 15 வயதுட்ப... மேலும் பார்க்க

பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த காதலி; நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற காதலன்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் எம்.பி.ஏ.படித்து வந்த 24 வயது பெண் தனது தந்தையுடன் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்காக சென்றார். வேலை முடிந்தவுடன் தனது தந்தையிடம் தனது நண்பர் பியூஷ் தனோடியாவின் ... மேலும் பார்க்க