செய்திகள் :

தாமிரபரணி ஆறு: ”தண்ணீர் எடுக்கும் நிறுவனங்களிடம் லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலா?” - ஐகோர்ட் கேள்வி

post image

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து தற்போது வரை ஒரு லிட்டருக்கு ஒரு பைசாதான் வசூலிக்கப்பட்டு வருகிறதா? என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான காமராஜ், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “நான் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட பதிலில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல நிறுவனங்கள், நீர் வரி பாக்கியைத் தராமல் சுமார் ரூ.2.50 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தியுள்ளன.

தனியார் சிமெண்ட் ஆலை மற்றும் சில நிறுவனங்கள் நீர் வரி பாக்கியைச் செலுத்தாமல் தொடர்ந்து நீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றன.

தாமிரபரணி ஆறு
தாமிரபரணி ஆறு

இதனால், அரசுக்கு தொடர் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதுடன் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிக்கிறது. தாமிரபரணி ஆற்றிலிருந்து நீர் எடுத்துவரும் அனைத்து நிறுவனங்களிடமும் நீர் வரி பாக்கியை வசூலித்து அந்த நிதியை மாசுபட்டு வரும் தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு மற்றும் புனரமைப்பிற்குப் பயன்படுத்த வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். பொதுப்பணித்துறை தரப்பில், “அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லிட்டர் ஒரு பைசா வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களிடம் லிட்டர் ஒன்றுக்கு ஒரு பைசாதான் இன்று வரை வசூலித்து வருகிறீர்களா? எத்தனை நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கின்றன.

தாமிரபரணி ஆறு

நாள் ஒன்றுக்கு எத்தனை அளவு தண்ணீர் எடுக்கப்படுகிறது? இதுவரை எடுக்கப்பட்ட லிட்டர் அளவு என்ன? இதற்காக நிர்ணயித்த தொகை எவ்வளவு என மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” எனக் கூறி உத்தரவிட்டுள்ளனர்.

சேலம்: திமுக பிரமுகர் சுட்டுக்கொலை; மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை; பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்துள்ள கிராங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். திமுக கிளை செயலாளராக உள்ளார். ராஜேந்திரனுக்கும், பக்கத்து தோட்டத்தில் வசித்து வரும் இவரது உறவினர்களான ராஜமாணிக்கம், ... மேலும் பார்க்க

`கை எப்படி குளர்ச்சியாக இருக்கு?' - ஆசிரியை சித்ரவதையால் மாணவி தற்கொலை; அடுத்தடுத்த 4வது சம்பவம்

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் 11வது வகுப்பு படித்து வரும் மாணவி ஷாக்சி(17). இம்மாணவி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இர... மேலும் பார்க்க

ஊட்டி: காட்டு மாடுகளைச் சுட்டு கொல்லும் கேரள வேட்டைக்கும்பல்; வேடிக்கை பார்க்கிறதா வனத்துறை?

கேரளா, கர்நாடகா மாநிலங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் முச்சந்திப்பு பகுதியில் அமைந்திருக்கிறது நீலகிரி மாவட்டம். வனங்கள் அடர்ந்த நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைப் போல ஊடுருவும் வேட்டைக் கும்பல்கள் வனவிலங... மேலும் பார்க்க

விருதுநகர்: ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனுக்கு கண் பார்வை இழப்பு; பள்ளி நிர்வாகம் மீது வழக்கு

விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் மாணவனின் இடது கண் பாதிக்கப்பட்டு செயல் இழந்துள்ளது.மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகேயுள்ளது எம்.புதுப்பட்டி இப்பகுதியைச் சேர்ந்தவர... மேலும் பார்க்க

பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் கொடுமை வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை!

2024 ஆண்டின் துவக்கத்தில் ஆடியோ ஒன்று வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் இருக்கும் உரையாடலை வைத்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் புகாரில் ம... மேலும் பார்க்க

அதிமுக முன்னாள் MLA கொலையில் 20 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பு; பவாரியா கொள்ளையர்கள் 3 பேர் குற்றவாளி!

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கொலை வழக்கில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பவாரியா கொள்ளையர்கள் 3 பேரை குற்றவாளி எனச் சென்னை நீதிமன்றம் இன்று (நவம்பர் 21) தீர்ப்பளித்திருக்கிறது.முன்னதாக, 2005 ஜனவரி 9-ம் தேதி கு... மேலும் பார்க்க