Karuppu Release: "இது நடந்திருக்கக்கூடாது; நானும் இதை எதிர்பார்க்கல!" - கண்கலங்க...
திருமணத்தை மீறிய உறவு; கணவருடன் தனிமையில் இருந்த பெண்ணை கொலை செய்து புதைத்த மனைவி- நடந்தது என்ன?
தூத்துக்குடி, சங்கரப்பேரி ஹவுசிங்போர்டு காலனியைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர், காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் பிருந்தாதேவி. இவருக்கும் கிருஷ்ணகுமார் என்பவருக்கும் திருமணமாகி 9 வயதில் மகனும்,6 வயதில் மகளும் உள்ளனர். கிருஷ்ணகுமார் குவைத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டில் வெல்டிங் காண்ட்ராக்ட் கம்பெனி நடத்தி வரும் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரவணப்பிரியா. இவர்களுக்கு 10 வயதில் மகனும், 8 வயதில் மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், நேற்று காலையில் இருந்து பிருந்தாதேவியைக் காணவில்லை. இதனால், பிருந்தாதேவியின் தந்தை செல்லதுரை, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பிருந்தாதேவியின் வீட்டின் முன்பிருந்த சி.சி.டி.வி கேமராபதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மாரிமுத்து தனது வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் செல்வதும், சிறிது நேரத்தில் பிருந்தாதேவி அவரது வீட்டிற்குள் செல்வதும் பதிவாகியிருந்தது.
பின்னர், மாரிமுத்துவின் வீட்டில் இருந்து பிருந்தாதேவி வெளியானதாக எந்த பதிவும் இல்லை. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், மாரிமுத்து, அவரது மனைவி சரவணப்பிரியாவிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிருந்தாதேவையை கொலை செய்து உடலை காரில் ஏற்றி ஓட்டப்பிடாரத்தில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் புதைத்ததை ஒப்புக்கொண்டனர். இதுகுறித்து சிப்காட் போலீஸார், “பிருந்தாதேவியின் கணவர் குவைத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், பக்கத்து வீட்டு மாரிமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்தவீடு என்பதால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் வீட்டின் ஒரு அறையில் சரவணப்பிரியா, குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்த நிலையில்,மற்றொரு அறையில் பிருந்தாதேவியும் மாரிமுத்துவும் தனிமையில் இருந்துள்ளனர்.

திடீரென கண் விழித்த சரவணப்பியா இதனை பார்த்துள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன் கணவரை வெளியே தள்ளி அறையின் கதவை பூட்டிய சரவணப்பிரியா, பிருந்தாதேவியின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார் சரவணப்பிரியா. பின்னர், மாரிமுத்து மற்றும் தன் தம்பி கார்த்திக்கின் உதவியுடன் பிருந்தாதேவியின் உடலை ஓட்டப்பிடாரம் சிலோன்காலனியில் உள்ள தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அவரது உடலை குழி தோண்டி புதைத்துள்ளனர். இதில் காருடன் தலைமறைவான கார்த்திக்கை தேடி வருகிறோம்” என்றனர்.








.jpeg)







