செய்திகள் :

திருச்செந்தூர்: ”எங்க தாத்தாவுக்கு ஓட்டு போடுங்கள்” - பேரன்களைக் களமிறக்கிய அனிதா ராதாகிருஷ்ணன்

post image

திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில், தொடர்ந்து ஏழாவது முறையாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ளார். தொகுதியில் சில இடங்களில் அவர் மீது மக்களுக்கு அதிருப்தி நிலவி வருகிறது.

அவர் பிரசாரத்திற்குச் சென்ற இடங்களில் பெண்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்

கடற்கரை கிராமங்கள், இஸ்லாமிய சமூக மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் இதுவரை தி.மு.க-விற்குச் சாதகமாக கிடைத்து வந்த வாககுகள், தற்போது த.வெ.க பக்கம் திரும்பும் நிலை நிலவுகிறது.

இதனால், தொகுதிக்குள் வாக்காளர்களை சென்டிமென்ட் மூலம் கவர தனது பேரன்களைப் பிரசாரத்தில் களமிறமிறக்கியுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் மணப்பாடு கிராமப்பகுதியில், திறந்த வாகனத்தில் பிரசாரம் மேற்கொண்டார் அனிதா ராதாகிருஷ்ணன்.

அவருடன் இரண்டு பேரன்களான அத்யந்த் கிருஷ்ணா, ஆதவ் கிருஷ்ணா ஆகிய இருவரையும் அழைத்துச் சென்றிருந்தார். அவர்கள், “எங்கள் தாத்தாவிற்கு ஓட்டு போடுங்கள்; அவர் உங்களுக்கு நல்லதே செய்வார்; அவர் கொடுத்த வாக்கினை மீற மாட்டார்” எனப் பேசினர். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூவரில் யாருமே அரசியலுக்கு வரவில்லை.

அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம்
அனிதா ராதாகிருஷ்ணன் பிரசாரம்

இதனால், தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாமலும் இருந்தார். தொகுதிக்குள் நிலவும் அதிருப்தியைச் சரி செய்யவும், வரும் காலங்களில் தனது அரசியல் வாரிசுகள் தயாராக உள்ளனர் என்பதைத் தெரிவிக்கும் வகையிலும், பேரன்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியுள்ளார் அண்ணாச்சி என்கின்றனர் அவரின் ஆதரவாளர்கள்.

`ராயபுரத்தால் நான்... ராயபுரத்துக்காக நான்!' - `இஸ்லாமியர்களின் செல்லப்பிள்ளை’ டி.ஜெயக்குமார்

ராயபுரத்தில் ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த டி.ஜெயக்குமார் ஏழாவது முறையாகத் தேர்தல் களத்தில் இருக்கிறார். "கடந்த ஐந்து முறையைக் காட்டிலும், வரும் தேர்தலில் கூடுதல் வாக்குகளைப் பெற்று, ஆறாவது ம... மேலும் பார்க்க

ஜோலார்பேட்டையில் ஜொலிக்கும் தி.மு.க வேட்பாளர் - களத்தில் முந்தும் கவிதா தண்டபாணி

“தி.மு.க-வின் ஐந்தாண்டுக்கால ஆட்சியும், தமிழக முதல்வர் கொண்டுவந்த திட்டங்களுமே தி.மு.க-வின் திராவிட மாடல் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைக்கும். எங்கள் தொகுதியில் தி.மு.க-வுக்கு உள்ள ஆதரவைப் பார்த்தா... மேலும் பார்க்க

NOTA: தேர்தலில் 'நோட்டா'அறிமுகமானது எப்படி?|Vote Vibes

ஜனநாயக நாட்டில் வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு வேட்பாளர்களை நிராகரிப்பதும் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்ற நோக்கில் கொண்டுவரப்பட்டது தான் நோட்டா. இந்த நோட்டா எப்படி அமலுக்கு வந்தது என... மேலும் பார்க்க

ஈரான் 'ஏஜென்ட்' ஆக மாறிய அமெரிக்கப் பெண்: கோடிக்கணக்கில் ஆயுத பேரம் - சிக்கியது எப்படி?

ஈரான் அரசுக்காக ரகசியமாகச் செயல்பட்டு, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை கடத்த உதவியதாக ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட ஷமிம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘ஹை-ஃபிளையிங்’ (High-Flying) பிச... மேலும் பார்க்க

தி.நகர் தொகுதிக்குத் திருப்பம் தரும் 6 அம்ச திட்டம்! பட்டியலிடும் ராஜா அன்பழகன்

"நம் மாநில நலன், சமூகநீதி, மொழி உரிமை ஆகியவற்றில் சுதந்திரமற்ற தன்மையை உண்டாக்கி மதச்சார்பின்மை கொள்கையைச் சீர்குலைய செய்யும் நோக்கில் ஒன்றிய பி.ஜே.பி அரசு செயல்படுகிறது. அதன் பிடியிலிருந்து நமது நாட்... மேலும் பார்க்க

ஆவடி தொகுதி: “ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்’’ - அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “ஆவடி தொகுதியின் தி.மு.க வேட்பாளரும் அமைச்சர் சா.மு.நாசரை ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வையுங்கள்” என்று கூறியுள்ளார். இதையடுத்து ஆவடி தொகுதி வேட்பாளரு... மேலும் பார்க்க