செய்திகள் :

முதுமலை: ஆடு மேய்க்கச் சென்ற பழங்குடி பெண், இழுத்துச் சென்ற‌ புலி; அதிர்ச்சி சம்பவம்

post image

நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதான நாகியம்மாள். பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த இவர் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்திருக்கிறார். புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதிகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார். வழக்கம்போல் இன்றும் ஆடுகளை மேய்க்கச் சென்றிருக்கிறார். மாவனல்லா அருகில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகியம்மாளை இன்று மதியம் புலி ஒன்று தாக்கியிருக்கிறது.

புலி தாக்குதல் சம்பவம்
புலி தாக்குதல் சம்பவம்

ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை அந்த புலி இழுத்துச் சென்றிருக்கிறது. இதைக் கண்டு பதறிய உள்ளுர் நபர் ஒருவர் கூச்சலிட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்திருக்கிறார். உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உள்ளூர் மக்கள் காவல்துறையினருடன் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, சில மீட்டர் தொலைவில் நாகியம்மாளின் உடல் தனியாக தலை தனியாக கிடைப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக அவரின் உடலை மீட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வனத்துறையைக் கண்டித்து உள்ளுர் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

புலி தாக்குதல் சம்பவம்

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " பெரும்பாலும் புலிகள் மனிதர்களை தவிர்த்துச் செல்பவை. வயது முதிர்வு அல்லது உடலில் காயங்கள் போன்ற காரணங்களால் வேட்டைத்திறனை இழக்கும் பட்சத்தில் மனிதர்களைத் தாக்குகின்றன. சம்மந்தப்பட்ட புலியின் உடல்நிலை குறித்து அறிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்துகிறோம். இந்த பகுதியில் அடுத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம் " என்றனர்.

``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி

மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க

`ஆக்கிரமிப்பு' - வங்கி படிக்கட்டுகளை இடித்து தள்ளிய அதிகாரிகள்; ஏணியில் ஏறி சென்ற வாடிக்கையாளர்கள்

ஒடிசா மாநிலம் பத்ராக் நகரில் சட்டவிரோத கட்டுமானங்களை உள்ளாட்சி நிர்வாக ஊழியர்கள் இடித்தனர். அவர்கள் அங்குள்ள சரம்பா மார்க்கெட்டில் இருந்து ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் இருந்த சட்டவிரோத கடைகள், தற்... மேலும் பார்க்க

நடிகர் தர்மேந்திரா உடல் மும்பையில் தகனம்: பிரதமர், தலைவர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் இரங்கல்

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா இன்று காலை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மரணம் குறித்து மதியம்தான் செய்தி வெளியானது. இறுதிச்சடங்குக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகுதான் அவரது மரணம் குறித்து தெ... மேலும் பார்க்க

அப்போலோ: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய், ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) சிறப்பு சிகிச்சை மையம்

அப்போலோ மருத்துவமனை கிரீம்ஸ் லேன்: தமிழ்நாட்டின் முதல் பார்கின்சன் நோய் மற்றும் ஆழ்மூளைத் தூண்டுதல் (DBS) ஆகியவற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தைத் தொடங்கியிருக்கிறது!தமிழ்நாட்டின் மருத்துவ சுகாதாரத் ... மேலும் பார்க்க

டைட்டானிக் கப்பல் விபத்தில் இறந்தவர் அணிந்திருந்த தங்கக் கைக்கடிகாரம் ஏலம்; எவ்வளவு தெரியுமா?

1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி தனது முதல் பயணத்தை ஆயிரக்கணக்கான பயணிகளுடன் தொடங்கிய கப்பல் டைட்டானிக்.பயணத்தை ஆரம்பித்த சில தினங்களிலேயே வட அட்லாண்டிக்கில் பனிப் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. இதில்... மேலும் பார்க்க

Portrait of Elisabeth Lederer: கிட்டத்தட்ட ரூ.2000 கோடிக்கு ஏலம் போன ஒற்றை ஓவியம் - என்ன ஸ்பெஷல்?

கலை உலகம் இதுவரை எத்தனை எத்தனையோ உலக சாதனைகள் படைத்திருக்கிறது. அந்த வரிசையில் வரலாற்றில் முதன் முதலில் சுமார் 1,972 கோடிக்கு ஏலம் விடப்பட்ட 'Portrait of Elisabeth Lederer' என்ற ஓவியத்தை பற்றிய சில சு... மேலும் பார்க்க