'அண்ணாமலை இயக்கத்திற்கு ரஜினி ஆலோசனையா?' - லதா ரஜினிகாந்த் பதில்
டூவீலரில் பயணித்தவர்கள் மீது மோதிய கார்; மூவர் உயிரைப் பறித்த கோர விபத்து - ஏர்வாடி அருகே சோகம்!
ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி பகுதியைச் சேர்ந்தவர் லாடசாமி. இவருடைய மகள் பஞ்சவர்ணம் மற்றும் மருமகன் புல்லாணி. இவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக நேற்றைய தினம் ஏர்வாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
கொம்பூதி சாலை அருகே இவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையில் இருந்து அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி இருசக்கர வாகனத்தில் மோதிய வேகத்தில் டூவீலரில் பயணித்த மூவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதனால் டூவீலரில் பயணித்த லாடசாமி, பஞ்சவர்ணம், புல்லாணி ஆகிய மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த ஏர்வாடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில் சிக்கி உயிரிழந்த மூவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இந்த கோர விபத்து குறித்து ஏர்வாடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.



















