செய்திகள் :

ஜப்பானில் புதிய வகை `நீல சாமுராய்' ஜெல்லிமீன் கண்டுபிடிப்பு - மாறிவரும் கடல் நீரோட்டம் காரணமா?

post image

ஜப்பானின் வடக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை நீல நிற 'சாமுராய்' ஜெல்லிமீன், கடல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. '

ஜப்பானின் செண்டாய் வளைகுடா பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்த ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் யோஷிகி ஓச்சியாய் தற்செயலாக இந்த அரிய வகை உயிரினத்தைக் கண்டறிந்துள்ளார்.

கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த ஜெல்லிமீனை அவர் கவனித்திருக்கிறார். வெப்பமண்டல கடற்பகுதிகளில் காணப்படும் இந்த வகை உயிரினங்கள், குளிர் மிகுந்த பகுதியில் தென்பட்டது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறது.

அதன் வடிவம் மற்றும் நிறம் வழக்கமான ஜெல்லிமீன்களில் இருந்து மாறுபட்டிருந்ததால், அதனை அவர் ஆய்வுக்காக சேகரித்துள்ளார்.

முதலில் இது வழக்கமான 'போர்த்துகீசிய மேன்-ஆஃப்-வார்' வகை என்று கருதப்பட்டாலும், டி.என்.ஏ பரிசோதனை மற்றும் உடல் அமைப்பு ஆய்வுகள் மூலம் இது ஒரு தனித்துவமான புதிய இனம் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Blue samurai jellyfish
Blue samurai jellyfish

இந்த வெப்பமண்டல உயிரினம் குளிர் மிகுந்த வடக்குப் பகுதிக்கு எப்படி வந்தது என்பது குறித்த ஆய்வில், சில ஆச்சரிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடல் நீரோட்ட மாதிரி சோதனையில் (Ocean current simulations), குரோஷியோ நீரோட்டம் வடக்கு நோக்கி நகர்ந்ததே இதற்கு முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.​

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில், இந்த நீரோட்டம் சுமார் இரண்டு டிகிரி வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் வெப்பமண்டல உயிரினங்கள் குளிர் பிரதேசங்களுக்கு இடம் பெயரும் சூழல் உருவாகியுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகப் பார்க்கப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்.

பார்ப்பதற்கு அழகான பலூன் போல காட்சியளித்தாலும், இவை மிகவும் ஆபத்தானவை என கூறப்படுகிறது.

இவற்றில் இருக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த செல்கள் சிறிய மீன்களை வேட்டையாடப் பயன்படுகின்றன. மனிதர்கள் தவறுதலாக இவற்றைத் தொட்டால் கடும் வலி, தோல் எரிச்சல் மற்றும் தடிப்புகள் ஏற்படும். சில நேரங்களில் தீவிர விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

`பாட்டு கேட்டால் மாடுகள் அதிகம் பால் கறக்குமா?' - அறிவியல் சொல்லும் உண்மை இதுதான்!

மனிதர்களுக்குத் தான் இசை ரசனை இருக்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களுக்கும் இசை மீது ஒரு தனி ஈர்ப்பு இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? குறிப்பா... மேலும் பார்க்க

மனிதர்களைப் போல பூச்சிகளுக்கும் மன அழுத்தம் ஏற்படும்; ஆய்வில் வெளியான தகவல்

எறும்புகள், தேனீக்கள், வண்டுகள் என சிறய வகை பூச்சிகளுக்கும் மனிதர்களைப் போலவே வலி, மகிழ்ச்சி மற்றும் மன அழுத்தம் போன்ற உணர்வுகள் இருக்கலாம் என அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.பூச்சிகள், உள்ளுணர்வு அட... மேலும் பார்க்க

குரல் இனிது... ஆனால் குணம்? - ராஜதந்திரிகளான குயில்களின் மறுபக்கம்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

Amur Falcon: 150 கிராம்தான் எடை; இந்தியா டு சோமாலியா - 5 நாள்களில் 5000 கி.மீ பயணித்த அமூர் பருந்து

பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கிலோமீட்டர் வலசை செல்வதை நாம் அறிவோம். இந்த வலசை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு சாகசங்கள் நிறைந்தது, சவாலானது, அதீத பொறுமையையும் உழைப்பையும் விடா முயற்சியையும்... மேலும் பார்க்க

சீனா: "இந்த மாத்திரை சாப்பிட்டால் 150 ஆண்டுகள் வாழலாம்" - சீன நிறுவனத்தின் கண்டுபிடிப்பு!

சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் நடந்த ராணுவ அணிவகுப்பில் கலந்துகொண்ட ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நீண்ட நாட்களுக்கு உயிர் வாழ்வதற்கான ஆராய்ச்சிகள் குறித்து பேசியதாக பரபரப்பாக பேசப்... மேலும் பார்க்க

பாகுபலி ராக்கெட்: `இந்தியாவுக்கு மற்றொரு பெருமை' - விண்ணில் வென்ற செயற்கைகோள் குறித்து இஸ்ரோ தலைவர்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மாலை 5.26 மணிக்கு CMS-03, LVM3-M5 செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு எல்.வி.எம் 3 - எம்5 ராக்கெட் விண்ணை நோக்கிப் புறப்பட்டது.43.5 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் 18 ஆயிரம்... மேலும் பார்க்க