செய்திகள் :

தஞ்சாவூர்: ”காதலிக்க மறுத்த நர்சிங் மாணவி”- சக மாணவன் டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட சோகம்!

post image

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான மாணவி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் நான்காம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இவர் தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இதே கல்லூரியில் தஞ்சாவூர் மாவட்டம் தோட்டக்காடு பகுதியைச் சேர்ந்த கவின் என்பவர் டிப்ளமோ OT படித்து வருகிறார். மாணவியை சக மாணவர் கவின் காதலிக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது

காதலிக்க வற்புறுத்திய கவின்

ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவி காதலிக்க மறுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி கல்லூரி வளாகத்தில் சக மாணவிகள் முன்னிலையில் காதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை நெரித்து கன்னத்தில் அறைந்து காதலிக்க சொல்லி கவின் மிரட்டியதாக சொல்கிறார்கள். ஆத்திரமடைந்த மாணவி, கவின் நடந்து கொண்டது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் நிர்வாகம் கவினை அழைத்து முறையாக கண்டிக்கவில்லை என்கிறார்கள்.

இந்நிலையில், நேற்று மாணவிக்கு வேறு எண்ணில் இருந்து செல்போனில் பேசியுள்ளார் கவின். அப்போது, நான் சொல்கிற படி கேட்டு என்னை காதலி, இல்லை என்றால் உன் போட்டோவை ஆபாசமாக சித்திரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் மன உலைச்சலுக்கு ஆளான மாணவி விடுதியில் விஷம் அருந்தி விட்டு மயங்கி கிடந்துள்ளார்.

இதை பார்த்த விடுதியில் இருக்கும் சக மாணவிகள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், காதலிக்க வற்புறுத்தி டார்ச்சர் செய்வதாக எங்க மகள் கல்லூரி நிர்வாகத்தில் புகார் சொல்லியும் அலட்சியத்தால் முறையாக நவடிக்கை எடுக்கவில்லை. இதுவே எங்கள் மகள் சாவுக்கு காரணமாகி விட்டது. தற்கொலைக்கு தள்ளிய மாணவன் கவினுக்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை சிறுமி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் சூலூர் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்குச் சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

நெல்லை: `வீடியோ எடுத்து அனுப்பு' - ஆண் நண்பருக்காக லேடீஸ் ஹாஸ்டலில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த பெண்

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. பணிக்குச் செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரிகளில் படிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்கியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற சிறுமி; சிகிச்சையின்போது பிரசவம்; போக்சோ வழக்கில் இளைஞர் கைது

பாட்டி, தாய், சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சையின்போது 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்திய நிலையில் இதற்கு காரணமான வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்... மேலும் பார்க்க

கறி சமைக்க `ஓசி'-யில் வாத்து கேட்ட போதை கும்பல் - தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!

நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட தருவை என்ற கிராமப்பகுதியில், மேல முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வாத்துக்களை வளர்த்து தொழில் செய்து வருகிறார். அவரிடம் உள்ள வ... மேலும் பார்க்க

அ.தி.மு.க, தி.மு.க, த.வெ.க... யார் ஆட்சிக்கு வந்தாலும் பவர்ஃபுல் பதவி! - யார் இந்த அருண் ஐ.பி.எஸ்?

அ.தி.மு.க ஆட்சியில் சென்னை கூடுதல் கமிஷனராக பணியாற்றிய அருண் ஐ.பி.எஸ், தி.மு.க ஆட்சியில் சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். எப்படி இந்த மேஜிக் நடக்கிறது என தெரியாமல் சக ஐ.பி.எஸ் அதிகாரிகள் குழம... மேலும் பார்க்க

Tvisha Sharma: கணவரின் வாக்குமூலமும் வாட்ஸ்அப் ஆதாரங்களும் - நடிகை ட்விஷா வழக்கில் தொடரும் மர்மங்கள்

மாடல் மற்றும் நடிகை ட்விஷா சர்மாவின் மரண வழக்கு, தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) இந்த வழக்கை கையில் எடுத்து, போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் நிகழ்ந்த மரணம்... மேலும் பார்க்க