செய்திகள் :

`தூங்கிவிட்டேனாம்’ கேக் வாங்கி சர்ப்ரைஸ் செய்ய நினைத்த கணவன் - வைரலான மனைவியின் `பிறந்தநாள்’ போஸ்ட்

post image

மனைவி மற்றும் காதலியின் பிறந்தநாளை ஞாபகம் வைத்திருக்காத ஆண்கள் பெண்களிடம் கடுமையாக வாங்கிக்கட்டிக்கொள்வது வழக்கம். ஹரியானா மாநிலத்தில் தனது மனைவியின் பிறந்தநாளை நினைவில் வைத்திருந்து, அதனை கொண்டாட நினைத்த கணவனின் திட்டம் உறக்கத்தால் கெட்டுப்போனது.

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த சோகம் என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளில் அவருக்கு ஆச்சரியம் கொடுக்க நினைத்தார். இதற்காக மனைவிக்கு தெரியாமல் கேக் மற்றும் சில அலங்கார பொருட்களை வாங்கி வந்து பிரிட்ஜில் வைத்தார்.

இரவு 9.30 மணிக்கு அவரது மனைவி உறங்கிவிட்டார். அதன் பிறகு சோகம் இரவு 12 மணி வரை டிவி பார்க்கலாம் என்று எண்ணி டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அவர் டிவியில் படம் ஒன்றை பார்த்தார். டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது அவருக்கு உறக்கம் வந்தது. இதனால் மொபைலில் 12 மணிக்கு அலாரம் வைத்துவிட்டு சிறிது நேரம் உறங்கலாம் என்று நினைத்து உறங்கினார்.

ஆனால் உறங்கியவர் 12 மணிக்கு எழும்பவேயில்லை. அவரது மொபைல் போன் அலாரம் அடித்துக்கொண்டே இருந்தது. இதில் அவரது மனைவிதான் எழுந்தார். ஏன் மொபைல் அடித்து கொண்டிருக்கிறது என்று கருதி எழுந்து அலாரத்தை ஆப் செய்துவிட்டு உறங்கினார். காலை 7 மணிக்கு சோகம் மனைவி எழுந்து பிரிட்ஜை திறந்து பார்த்தபோதுதான் அவருக்கு தனது கணவரின் திட்டம் தெரிய வந்தது.

மொபைல் அலாரம் அடித்ததும் இதற்குத்தான் என்று தெரிந்து கொண்டார். உடனே வாய்வலிக்க சிறித்த மனைவி தனது கணவன் தனது பிறந்தநாளை நினைவு வைத்திருந்ததை நினைத்து பெருமைப்பட்டார். இதை அப்படியே தனது சமூக வலைத்தள பக்கத்தில் அப்பெண் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், ``நள்ளிரவில் மொபைல் போன் அலாரம் அடித்தபோது எனக்கு எந்தவித சந்தேகமும் வரவில்லை. காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்து பார்த்தபோதுதான் எனது கணவரின் திட்டம் தெரிந்தது.

எனது பிறந்தநாளுக்காக கேக், அலங்கார பொருட்கள் வாங்கி வந்துள்ளார். ஆனால் அனைத்தையும் வைத்துவிட்டு உறங்கிவிட்டார். எனது பிறந்தநாளை நினைவில் வைத்து கேக்காவது வாங்கி வந்தாரே என்று நினைத்தேன். அவர் வாங்கி வந்த கேக்கை 12 மணிநேரம் கழித்து வெட்டி பிறந்த நாளைகொண்டாடினேன்''என்று குறிப்பிட்டு கேக் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

`காலையில் சிறுமி கடத்தல், மாலையில் ரயில் நிலையத்தில் பிச்சை' - பதறிய பெற்றோர்; பகீர் பின்னணி

மும்பையில் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் சில டாக்டர்களே நேரடியாக ஈடுபட்டிருப்ப... மேலும் பார்க்க

ஐபோன் பாக்ஸில் மதிய உணவு கொண்டு வந்த மாணவன் - இணையத்தை கலக்கும் வீடியோ!

வட இந்தியாவில் வகுப்பறைக்கு மாணவன் ஒருவன் ஐபோன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வழக்கமாக மாணவர்கள் ஸ்டீல் பாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் மதிய உணவு... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் திருமண பதிவுகள் நீக்கம் - காதலன் ஏமாற்றியதால் திருமணத்தை நிறுத்தினாரா ஸ்மிருதி மந்தனா?

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலை... மேலும் பார்க்க

திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album

சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் ... மேலும் பார்க்க

Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னணி

உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான 'யாவ்டோங்' (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்... மேலும் பார்க்க

தண்ணீருக்கு பதில் ஆசிட் ஊற்றி சமையல்; சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் - போலீஸார் விசாரணை

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற கிராமத்தில் வசிக்கும் சந்து சன்யாசி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உ... மேலும் பார்க்க