செய்திகள் :

திருப்பத்தூர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவு: முத்தரசன் இரங்கல்

post image

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட முன்னணி தலைவர் திருப்பத்தூர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம் (71) சனிக்கிழமை காலை (ஜன.11) 9 மணியளவில் சென்னை, ராஜீவ்காந்தி அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார்.

இந்த நிலையில், முத்துராமலிங்கம் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள காவனூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தோழர் எஸ்.முத்துராமலிங்கம்.

சிறு வயதிலேயே கம்யூனிஸ்டு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தவர்.

விவசாயிகள் இயக்கத்தின் மூத்த தலைவர் மு.ஆதிமூலம், கூத்தக்குடி எஸ்.சண்முகம், மங்களசாமி, ஆர்.எச்.நாதன், மகாலிங்கம் போன்ற தோழர்களுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பை பெற்று சிறப்பாக பணியாற்றி வந்தார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த காலத்தில் தீவிரமான இயக்கங்களை நடத்தியவர். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினர், சிவகங்கை மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர். மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் என்ற பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டு தனி முத்திரை பதித்தவர்.

இதையும் படிக்க |பட்டினிச் சாவு இல்லாத மாநிலம் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

முத்துராமலிங்கத்தின் வாழ்விணையர் மு.கண்ணகி இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர். இவர்களுக்கு ஜீவானந்தம் என்ற ஒரு மகன் இருக்கிறார்.

முத்துராமலிங்கத்தின் நல்லுடல் சென்னை மருத்துவமனையில் இருந்து, திருப்பத்தூருக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மக்கள் மரியாதை செலுத்த வைக்கப்படுகிறது. அங்கிருந்து ஞாயிற்றுக்கிழமை(ஜன.12) பிற்பகல் 3 மணிக்கு அவரது நல்லுடல் சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு வழங்கப்படுகிறது.

அவரது மறைவுக்கு செவ்வணக்கம் கூறி, ஆழ்ந்த இரங்கலையும் அவரைப் பிரிந்து வாடும் அவரது வாழ்விணையர் மு.கண்ணகி, மகன் ஜீவானந்தம் உள்ளிட்ட குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளாா்.

மனைவியைத் துன்புறுத்தியவர் திட்டமிட்டு கொலை! விசாரணையில் திருப்பம்!

மகாராஷ்டிரம், தானேயில் தன் மனைவியைத் துன்புறுத்தியவரைத் திட்டமிட்டு கொலை செய்த நபரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்,கடந்த ஜன.11 சுகந்த் ஷத்ருகனா பரிதா (29) என்பவர் நரேஷ் ஷம்பு பகத் வீட்டில் உயிரிழந... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்கு மின்சாரம் தரும் "முட்டை!” பதற வைத்த தனியார் நிறுவன அறிவிப்பு!

என்ரோன் எனும் அமெரிக்க தனியார் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு பலரையும் திகைக்க வைத்துள்ளது! என்ரோன் எக் (Enron Egg) எனும் புதிய தயாரிப்பை உலகுக்கு அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். உலகின் ஆற்றல் நெருக... மேலும் பார்க்க

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.1452.97 கி.மீ. நீளமுள்ள 746 சாலைகள் அமைக்க ரூ.804.59 கோடியும் அச்சாலைகளின் 5 ஆண்டு ... மேலும் பார்க்க

தமிழர் திருநாளில் தமிழகம் தலைநிமிர உறுதி ஏற்போம்: விஜய் வாழ்த்து!

பொங்கல் திருநாளையொட்டி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் நடிகர் விஜய், ”பொங்கல் திருநாள்! உலகமே போற்றி வணங்கும் உழவர் ... மேலும் பார்க்க

100 நாள் வேலைத் திட்டம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டத்தின் ஊதிய நிலுவைத் தொகையை விடுவிக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உத்தரவாத... மேலும் பார்க்க

‘சென்னை சங்கமம்’ கலைத் திருவிழா: முதல்வர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சென்னை சங்கமம் கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜன.13) தொடக்கி வைத்தார்.கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் தொடக்க விழா நடைபெறுற்று வருகிறது. இ... மேலும் பார்க்க