செய்திகள் :

'தமிழ்நாட்டில் 7, பாஜக ரூட்டில் ஒரு ராஜ்ய சபா சீட்' - விட்டுக்கொடுத்த தினகரனுக்கு டெல்லி `பரிசு'?

post image

'விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை' எனச் சொல்லி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான கோபங்களை விட்டுக் கொடுத்து என்.டி.ஏ கூட்டணியில் அ.ம.மு.க-வை இணைத்திருக்கிறார் டிடிவி தினகரன். டெல்லியின் பேச்சுக்கு மரியாதைக்கு கொடுத்து கூட்டணிக்கு வந்ததால் அ.ம.மு.க-வுக்கு 'ராஜ்ய சபா சீட்' பரிசாக கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள் விவரப்புள்ளிகள்.

டிடிவி தினகரன்
டிடிவி தினகரன்

நம்மிடம் பேசிய அவர்கள், "2021 சட்டமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க விரும்பினார் டிடிவி தினகரன். '18 சீட் கொடுத்தால் கூட்டணிக்கு வருகிறேன்' என பா.ஜ.க தலைமைக்கு தூதுவிட்டார். பா.ஜ.க முயற்சித்தும்கூட சசிகலா, தினகரன் என யாரும் கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் வந்துவிடக் கூடாது என்பதில் உறுதிக்காட்டியது எடப்பாடி - பன்னீர் தரப்பு.

இதனால் அப்செட்டான டிடிவி தினகரன் தே.மு.தி.க உள்ளிட்ட சின்ன சின்ன கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். அவரை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ளாததன் விளைவாக அ.தி.மு.க-வின் வாக்குகள் பிரிந்து 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோல்வியை தழுவியதோடு ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் இழக்கும் நிலைக்கு எடப்பாடி தள்ளப்பட்டார்.

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இச்சூழலில் சுதாரித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, பலகட்ட ஆலோசனைகளுக்கு பிறகு 2026-ல் தி.மு.க-வை எதிர்க்கும் அனைத்து கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர சம்மதம் தெரிவித்தார்" என்றனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கூட்டணி விவகாரங்கள் குறித்து அ.ம.மு.க நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம்...

"2024 நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தோம். அதன்பிறகு 2025 ஏப்ரல் மாதம் அ.தி.மு.க என்.டி.ஏ-வுக்குள் வந்தவுடன் 'அ.ம.மு.க கூட்டணியில் இருக்கக்கூடாது' என கருதியது அ.தி.மு.க. எங்களுக்கான முக்கியத்துவம் குறையத்தொடங்கியதும் என்.டி.ஏ-வைவிட்டு விலகினோம். ஆனால் கடந்த மூன்றுமாதமாக எங்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தியது டெல்லி. உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் தினகரன்.

'அ.ம.மு.க வேண்டாம்' என முன்பு முரண்டுபிடித்த எடப்பாடி பழனிசாமியும் தேர்தல் வெற்றியை கருத்தில்கொண்டு எங்களுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்ததாக சொன்னார்கள். டெல்லியும் கூட்டணிக்கு வரும்படி வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்டது. அவர்களின் வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து நாங்களும் கூட்டணிக்கு ஒப்புக் கொண்டோம். ஆரம்பத்தில் 18 சீட் என்பதே எங்கள் கோரிக்கையாக இருந்தது.

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

10 சீட்டுக்கு மேல் வாய்ப்பில்லை எனச் சொல்லப்பட்ட நிலையில், எடப்பாடியுடன் கலந்தாலோசித்து 7 எம்.எல்.ஏ தொகுதிகளாக ஒப்பந்தமாகியிருக்கிறது. அதோடு பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருந்து ஒரு ராஜ்ய சபா சீட் தருவதாகவும் வாக்குக் கொடுத்திருக்கிறார்கள்" என்றனர்.

கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கினாலும்கூட தனது சொந்த கணக்கிலிருந்து எம்.பி சீட் கொடுத்து அ.ம.மு.க-வை கூட்டணிக்குள் இழுத்திருக்கிறது பாஜக என்கிற தகவல் தான் தற்போது அரசியல் மட்டத்தில் ஹாட் டாப்பிக்.!

`6.6% டு 7.3%: நினைத்ததை விட வேகமாக வளரும் இந்தியாவின் GDP; ஆனாலும் ஒரு சிக்கல்' - IMF அறிக்கை

2025-26 நிதியாண்டின் இந்தியாவின் GDP வளர்ச்சி விகிதம் 6.6 சதவிகிதமாக இருக்கும் என்று முன்பு கணித்திருந்தது சர்வதேச நாணய நிதியம். அந்தக் கணிப்பை இப்போது 7.3 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது அந்த அமைப்பு. சர்... மேலும் பார்க்க

டெல்லி குடியரசு தின விழா: விவிஐபியாகப் பங்கேற்கும் தேனி பளியர் பழங்குடியினத் தம்பதி; காரணம் என்ன?

இந்திய நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக பழங்குடியினரை அழைத்து அவர்களைக் கெளவரப்படுத்து வருகிறது மத்திய அரச... மேலும் பார்க்க

காசாவை மீட்கும் முயற்சி; ட்ரம்பின் 'அமைதி வாரியம்'; மெலோனி முதல் மோடி வரை; யார் யாருக்கு அழைப்பு?

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நீடித்து வரும் போரால் பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தப் பகுதியை ராணுவமற்ற மண்டலமாக மாற்றவும், மீண்டும் அந்தப் பகுதியைக் கட்டியெழுப்பவும் ... மேலும் பார்க்க

ஓமலூர்: வாடகைப் பிரச்னை; மதுப்பிரியர்கள் தொல்லை... காய்கறிச் சந்தையில் கால்வைக்காத வியாபாரிகள்!

சேலம் மாவட்டம், ஓமலூர் பேருந்து நிலையம் அருகில் புதிதாக சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு, தமிழ்நாடு நகராட்சித்துறை மற்றும் சுற்றுலாத்துறை‌ அமைச்சரால் 22.02.2025 என்று திறப்பு விழா கண்... மேலும் பார்க்க

திருவையாறு: சேதமடைந்த சாக்கடை - சாலை; நிலவும் சுகாதார சீர்கேடு; அலட்சியம் தவிர்ப்பார்களா அதிகாரிகள்?

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு மேல வீதியில் உள்ள சாக்கடை உடைந்து 8 மாதங்களாகியும் சரி செய்யவில்லை என்று குறைபடும் பொதுமக்கள், அதை உடனடியாகச் சீரமைத்து சுகாதாரத்தை உறுதிசெய்ய கோரிக்கை விடுத்தது வருகிகி... மேலும் பார்க்க

இலங்கை சிறையில் வாடும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்... மீட்கக் கோரி கண்ணீர் சிந்தும் மனைவி

தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரபு. இவருக்கு பிரபா என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மீனவர் பிரபு கடந்த சில வருடங்களாக மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து மதுரையில் உ... மேலும் பார்க்க