செய்திகள் :

`தவெகவுடன் கூட்டணி பேசவில்லை' - காங் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அதிரடி

post image

சட்டமன்றத் தேர்தலையொட்டி சத்யமூர்த்தி பவன் பரபரப்பாகியிருக்கிறது. தமிழக காங்கிரஸின் எதிர்ப்பை மீறி கூட்டணிக்குள் ஊதுபத்தி கொளுத்திக் கொண்டிருக்கிறார் பிரவீன் சக்கரவர்த்தி. ஜோதிமணி காங்கிரஸின் உட்கட்சி பூசலை ஓபனாக போட்டுடைக்க, இன்னொரு பக்கம் பிரபாகரன் படத்தை காரணம் காட்டி வைகோ அமைத்த கூட்டணி மேடையில் ஏறாமல் தவிர்த்திருக்கிறது தமிழக காங்கிரஸ்.

செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர்
செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர்

இந்த விவகாரங்கலெல்லாம் பல யூகங்களுக்கு வழிவிட பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசியிருக்கிறார் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.

அவர் பேசியதாவது, 'தமிழக காங்கிரஸை வலுப்படுத்தும் திட்டங்கள் குறித்து யோசிக்கப்படும். ஜோதிமணியின் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்கப்படும். உட்கட்சி விவகாரங்கள் பொதுவெளிக்கு செல்லக்கூடாது. இதுபோன்ற கருத்துகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தும்.

செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர்
செல்வப்பெருந்தகை, கிரிஷ் சோடங்கர்

கரூர் மாவட்ட காங்கிரஸிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி பேசுகிறது என்பது வதந்தி. திமுகவுடன் மட்டுமே கூட்டணி குறித்து பேசிவருகிறோம். திமுகவுடன் எங்களுக்கு நம்பகத்தன்மைமிக்க கூட்டணி உள்ளது. அதனால்தான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே குழு அமைத்து திமுகவுடன் பேசி வருகிறோம்' என்றார்.

தவெகவும் காங்கிரஸூம் கூட்டணிக்காக பேசிவருகின்றன என அரசியல் வட்டாரத்தில் புகை கிளப்பிக் கொண்டிருந்த விவகாரத்தும் தற்காலிகமாக ஒரு முற்றுப்புள்ளியை கிரிஷ் சோடங்கர் வைத்திருக்கிறார்.

`தேர்தல் நேரத்தில் யார் எதிரி, யார் துரோகி என்று என் கண்களுக்குத் தெரியாது' - டி.டி.வி.தினகரன்

அமமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தஞ்சாவூரில் உள்ள மஹாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, பல்வேறு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகள் மூலம்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : `போருக்குத் தயாராகுங்கள்' | மொழிப்போரின் வீர வரலாறு - 1

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 1 மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர் மணா‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு… எங்கள் பகைவர் எங்கோ மறைந்தா... மேலும் பார்க்க

சென்னை: பயன்பாட்டுக்கு வந்த மெரினா `இரவு நேர காப்பகம்' - விரிவாக்கும் திட்டத்தில் சென்னை மாநகராட்சி!

சென்னை மெரினா கடற்கரை சுற்றுலாத்தளம் என்பதையும் தாண்டி, பலரின் வாழ்வாதாரத்திற்கான வாழ்விடமாகவும் இருந்து வருகிறது. சிறு உணவு கடைகள் தொடங்கி கைவினை பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள், குதிரைகளை வைத்து ப... மேலும் பார்க்க

`2029-ல் அமித் ஷா காலியாகிவிடுவார்' - சொல்கிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி

திண்டுக்கல் மாவட்டத்துக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 7-ம் தேதி வருகை தர உள்ளார். இதற்காக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மைதானத்தில் மேடைக... மேலும் பார்க்க

'திமுக, அதிமுக, தவெக' - யாருடன் கூட்டணி? பெட்டி வைத்து வாக்கெடுப்பு நடத்திய பிரேமலதா!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இன்னமும் கூட்டணி முடிவை எடுக்காமல் இருக்கிறது தேமுதிக. திமுக, அதிமுக என இரண்டு தரப்பும் தேமுதிகவுக்கு வலை விரிக்கிறது.தேமுதிக மா.செக்கள் கூட்டம்9 ஆம் தேதி கடலூரி... மேலும் பார்க்க

India - America:``என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம்"- பிரதமர் மோடிக்கு 'செக்' வைக்கும் ட்ரம்ப்!

உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. அதன்பிறகும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ததாகக் கூறி இந்திய பொருட்களுக்கு 50 சதவிகித வரி விதி... மேலும் பார்க்க