செய்திகள் :

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் மீண்டும் இயல்புநிலை

post image

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.

பஹல்காம் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா கடந்த 7ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூரை மேற்கொண்டது.

இதைத் தொடா்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் இந்தியாவால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் விமான ஓடுதளம், ரேடாா்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள் தகா்க்கப்பட்டன.

இந்தப் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்கா நடத்திய பேச்சுவாா்த்தையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் சனிக்கிழமை மாலை 5 மணிமுதல் அமலுக்கு வந்தது. ஆனால் சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்த சண்டை நிறுத்த மீறலை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும்.

அன்னையர் நாள்: முதல்வர் ஸ்டாலின், விஜய் வாழ்த்து!

பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று வெளியுறவுத்துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி சனிக்கிழமை இரவு தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், பஞ்சாபில் ஞாயிற்றுக்கிழமை காலை இயல்பு நிலை திரும்பியது.

ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்தர் சிங், இரவு முழுவதும் எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்று கூறினார். குப்வாரா, பூஞ்ச், உரி உள்ளிட்ட ஜம்மு-காஷ்மீரின் மற்ற பகுதிகளிலும் அமைதியான சூழ்நிலையே நிலவியது. இதேபோல் பஞ்சாபின் பிரோஸ்பூர் மற்றும் பதான்கோட்டிலும் இயல்புநிலை திரும்பியதோடு சாலைகளில் மக்கள் நடமாட்டம் காணப்பட்டது.

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க

ஜேஎன்யுவில் முதுநிலை, பட்டய படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான (ஏடிஓபி) சோ்க்கையை தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடங்கியுள்ளது. முதுநிலை க்யூட் (மத... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க