செய்திகள் :

`காலையில் சிறுமி கடத்தல், மாலையில் ரயில் நிலையத்தில் பிச்சை' - பதறிய பெற்றோர்; பகீர் பின்னணி

post image

மும்பையில் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பது அல்லது விற்பனை செய்வது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. அதிலும், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்வதில் சில டாக்டர்களே நேரடியாக ஈடுபட்டிருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள மேக்வாடியில் வசிப்பவர் சுக்ராம். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது 9 வயது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள். சுக்ராம் தனது உறவினர்கள் துணையுடன் மகளை தேடி வந்தார். பிற்பகல் 1 மணிக்குத்தான் சிறுமி காணாமல் போனாள்.

காணாமல் போன சிறுமி அந்தேரி ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை சுக்ராமின் உறவினர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் சுக்ராமிற்கு தகவல் தெரிவித்தனர். அதுவும், சிறுமி காணாமல் போன அன்று மாலை 7 மணிக்குச் ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தாள்.

இதுகுறித்து சுக்ராம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து சிறுமியை மீட்டனர். அச்சிறுமியுடன் 17 வயது பெண் ஒருவர் இருந்தார். அவர்தான் சிறுமியை பிச்சை எடுக்க வைத்திருந்தார்.

சிறுமி கடத்தல்
சிறுமி கடத்தல்

அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து சுக்ராம் கூறுகையில்,
“எனது மகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போய்விட்டாள். சில மணி நேரம் கழித்து, எனது மகள் ரயில் நிலையத்தில் பிச்சை எடுப்பதை எனது உறவினர்கள் பார்த்து தகவல் கொடுத்தனர். உடனே சென்று அவளை மீட்டோம்.

எனது மகளுடன் இருந்த நபர் எங்களது பகுதியைச் சேர்ந்தவர்தான். எனது மகளிடம் விசாரித்தபோது, விளையாடிக் கொண்டிருந்தபோது சாக்லேட் கொடுத்து, காலி பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து வரும்படி கூறியிருந்தார்.

அவள் சேகரித்து வந்த பாட்டில்களுக்கு ஒரு ரூபாய் கொடுத்துள்ளார். அதோடு ‘பசிக்கிறது, வீட்டிற்கு அழைத்து செல்லுங்கள்’ என்று எனது மகள் கூறியபோது, அவளை மாகிம் தர்காவிற்கு அழைத்து சென்று பிச்சை எடுக்க வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்து அந்தேரி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து பிச்சை எடுக்க வைத்துள்ளார்.

எப்படி பிச்சை எடுக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்துள்ளார்,” என அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

சிறுமியை கடத்திய பெண்ணிடம் விசாரித்த போது, பல குழந்தைகளை இதுபோன்று பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்தது. பெற்றோரிடம் ‘விளையாட அழைத்து செல்வேன்’ என்று கூறி அழைத்துச் சென்று பிச்சை எடுக்க வைத்தது தெரியவந்துள்ளது.

குழந்தையை கடத்தி ரூ. 6 லட்சத்திற்கு விற்பனை

மும்பையில் 5 வயது குழந்தையை கடத்திச் சென்று விற்பனை செய்தது தொடர்பாக பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மும்பை சாந்தாகுரூஸ் வகோலா பகுதியில் வசிக்கும், மனநிலை பாதித்த சாந்தா என்ற பெண் அங்குள்ள ஒரு ஆட்டோவில் தனது 5 வயது மகளுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகளை அதிகாலை 1 மணிக்கு யாரோ கடத்திச் சென்றுவிட்டனர்.

இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமரா
கண்காணிப்பு கேமரா

இதில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு, குழந்தை நவி மும்பையில் பெண் டாக்டர் விருந்தா சவான் வீட்டில் இருந்து மீட்கப்பட்டது. விருந்தா சவானின் கணவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து தனது கட்டிடத்தில் துப்புரவு பணியாளராக வேலை செய்த ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

அந்த துப்புரவு பணியாளர் மூலம் குழந்தையின் சித்தப்பா லாரன்ஸ் மற்றும் ஆட்டோ உரிமையாளர் ஷேக் ஆகியோர் துணையுடன் குழந்தையை கடத்தி ரூ. 6 லட்சத்திற்கு விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

குழந்தையை மீட்டு, பெண் டாக்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐபோன் பாக்ஸில் மதிய உணவு கொண்டு வந்த மாணவன் - இணையத்தை கலக்கும் வீடியோ!

வட இந்தியாவில் வகுப்பறைக்கு மாணவன் ஒருவன் ஐபோன் பாக்ஸில் மதிய உணவு எடுத்து வந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வழக்கமாக மாணவர்கள் ஸ்டீல் பாக்ஸ் அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் மதிய உணவு... மேலும் பார்க்க

இன்ஸ்டாவில் திருமண பதிவுகள் நீக்கம் - காதலன் ஏமாற்றியதால் திருமணத்தை நிறுத்தினாரா ஸ்மிருதி மந்தனா?

கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா தனது நீண்ட நாள் காதலன் பலாஷ் முச்சல் என்பவரை மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலியில் திருமணம் செய்து கொள்ள இருந்தார். இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி இருந்த நிலை... மேலும் பார்க்க

திருக்கார்த்திகை: சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சி | Photo Album

சென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் அகல் விளக்குகள் கண்காட்சிசென்னை பூம்புகாரில் ... மேலும் பார்க்க

Yaodong: 4 கோடி சீனர்கள் வசிக்கும் 'ரகசிய' குகை வீடுகள் - வியக்க வைக்கும் பின்னணி

உலகம் முழுவதும் நவீன கட்டுமான முறைகளைத் தேடி வரும் நிலையில் சீனாவின் 4,000 ஆண்டுகள் பழைமையான 'யாவ்டோங்' (Yaodong) எனப்படும் குகை வீடுகளில் இன்றும் மக்கள் வசித்து வருவது பற்றித் தெரியுமா? தொழில்நுட்பங்... மேலும் பார்க்க

தண்ணீருக்கு பதில் ஆசிட் ஊற்றி சமையல்; சாப்பிட்ட 6 பேர் கவலைக்கிடம் - போலீஸார் விசாரணை

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள கட்டால் என்ற கிராமத்தில் வசிக்கும் சந்து சன்யாசி குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உ... மேலும் பார்க்க

``கனவில் வந்து கடவுள் சொன்னார்'' - காளி சிலைக்கு மேரி மாதா அலங்காரம் செய்த பூசாரி

மும்பை செம்பூர் வாசிநாக்கா பகுதியில் மிகவும் பிரபலமான காளி மாதா கோயில் உள்ளது. கோயிலுக்கு பக்தர்கள் காலை நேரத்தில் சாமி கும்பிட வந்தபோது கருவறையில் இருந்த காளிதேவியின் சிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தன... மேலும் பார்க்க