செய்திகள் :

திருப்பதி: `இது பட்டு இல்ல பாலிஸ்டர்' ரூ.54 கோடி மோசடி - சோதனையில் அதிர்ச்சி

post image

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பட்டு துப்பட்டா வழங்கியதில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தனம் போர்டு தலைவர் பி.ஆர்.நாயுடு, கோயிலுக்கு வழங்கப்படும் பட்டு துப்பட்டா, டெண்டரில் குறிப்பிடப்பட்டிருக்கிற தரத்துடன் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

போலி துப்பட்டா வழங்கி மோசடி

உடனே துப்பட்டா மாதிரிகள் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டத்தில் பட்டு துணியில் தயாரிப்பதற்கு பதில் சுத்தமான பாலிஸ்டர் துணியில் துப்பட்டா தயாரிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. பாலிஸ்டர் துணி மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் வி.ஐ.பி பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்த பிறகு அவர்களை கோயில் பண்டிதர்கள் கெளரவிப்பது வழக்கம். அவ்வாறு கெளரவிக்கப்படும் வி.ஐ.பி.க்களுக்கு பட்டு துப்பட்டா வழங்குவது வழக்கம்.

திருமலை திருப்பதி
திருமலை திருப்பதி

இதற்காக அடிக்கடி பட்டு துப்பட்டா கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டிலிருந்து இதுவரை ஆந்திராவில் உள்ள நகரி என்ற இடத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம்தான் இந்த துப்பட்டாவை 10 ஆண்டுகளாக சப்ளை செய்துவருகிறது. பட்டுக்கு பதில் மலிவு விலையில் கிடைக்கும் பாலிஸ்டரில் துப்பட்டா சப்ளை செய்தது குறித்து முழுமையான விசாரணை நடத்தும்படி ஆந்திரா லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திருப்பதி தேவஸ்தானம் போர்டு உத்தரவிட்டிருக்கிறது.

ரூ.54 கோடி மோசடி

அதனடிப்படையில் புதிதாக வந்த பட்டு துப்பட்டாவில் இருந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மாதிரிகளை எடுத்துச்சென்றுள்ளனர். தவறு செய்தவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திருப்பதி தேவஸ்தனம் போர்டு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துப்பட்டாவில் நான்கு புறமும் பட்டால் நெய்யப்பட்டிருக்கும். `ஓம் நமோ வெங்கடேசாயா' என்று ஒரு புறம் சமஸ்கிருதத்திலும், மற்றொருபுறம் தெலுங்கிலும் எழுதப்பட்bருக்கும். மேலும் சங்கு, சக்கரம், நாமமும் இடம்பெற்றிருக்கும். கடந்த 10 ஆண்டில் போலி துப்பட்டா சப்ளை செய்ததில் ரூ.54.95 கோடி அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது.

பெண் எரித்துக் கொலை; நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை - முன்னாள் காவலர் கைதான அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் அருகே உள்ள வட்டமலைக்கரை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் கடந்த 5-ஆம் தேதி பிணமாக கிடந்தார். அங்கு கால்நடைகளை மேய்க்கச் சென்றவர்கள் கொடுத்த தகவலின் அடிப்ப... மேலும் பார்க்க

குமரி: தனியார் ரிசார்ட்டில் பிறந்தநாள் விழா பெயரில் 'போதை கூடுகை'- 7 பேரை கைதுசெய்த குமரி போலீஸ்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இடத்தில் ஆற்றின் கரை ஓரமாக தனியாருக்கு சொந்தமான ரிசார்ட் இயங்கி வருகிறது. இங்கு தடை செய்யப்பட்ட உயர் ரக போதை பொருட்கள் பயன்படு... மேலும் பார்க்க

25 பேர் பலியான கோவா நைட் கிளப் தீ விபத்து; டெல்லி மருத்துவமனையில் உரிமையாளர் ஒருவர் கைது

சுற்றுலாவிற்கு மிகவும் புகழ்பெற்ற கோவாவில் கடந்த வாரம் ‘Birch by Romeo Lane’ என்ற நைட்க்ளப்பில் திடீரென இரவில் தீப்பிடித்ததில், சுற்றுலா பயணிகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இத்தீவிபத்து தொடர... மேலும் பார்க்க

தண்ணீரா? ஆசிட்டா? முகமூடி கொள்ளையனை விரட்டிய 70 வயது மூதாட்டி - வைரல் வீடியோ

சிவகாசி பழனியாண்டவர்புரம் காலனியில் வசிப்பவர் மகேஸ்வரி (70). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதிகாலை 5 மணியளவில் தனது வீட்டின் முன்பக்கக் கதவைத் திறந்து வாசல் பகுதியைத் தண்ணீர் தெளித்துச்... மேலும் பார்க்க

`அவனுடன் இருப்பது போன்று என்னுடனும்.!’ - பெண்ணுக்கு தொல்லை; நண்பனை வெட்டி போர்வெல்லில் போட்ட வாலிபர்

குஜராத் மாநிலம் மேற்கு கட்ச் பகுதியில் நாகத்ரனா எனும் பகுதியின் அருகில் உள்ள முரு என்ற கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(20) என்ற வாலிபரை கடந்த சில நாட்களாக காணவில்லை. இதையடுத்து ரமேஷ் சகோதரர் இது குறித்து போலீ... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது

பாலியல் வன்முறைஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்... மேலும் பார்க்க