செய்திகள் :

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்; அகற்ற முடியாமல் திணறும் மாநகராட்சி - பிரச்னை என்ன?

post image

திருப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் திடக்கழிவு மேலாண்மையில் பெரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

முன்னதாக, திருப்பூர் மாநகராட்சி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகள் முன்பு ஆங்காங்கே பாறைக்குழிகளில் கொட்டப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நகரின் விரைவான வளர்ச்சியால் பாறைக்குழியைச் சுற்றியுள்ள பகுதிகள் வீடுகளாக மாறிவிட்டன. இதனால் அங்கு குப்பை கொட்டுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதலியபாளையம் அருகே உள்ள பாறைக்குழியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் உயர்நீதிமன்றம் அங்கு குப்பை கொட்ட தடை விதித்தது. இதற்கான மாற்று தீர்வாக, இடுவாய் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் குப்பையை கொட்டத் திட்டமிடப்பட்டது.

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்
திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்

ஆனால், அதற்கும் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் திருப்பூர் மாநகராட்சி முழுவதும் குப்பைகளை அகற்ற முடியாமல் நிர்வாகம் சிக்கலில் உள்ளது.

இதனிடையே, ராயபுரம் ரோட்டரி பள்ளி அருகே நொய்யல் ஆற்றின் இருபுறங்களிலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. மேலும், திருப்பூர் ரயில் நிலையம் பின்புறமாக மக்கள் பயன்படுத்தும் வழித்தடத்திலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறியது:

“இந்த வழியேதான் நாங்கள் மெயின் ரோட்டுக்கு செல்வோம். பள்ளி, கல்லூரி மாணவர்கள் எல்லோரும் இதை கடந்து செல்கிறார்கள்.

இங்கிருந்து அதிக துர்நாற்றம் வீசுவதால் நடந்து செல்லவே முடியவில்லை. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே மாநகராட்சி உடனடியாக இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்
திருப்பூர்: மலை போல குவியும் குப்பைகள்

இது குறித்து 36-ஆம் வார்டு கவுன்சிலரும் அந்தப் பகுதியின் மண்டல தலைவருமான திவாகரன் அவர்களிடம் கேட்டபோது,

“குப்பை பிரச்சினைக்கு மாநகராட்சி விரைவில் நிரந்தர தீர்வு எடுக்கத் திட்டமிட்டு வருகிறது. மக்கள் கருத்துகளையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

Fastag-ஐ எந்தப் பிரச்னையும் இல்லாமல் பயன்படுத்த, `இது' ரொம்ப முக்கியம் - உடனே பண்ணிடுங்க! | How to?

சில நேரங்களில் ஃபாஸ்ட் டேக் ஸ்கேன் செய்யும்போது, வேலை செய்யாமல் போய் விடுகிறது. இதனால், டோல்கேட்டில் தேவையில்லாத டென்சன் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், 'KYV (Know Your Vehicle)' அப்டேட் செய்யாமல்... மேலும் பார்க்க

'இயற்கை விவசாயம் இந்தியாவுக்குத் தேவை' இந்திரா காந்தி பார்த்த அதே வேலையை, திருப்பிப் போட மோடி தயாரா?

அனைவருக்கும் பசுமை வணக்கம்“இயற்கை விவசாயம், என் இதயத்துக்கு நெருக்கமானது; இயற்கை வேளாண்மை, இந்த நூற்றாண்டின் தேவை; அதிநவீன ரசாயனங்கள், நம் மண்ணின் வளத்துக்குக் கேடு விளைவிக்கின்றன... செலவுகளையும் அதிக... மேலும் பார்க்க

``டிசம்பர் 15-க்குள் திருந்தவில்லை என்றால் திருத்தப்படுவீர்கள்'' - நாள் குறித்த ஓ.பன்னீர்செல்வம்

2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி அதிமுகவில் அதிகாரப்போட்டி பல முனைகளில் சூடுபிடித்திருக்கிறது.ஏற்கனவே ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் பழனிச்சாமியை எதிராக நிற்க, இப்போது மூத்த தலைவர் ... மேலும் பார்க்க

``ஓபிஎஸ் தலைமையில் புதிய கட்சி உருவாகிறதா?'' - அதிமுக வைத்திலிங்கம் எச்சரிக்கை

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு கெடுவும் விதித்திருந்தார். அதிமுகவில் இருந... மேலும் பார்க்க

``தனியாக ஒரு பெண் ஏன் அங்க போகணும்?'' - கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்

கடந்த நவ. 2ம் தேதி இரவு 11 மணியளவில், 20 வயது மாணவி கோவை விமான நிலையம் பின்புற பகுதியில் தனது காதலனுடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அங்கு 3 பேர் கொண்ட கும்பல் இருசக்கர வாகனத்தில் வந்த... மேலும் பார்க்க

காரைக்குடி: போராட்டத்தால் பூட்டப்பட்ட மதுக்கடை - மீண்டும் திறக்கப்படலாமென மக்கள் அச்சம்!

கடந்த 14 ஆம் தேதி காரைக்குடியில் துணை முதல்வர் உதயநிதி கலந்துகொண்ட அரசு விழாவில் 'டாஸ்மாக் கடையால் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் துயரம் அடைகிறார்கள்' என்று பள்ளி மாணவி பேசியது பரபரப்பை ஏற்படுத்த, துணை... மேலும் பார்க்க