செய்திகள் :

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

post image

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இன்று (நவ 10) மாலை 6.50 மணியளவில் நடந்த இந்த கார் வெடிப்பு சம்பவத்தால் அருகே இருந்த நான்கு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்துள்ளன. பெரும் சத்தத்துடன் நடந்த இச்சம்பவம் அப்பகுதியையே பதற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இதுவரை 8 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 24 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் முதற்கட்டத் தகவல் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் டெல்லி நகரம் முழுவதும் உயர்மட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. வாகன சோதனை, இரவு நேர ரோந்து பணிகளை அதிகரிக்கவும், கூடுதல் காவலர்களை பாதுகாப்பு, கண்காணிப்புப் பணிகளின் ஈடுபடுத்தவும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் குறித்து 'ANI' செய்தி நிறுவனத்திடம் பேசியிருக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா,"இன்று மாலை 7 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் i20 கார் திடீரென வெடித்திருக்கிறது. இச்சம்பவத்தில் வெடித்த காரின் அருகே இருந்த கார்களும் தீ பிடித்து எரிந்துள்ளன. அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சிலர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெடிப்பு நிகழ்ந்த 10 நிமிடத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டிருக்கின்றனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

NSG மற்றும் NIA குழுக்கள், FSL உடன் இணைந்து, இப்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன. அருகிலுள்ள அனைத்து CCTV கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருக்கிறார்.

பிரதமர் மோடியுடன் அலோசனை நடத்திய பிறகு அமித் ஷா இன்று இரவே பாதிக்கப்பட்டவர்களையும், சம்பவ இடத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தவிருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க

திருச்சி: ``முதல்வர் தங்கியிருந்த இடத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் நடந்த படுகொலை'' - அண்ணாமலை

திருச்சி பீமநகர், செடல் மாரியம்மன் கோயில் கீழத்தெருவை சேர்ந்தவர் தாமரைச் செல்வன் (25). கண்ட்ரோல்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் வேலை பார்த்த தாமரைச் செல்வன், இன்று காலை இருசக்கர வா... மேலும் பார்க்க