BB Tamil 9: "எனக்கும் ஃபீலிங் இருக்குங்கிறதை வெளிப்படுத்திட்டேன்"- கம்ருதீன் குறித்து பார்வதி
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த நிலையில் தற்போதுவரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.
நேற்று முன்தினம் (நவ.23) கெமி வெளியேறினார்.
நேற்று போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

இந்நிலையில் இன்று வெளியான இரண்டாவது புரொமோவில், "என்னால தான் உனக்கும் அரோராவுக்கும் சண்டை வருது. உன்னை பார்க்கும்போது சத்தியமா எனக்கு கஷ்டமா தான் இருக்கு.
உன்னோட விளையாட்டும், என்னோட விளையாட்டும் வேற மாதிரி இருக்கு. ஆனா உன்கிட்ட என்னால பேசாமையும் இருக்க முடியாது" என கம்ருதீன் பார்வதியிடம் சொன்னார்.

அதற்கு பார்வதி "நானும் அவளும் (அரோரா) ஒரு சர்பேஸ் லெவல்ல பேசிக்கிட்டுதான் இருக்கோம். நீங்க எங்க டீப்பா ஹர்ட் ஆகுறியோ, அதை வச்சு, இந்த வீட்டில ஆயிரம் கற்கள் வீசுவாங்க. அதை நம்ம எப்படி ஹேண்டில் பண்றோம்கிறதுல தான் இருக்கு" என கம்ருதீனிடம் விளக்கினார்.
தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரொமோவில், "கம்ருதீனை வச்சு அரோரா செய்த சில விஷயங்கள்ல நானும் டீப்பா ஹர்ட் ஆகிருக்கேன்.
நீ என்ன வேணாலும் பண்ணு. உன்னோட ப்ரெண்ட்ஷிப்பை நான் தடுக்கல. அதை நான் ரெஸ்ட்ரிக்ட்டும் பண்ணல.

ஆனா எனக்கு உன் மேல ஓரமா ஒரு ஃபீலிங் இருக்குங்கிறதை நான் வெளிப்படுத்திட்டேன். என்னால கம்ருதீனுக்கு குழப்பம் ஆச்சுனா நான் விலகிக்கிறேன்" என பார்வதி கம்ருதீன் குறித்து அமித்திடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.



















