செய்திகள் :

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு - என்னென்ன வசதிகள் தெரியுமா?

post image

கோவை காந்திபுரம் பகுதியில் செம்மொழிப் பூங்கா கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 2023-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.208 கோடி மதிப்பில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

கோவை செம்மொழிப் பூங்கா திறப்பு

அதில் செம்மொழி வனம், மூலிகை தோட்டம், மகரந்த தோட்டம், நீர்த் தோட்டம், மணம்கமிழ் தோட்டம். பாலைவனத் தோட்டம், மலர்த் தோட்டம், மூங்கில் தோட்டம், நட்சத்திர தோட்டம், ரோஜா தோட்டம், பசுமை வனம் போன்ற 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள செண்பக மரம், கல் இலவு, மிளகு மரம், கடல் திராட்சை, திருவோட்டு மரம், கலிபுடா, வரிகமுகு, மலைபூவரசு எலிச்சுழி, குங்குமம் மரம் உள்ளிட்டவை உள்ளன. கடையேழு வள்ளல்களின் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே நுழைவுச்சீட்டு வழங்குமிடம் மற்றும் அனுபவ மையக் கட்டடம், 500 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் திறந்தவெளி அரங்கம்,

கோவை செம்மொழிப் பூங்கா
கோவை செம்மொழிப் பூங்கா

பூங்காவில் பணியாற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அறை, உணவகம்,ஒப்பனை அறை, சில்லறை விற்பனை நிலையம், செயற்கை நீர்வீழ்ச்சி போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 453 கார்கள், 10 பேருந்துகள் மற்றும் 1,000 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு நடைபாதை, உடற்பயிற்சிக் கருவிகளுடன் கூடிய திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், குழந்தைகள் விளையாட்டுத்திடல் அமைக்கப்பட்டுள்ளன. அனுபவ மையக் கட்டடத்தில் பழங்காலத் தமிழர்கள் பயன்படுத்திய பொருள்கள் மற்றும் தாவரவியல் அருங்காட்சியகம். பூங்கா வளாகத்தில் குளிர்சாதன வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கோவை செம்மொழிப் பூங்கா

மாற்றுத்திறனாளிகளும் பயனளிக்கும் வகையில் சக்கர நாற்காலிகள், பேட்டரி வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “கோவையில் செம்மொழிப் பூங்கா திறந்து என் தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். அடிக்கல் நாட்டியபோது சொன்னபடி குறித்த காலத்தில் திறக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கான பாதை கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், இறந்தவர்களின் உடலை ச... மேலும் பார்க்க

``234 தொகுதியிலும் தே.மு.தி.க வலுவாக இருக்கிறது” - சொல்கிறார் பிரேமலதா விஜயகாந்த்

2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். 'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற பெயரில் தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா வி... மேலும் பார்க்க

TVK : ஸ்கெட்ச் போடும் தவெக; ஆழ்ந்த யோசனையில் செங்கோட்டையன்? விஜய்யுடன் இணைகிறாரா? - பரபர பின்னணி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன் விஜய்யின் தவெகவில் இணையப்போவதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. உண்மை என்ன என்பதை அறிய பனையூர் வட்டாரத்தினர் சிலரிடம் பேசினோம்.விஜய்விஜய... மேலும் பார்க்க

`இந்த போன்ல தான் வேலை செய்கிறீர்களா?’ பட்டன்போனை தூக்கிப்போட்ட குமரி கலெக்டர்; கொதிக்கும் VAO-க்கள்

கிராம நிர்வாக அலுவலர்களை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஒருமையில் பேசி அவமானப்படுத்துவதாகவும், செல்போனை தூக்கி வீசியதாகவும், இதனால் மன உளைச்சலில் உள்ள வி.ஏ.ஓ-க்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டு... மேலும் பார்க்க

துப்பாக்கிச்சூடு : `அதிகாரிக்கு பதவி உயர்வா? திமுகவின் இரட்டை வேடம்’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``தமிழக வரலாற்றில் எந்த ஆட்சியிலும் இதுபோன்ற கொடுமை நடைபெற்றதில்லை. குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள இருந்ததை ரத்து செய்து விட்டு தூத்துக்குடி செல்கிறேன்.” - கடந்த அதிமுக ஆட்சியில் தூத்துக்க... மேலும் பார்க்க