செய்திகள் :

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி - திருவாரூரில் அதிர்ச்சி

post image

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31) இவரது மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

பிரவீன் நாகை மாவட்டத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

சிகிச்சையில் கணவர்

இதனால் பிரவீன் மன உளைச்சலுக்கு ஆளானதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் மனைவி மீது கோபமாக வெளியே சென்ற பிரவீன் எலி மருந்து வாங்கியுள்ளார். பின்னர், மேட்டுப்பாளையம் பகுதியில் மைலி அம்மன் கோவில் அருகே எலி மருந்தை தின்றுள்ளார். இதையடுத்து மொபைல் ஆப் மூலம் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ரெடி செய்து வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். இதை தன்னுடைய வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாகவும் வைத்துள்ளார்.

இதைபார்த்த அவரது மனைவி காயத்ரி அதிர்ச்சியடைந்து தனது கணவர் இறந்து விட்டதாக நினைத்து விட்டார். பின்னர் கணவர் இறப்பை தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்ட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் எலி பேஸ்டை தின்றதால் மயக்கம் போட்டு கிடந்த பிரவீனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை தடுப்பு மையம்

மனைவி தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்ட தகவல் பிரவீனுக்கு தெரிந்து விட்ட நிலையில் அவர் கதறி அழுதிருக்கிறார். கணவர் இறந்து விட்டதாக நினைத்து மனைவி விபரீத முடிவை எடுத்து விட்டார். ஒருவருக்கொருவர், கருத்து வேறுபாடு இருந்தாலும், பெரும் அன்பு வைத்திருப்பதை இவை காட்டுகிறது. ஆனால் விட்டு கொடுத்து செல்லாத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கிறது என்கிறார்கள்.

அம்மா இல்லாமல் அந்த பிள்ளைகளின் எதிர்காலம் கேள்வி குறியாக அமைந்து விடும் என்பது தான் கவலைக்குறியது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: `கோயில் புதுபிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்' - தோழியுடன் இணை ஆணையர் கைது!

தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது தோழி கிரிஜா. ஜோதிலட்சுமி கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் ... மேலும் பார்க்க

நெல்லை: பழிக்குப் பழியாக தொடரும் கொலைகள் - 20 வருட பகைக்கு தந்தையுடன் 5 வயது மகனும் பலியான சோகம்

தலையைத் துண்டித்தது...நெல்லை மாவட்டம் அருகே உள்ள மூலச் சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. 45 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று (2-ம் தேதி) இவர் தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ்... மேலும் பார்க்க

வெனிசுலாவிருந்து கொண்டுவரப்பட்ட இந்திய மாலுமி உடல் - மூளை, இருதயம் உள்ளிட்ட உறுப்புகள் மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் செளகான் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரக்கு கப்பல் வேலைக்காக வெனிசுலா சென்றார். ஆனால் கடந்த மே மாத தொடக்கத்தில், அவர் வேலைக்கு சென்ற கம்பெ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் `ட்விஸ்ட்’ - லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கைது!

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும்போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். தொடர்ந... மேலும் பார்க்க

'ரகசிய ஷேவிங், பாலியல் ஆசைக்கு மறுப்பு' - பெண் வேடமிட்டு ஆணை மணந்த நபருக்கு நடந்த விபரீதம்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து கணவன்... மேலும் பார்க்க

`மிகவும் குண்டாக இருக்கிறாய்; உன்னால் குழந்தை பெற முடியாது!'- மனைவியை சித்ரவதை செய்து கொன்ற கணவன்

கர்நாடகா மாநிலம், தார்வாடு மாவட்டத்தில் உள்ள ஹனாசி என்ற கிராமத்தை சேர்ந்த பசவராஜ் என்பவர் பிரியங்கா என்ற செவிலியரை கடந்த 2024ம் ஆண்டு திருமணம் செய்தார். மல்யுத்த வீரரான பசவராஜ் திருமணமான சில மாதங்களில... மேலும் பார்க்க