செய்திகள் :

திற்பரப்பில் பீதியைக் கிளப்பும் முதலை; மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கும் எம்.எல்.ஏ!

post image

இயற்கை எழில் சூழ்ந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு அருவி. ஆண்டின் அனைத்து நாள்களிலும் தண்ணீர் கொட்டும் என்பதால் தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர். பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேறும் உபரி தண்ணீர் கோதையாறு வழியாகப் பாய்ந்து வரும் வழியில், திற்பரப்பு பகுதியில் அருவியாகப் பாய்கிறது. திற்பரப்பு அருகே உள்ள தோட்டவாரம் பகுதிக்கும் செங்குழிக்கரை-க்கும் இடையே ஓடும் கோதையாற்றின் உள்பகுதியிலுள்ள தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆற்றில் அமைந்திருக்கும் அந்தக் குடிநீர்த் தொட்டியின் மேற்பகுதியில் முதலை ஒன்று ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதை சில நாள்களுக்கு முன் அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், முதலை நடமாட்டம் குறித்து உறுதி செய்ய இயலாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே தொழிலாளி ஒருவர் அதிகாலையில் ரப்பர் பால் வெட்டுவதற்காகச் சென்ற சமயத்தில் ஆற்றில் உள்ள தண்ணீர்த் தொட்டிக்கு மேல் படுத்திருந்த முதலையை பார்த்து செல்போனில் போட்டோ எடுத்தார். அதைத் தொடர்ந்து முதலை நடமாட்டம் உறுதிசெய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்றும் அதற்கு முந்தைய தினமும் பலமுறை மக்கள் முதலையை நேரில் பார்த்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு அச்சம் தொற்றிக்கொண்டது.

முதலை நடமாட்டம் கண்டறியப்பட்ட பகுதியில் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ ஆய்வு

மக்கள் குளிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கும் அதிகமாகப் பயன்படுத்தும் ஆற்றில் முதலை நடமாட்டம் உறுதிசெய்த பின்பும், முதலையைப் பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஏற்பட்டதால், மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் திற்பரப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், களியல் பகுதி வனத்துறை ரேஞ்சர் முகைதீன் அப்துல்காதர் தலைமையில் வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர். வனத்துறை சார்பில் எடுக்கப்படும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள், முதலையை அப்புறப்படுத்த மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

தாரகை கத்பர்ட்

பின்னர் தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ கூறுகையில், "முதலை நடமாட்டம் உள்ள ஆற்று பகுதியில் மக்கள் சில நாள்களுக்கு இறங்காமல் இருக்கவேண்டும். முதலையைப் பிடித்து அப்புறப்படுத்த வனத்துறை சார்பில் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ஆற்றில் எத்தனை முதலைகள் உள்ளன என்பதை உறுதி செய்ய வனத்துறை தெர்மல் இமேஜ் எடுக்க முடிவு செய்துள்ளது. அதற்காக ட்ரோன் கேமரா மூலமாக படம் எடுக்கும் பணிகள் துவங்கும். கணக்கெடுக்க வசதியாக ஆற்றோரம் உள்ள புதர்கள் அகற்றப்படும்.

எத்தனை முதலைகள் ஆற்றில் உள்ளன என்பதை உறுதிசெய்துவிட்டால், அதை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒருசில நாள்களில் இந்தப் பணிகள் முழுமைபெறும். மக்களின் பாதுகாப்பு சார்ந்த விஷயம் என்பதால் இந்தப் பணிகளை நான் தொடர்ந்து கண்காணிக்க முடிவு செய்துள்ளேன். மக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆனால், முதலைகளைப் பிடித்து அப்புறப்படுத்தும் வரை குறிப்பிட்ட பகுதியில் ஆற்றில் இறங்க வேண்டாம்" என்றார்.

சறுக்கிய தமிழ் வேட்பாளர்கள்; 5 முறை கவுன்சிலராக இருந்த ரவி ராஜா, மாரியம்மாள் தாராவியில் தோல்வி!

மும்பை மாநகராட்சி தேர்தலில் தாராவியில் உள்ள 185வது வார்டில் பா.ஜ.க சார்பாக ரவி ராஜா போட்டியிட்டார். ரவி ராஜா இதற்கு முன்பு 5 முறை காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு மும்பை மாநகராட்சியில் கவுன்சிலராக இருந்... மேலும் பார்க்க

Iran: 9 வயதில் ஈரானிலிருந்து வெளியேற்றம்; ஈரானின் கடைசி ஷாவின் மகளான லெய்லா பஹ்லவியின் சோக கதை!

ஈரானில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில், இளவரசர் ரெசா பஹ்லவி மீண்டும் பரபரப்பான செய்தியாக மாறியிருக்கிறார். ஆயத்துல்லா கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஈரானியர்கள், நாட்டில் மீண்டு... மேலும் பார்க்க

புனே: `பிரிந்தவர்கள் ஒன்று சேர்ந்தும் பயனில்லை' - பவார் குடும்பத்திடமிருந்து கைநழுவிப்போன கோட்டை!

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மாநகராட்சி தேர்தலில் கடந்த 2023-ம் ஆண்டு இரண்டாக பிரிந்த தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டும் இணைந்து புனே மற்றும் அதன் அருகில் உள்ள பிம்ப்ரி-சிஞ்ச்வாட் மாநகராட்சி தேர்த... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு வரலாறு காணாத வெற்றி

மகாராஷ்டிராவில் மும்பை உட்பட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. மும்பையில் ஏற்கனவே பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் இணைந்து ஆட்சியை பிடித்துள்ள நிலையில் மா... மேலும் பார்க்க

சுவாச நோய்களால் 9,211 பேர் உயிரிழப்பு; டெல்லி அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

2024-ஆம் ஆண்டில் மட்டும் சுவாச நோய்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்திருப்பதாக டெல்லி அரசு அறிக்கை வெளியிட்டிருக்கிறது.தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு பொதுமக்களின... மேலும் பார்க்க

கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவு... மேலும் பார்க்க