செய்திகள் :

`ஆக்கிரமிப்பு' - வங்கி படிக்கட்டுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்; ஏணியில் ஏறி சென்ற வாடிக்கையாளர்கள்

post image

ஒடிசா மாநிலம் பத்ராக் நகரில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் இடித்தனர். அவர்கள் அங்குள்ள சரம்பா மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் இருந்த சட்டவிரோத கடைகள், தற்காலிக கட்டுமானங்கள், குடியிருப்புக்களை இடித்தனர்.

அப்படி இடித்த போது, ஒரு கட்டிடத்தின் முன்பகுதியில் இருந்த படிக்கட்டுகள் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

அந்த கட்டிடத்தில் முதல் மாடியில் வங்கி செயல்பட்டு வந்தது. வங்கி இருந்தபோதிலும், நகராட்சி ஊழியர்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகளை இடித்து தள்ளினர்.

இதனால் வங்கிக்கு செல்ல சரியான வசதி இல்லை. படிக்கட்டுகளை இடிப்பதற்கு முன்பு, உள்ளாட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கும் வங்கி நிர்வாகத்திற்கும் நோட்டீஸ் கொடுத்திருந்தது. ஆனாலும், அவர்கள் படிக்கட்டை சரி செய்ய எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏணியில் ஏறும் வங்கி ஊழியர்கள்
ஏணியில் ஏறும் வங்கி ஊழியர்கள்

இதையடுத்தே படிக்கட்டுகளை இடித்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். உள்ளாட்சி ஊழியர்கள் ஒலி பெருக்கி மூலம் சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றும்படி அறிவித்தனர்.

அதனை அகற்ற இரண்டு நாள் அவகாசமும் கொடுக்கப்பட்டது. வங்கிக்கு செல்லும் படிக்கட்டு இடிக்கப்பட்டதால், முதல் மாடியில் இருக்கும் வங்கிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து டிராக்டர் ஒன்றை கொண்டு வந்து வங்கி அருகில் நிறுத்தினர். அதன் மீது ஒரு மர ஏணியை வைத்து அதில் ஏறி ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் வங்கிக்கு சென்றனர். வங்கியின் முகப்பில் இருபுறமும் SBI லோகோ உள்ளது. இந்த காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

இதனை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ஒருவர், வாடிக்கையாளர்கள் படிக்கட்டில் ஏறும்போது கீழே விழுந்தால், அவர்களுக்கு இலவச காப்பீடு வசதி செய்யப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிமெண்ட் படிக்கட்டு இடிக்கப்பட்டதால், கட்டிடத்தின் உரிமையாளர் உடனே விரைந்து செயல்பட்டு ஸ்டீல் படிக்கட்டு ஒன்றை கொண்டு வந்து பொருத்தி நிலைமையை சரி செய்து இருக்கிறார்.

``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி

மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய... மேலும் பார்க்க

நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெ... மேலும் பார்க்க

அப்போலோ: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய், ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) சிறப்பு சிகிச்சை மையம்

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் ... மேலும் பார்க்க

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக்.பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில்... மேலும் பார்க்க

Portrait of Elisabeth Lederer: கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஒற்றை ஓவியம் - என்ன ஸ்பெஷல்?

கலை உலகம் இதுவரை எத்தனை எத்தனையோ உலக சாதனைகள் படைத்திருக்கிறது. அந்த வரிசையில் வரலாற்றில் முதன் முதலில் சுமார் 1,972 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 'Portrait of Elisabeth Lederer' என்ற ஓவியத்தை பற்றிய சில சு... மேலும் பார்க்க