செய்திகள் :

நெல்லை: 'வீட்டில ஒரு ரூபாய் இல்லை; இதுல இத்தன கேமரா!’ - கடுப்பான திருடன் எழுதி வைத்த கடிதம்!

post image

நெல்லை புறநகர் பகுதியான பேட்டை, ஐஓபி காலனியைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் பால். 57 வயதான இவர் அந்தப் பகுதியில் கிறிஸ்துவ ஊழியம் செய்து வருகிறார். அவரது மகள் மதுரையில் உள்ள தனியார் வங்கியொன்றில் பணியாற்றி வருகிறார். அவருக்கு துணையாக ஜேம்ஸ் பாலின் மனைவி வசித்து வருகிறார். அதனால் ஜேம்ஸ் பால் அடிக்கடி மதுரைக்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து விட்டு வருவது வழக்கம். அதன்படி கடந்த 24-ம் தேதி அவர் மதுரைக்குச் சென்றார். அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருந்ததால் அங்கிருந்தபடியே மொபைல் போனில் வீட்டையும் கண்காணித்து வந்தார்.

இந்த நிலையில், 25-ம் தேதி அவர் பார்த்த போது சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை. அதனால் அருகில் இருந்த வீட்டில் உள்ளவருக்கு போன் செய்து வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி அருகில் வசிப்பவர் ஜெம்ஸ் பால் வீட்டுக்குச் சென்றபோது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதைப் பார்த்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த ஜேம்ஸ் பால், வீட்டுக்குள் சென்றபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. அத்துடன், வீட்டில் வைக்கப்பட்டிருந்த 25,000 ரொக்கப் பணம் காணாமல் போயிருந்தது.

அதனால் அதிர்ச்சியடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த பேட்டை காவல்துறையினர், வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டு கிடந்ததுடன், சிசிடிவி பதிவுகள் எடுத்துச் செல்லப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

திருட்டு நடந்த வீட்டில் ஒரு கடிதம் சிக்கியது. அதை அந்த வீட்டில் கைவரிசை காட்டிய திருடனே எழுதியுள்ளார். அதில், 'உன் வீட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. இதுக்கு இத்தனை சிசிடிவி கேமரா. அடுத்த தடவை என்னை மாதிரி திருடன் வந்தால் ஏமாறாமல் இருக்க காசு வை. மன்னித்துக் கொள்ளவும் - திருடன்' என எழுதப்பட்டிருந்தது.

அதனையும் கைப்பற்றிய போலீஸார், அருகில் உள்ள வீடுகளில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்து, அந்த நூதனத் திருடனைத் தேடி வருகின்றனர். இந்த திருட்டுச் சம்பவத்தால் பேட்டை பகுதியில் குடியிருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கரூர் சம்பவம் : இரண்டாம் நாளாக சி.பி.ஐ முன்பு ஆஜரான த.வெ.க நிர்வாகிகள்! நடந்தது என்ன?

த.வெ.க கட்சி இந்தாண்டு செப்டம்பர் 27-ம் தேதி நடத்திய பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, டெல்லி உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விச... மேலும் பார்க்க

நடிகை கடத்தல், பாலியல் தொல்லை; வீடியோ பதிவு - திலீப்-க்கு எதிரான வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிப்பு

கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர், 2017-ம் ஆண்டு பிப்ரவரி 17-ம் தேதி படபிடிப்பு முடித்து மாலை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் திரும்பிக்கொண்டிருந்தர். அப்போது அவரை கடத்தி பாலிய... மேலும் பார்க்க

தென்காசி: விவசாய இலவச மின் இணைப்பிற்கு ரூ.7,000 லஞ்சம்: வசமாக சிக்கிய இளநிலை பொறியாளர்!

தென்காசி மாவட்டம், வி.கே புதூர் அருகே கீழ வீராணம் பகுதியைச் சேர்ந்த செல்வகணேஷ் என்பவர் அவரது தந்தையின் பெயரில் வி.கே புதூரில் உள்ள நிலத்திற்கு மின் கம்பம் வைப்பதற்கு ரூபாய் 24,000 பணம் செலுத்தி, இலவச ... மேலும் பார்க்க

சிவகாசி: நிறுவனத்தின் அருகில் மது அருந்துவதை கண்டித்ததால் ஆத்திரம்; பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்கள்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் விநாயகர் காலனியில் வசிப்பவர் கென்னடி கண்ணன்( வயது 50 ). இவர் சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள காளியம்மன் கோயில் பழைய தெருவின் பின்புறம்... மேலும் பார்க்க

மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உயிரிழப்பு

பெங்களூரு அருகே உள்ள அத்திபேலே என்ற இடத்தில் வசித்தவர் வித்யா. இவரை அவரது கணவரும், அவரது மாமனாரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர்.திடீரென வித்யாவின் உடல் நிலை கடந்த மார்ச் ம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: மனைவியைக் கொலை செய்த கணவர்; சிக்கிய கணவர் - தவிக்கும் இரண்டு குழந்தைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க