செய்திகள் :

தரையில் அமரும் பயணிகள்; மூக்கை பிடிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடு- பெரம்பலூர் பேருந்து நிலைய அவலம்

post image

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாணவர்கள், பணிக்குச் செல்வோர், ஊர்களுக்குச் செல்வோர் என தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்து சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இந்தப் பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு போதுமான இருக்கைகள், குடிநீர், அவசரத்துக்கு கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது, பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் அனைவரும் குப்பைகள் நிறைந்த நடைமேடையில் அமர்ந்தும், நின்றுகொண்டும் காத்திருக்க வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இதனால் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் தரையில் அமர வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

குப்பைகள் நிறைந்து காணப்படுவதால், பயணிகள் முகம் சுளித்தபடியே பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டி இருக்கிறது. போதிய குடிநீர் வசதியும் இல்லாததால் மக்கள் பணம் கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இங்குள்ள ஒரே இலவச கழிப்பறையும் முறையாகப் பராமரிக்கப்படாமல், தண்ணீர் வசதியின்றி, கழிவுநீர் தரையில் வழிந்தோடும் நிலையில் உள்ளது. ஆண்கள் கழிப்பறையில் சில பகுதிகள் மூடப்பட்டும், தண்ணீர் இல்லாமலும், துர்நாற்றத்துடனும் காணப்படுகின்றன.

முறையாகப் பராமரிக்கப்படாத குப்பைத் தொட்டிகளும், அமருவதற்கு இடமின்மையும் பயணிகளுக்குச் சிரமமாக உள்ளதோடு, இருசக்கர மற்றும் தனியார் வாகனங்கள் பேருந்து நடைமேடை வரை நிறுத்தப்படுவதும் பெரும் இடையூறாக உள்ளது. இதைத் தடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையினர் அறிவிப்புப் பலகைகள் வைத்தல், நேரில் சென்று கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நீண்டநாள்களாக நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகளை பொதுமக்களும் பயணிகளும் வலியுறுத்துகின்றனர்.

`லஞ்சம் கேட்டால் புகார் அளிக்கலாம்' - வாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தியிருக்கும் தமிழ்நாடு அரசு!

தமிழக அரசு ஊழியர்கள் யாரேனும் லஞ்சம் கோரினால், அதுகுறித்து 9498180936 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு செய்தி அனுப்பி இனி பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.ஊழலை ஒழிப்பதற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை... மேலும் பார்க்க

தமிழகத்தில் அதிவிரைவு சாலைகள் அமைக்க திட்டம்; விபத்துகளை குறைக்க தனி செயல் திட்டம் உருவாக்க உத்தரவு

தமிழகத்தில் சாலை உட்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதிவிரைவு சாலைகள் (Expressways) அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தவும், மாநிலத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை குறைக்... மேலும் பார்க்க

``ரூ. 104 கோடி மதிப்பிலான 1.27 கோடி படுக்கை விரிப்புகள் திருட்டு" - இந்திய ரயில்வே தகவல்

இந்திய ரயில்வேயின் ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் பெட்ஷீட்கள், துண்டுகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகள் போன்ற படுக்கை விரிப்பு பொருட்கள் பெருமளவில் திருடப்பட்டு வருவது தகவல் அறியும் உரிமை... மேலும் பார்க்க

சாதியும் ஆணவமும் நம் பிள்ளைகளைக் கொலை செய்வதைத் தடுப்போம்!

இலக்கியத்திலும் சினிமாக்களிலும் காதலைக் கொண்டாடுகிற நம் சமூகம், எதார்த்தத்தில் அதற்கு எதிராகவே செயல்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் காதலித்த குற்றத்துக்காக பல இளம் உயிர்கள் பறிபோயுள்... மேலும் பார்க்க

விகடன் செய்தி எதிரொலி: பயன்பாட்டுக்கு வந்த பூம்புகார் கடற்கரை கழிவறை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் பகுதியானது வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகும். இங்கு கடற்கரை மட்டுமன்றி, இரட்டைக் காப்பியங்களைப் பறைசாற்றும் சிலப்பதிகார கலைக்கூடமும் இடம்பெற்றுள்ளது.... மேலும் பார்க்க

``எழுத்தாளர் பூமணியின் இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை" - முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழ் இலக்கிய உலகின் மிக முக்கிய ஆளுமையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த எழுத்தாளரும் இயக்குநருமான பூமணி (79), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணியளவில் காலமானார்.கரிசல் ம... மேலும் பார்க்க