செய்திகள் :

தண்ணீருக்கு பதில் ஆசிட் ஊற்றி சமையல்; சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் - போலீஸார் விசாரணை

post image

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற கிராமத்தில் வசிக்கும் சந்து சன்யாசி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சுகாதாரத் துறை அதிகாரிகளும், போலீஸாரும் அக்குடும்பத்தினரின் வீட்டிற்கு வந்து ஆய்வு செய்தனர். யாராவது சாப்பாட்டில் விஷம் கலந்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் கொலை செய்ய முயன்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரித்தனர்

ஆனால், குடும்பத்தினரை விசாரித்தபோது சாப்பாட்டில் தவறுதலாக ஆசிட் கலந்திருப்பது தெரியவந்தது. அக்குடும்பத்தில் உள்ளவர்கள் காப்பர் மற்றும் சில்வர் தொடர்பான தொழிலில் வேலை செய்வதால் வீட்டில் எப்போதும் ஆசிட் வைத்திருப்பது வழக்கமென தெரிந்தது. தண்ணீரை பாத்திரத்தில் சேமிப்பது போலவே ஆசிட்டையும் பாத்திரத்தில் சேமித்து வைத்திருப்பதாக கூறப்பட்டது.

ஆசிட் பாட்டில்
ஆசிட் பாட்டில்

ஆரம்ப கட்ட விசாரணையில், சந்து சன்யாசி வீட்டிற்கு ஒரு உறவினர் வந்திருந்தார் அந்த உறவினர் வீட்டில் சமையல் செய்தபோது தவறுதலாக தண்ணீர் என நினைத்து ஆசிட்டை எடுத்துப் பாத்திரத்தில் ஊற்றி, அதில் அரிசி வேகவைத்து குழம்பையும் தயாரித்துள்ளார்.

அதனை சாப்பிட்ட 6 பேரும் உடனே பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் மூச்சுவிடுவதில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களது உடல் நிலை மோசமடைந்ததால் பின்னர் கொல்கத்தா மருத்துவமனையில் மாற்றி சேர்க்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குழந்தைகள் ஆவர். அவர்களது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album

சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் ... மேலும் பார்க்க

Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னணி

உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான 'யாவ்டோங்' (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்... மேலும் பார்க்க

``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி

மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க

`ஆக்கிரமிப்பு' - வங்கி படிக்கட்டுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்; ஏணியில் ஏறி சென்ற வாடிக்கையாளர்கள்

ஒடிசா மாநிலம் பத்ராக் நகரில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் இடித்தனர். அவர்கள் அங்குள்ள சரம்பா மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் இருந்த சட்டவிரோத கடைகள், தற்... மேலும் பார்க்க

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய... மேலும் பார்க்க

நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெ... மேலும் பார்க்க