செய்திகள் :

”தீக்கொளுத்தும் வேலையைத் தவிர மக்களுக்கான எந்தப் பணியையும் மத்திய அரசு செய்யவில்லை” - அப்பாவு

post image

நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “தமிழக முதல்வர் சட்டப்படி ஆட்சி நடத்தி வருகிறார். பல மாநிலங்களில் ஆளுநரை அழைக்காமலேயே சட்டமன்றம் நடத்தப்படுகிறது.

நமது முதல்வர் அதுபோன்ற முடிவை ஒருபோதும் எடுக்க மாட்டார். இவ்வாண்டும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு ஆளுநருக்கு அழைப்பு விடுப்போம். அவர் வருவார் என நம்புகிறோம்.

சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு
சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் எப்படி நடந்து கொள்கிறார்களோ, அதுபோன்று தமிழகத்திலும் நடந்து கொள்ள வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை காங்கிரஸும், தி.முகவும் கொண்டு வந்தது என்ற கோபத்தில் மத்திய அரசு பார்க்கிறது.

நாடு முழுவதும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 42 கோடி மக்கள் பயன்பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.1 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டு வந்தது. இதில், தமிழகத்தின் பங்காக ரூ.10 ஆயிரம் கோடி கிடைக்கும். தற்போது இந்தத் திட்டத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடிதான் கொடுப்பேன் என்றால் எப்படி வரவேற்க முடியும்?

பா.ஜ.க ஆட்சி அல்லாத மாநிலங்களுக்கு கல்வித்திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியைக் கொடுக்காமல் மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. ரயில்வே கட்டண உயர்வைப் பொறுத்தவரையில் மக்களிடமிருந்து பணத்தைப் பிடுங்குவதுதான் மத்திய அரசின் வேலையாக உள்ளது.

தீக்கொளுத்தும் வேலையைத் தவிர மத்திய அரசு மக்களுக்கான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை.

அப்பாவு
அப்பாவு

ஏழை மக்களுக்கான எந்தத் திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அணுசக்தி நிலையங்களை நிர்வகிப்பதையும், பராமரிப்பதையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவால், பொதுமக்களின் பாதுகாப்பும் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகும்.

கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் அதிகளவில் புற்றுநோய் பரவி வருகிறது. மத்திய அரசின் தற்போதைய முடிவால் நாடு முழுவதும் புற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது” என்றார்.

இந்தியா, நியூசிலாந்து இடையே முடிவான ஒப்பந்தம்; எந்தெந்த துறைக்கு லாபம்? உள்ள ஒரே ஒரு சிக்கல் என்ன?

'இந்தியா - நியூசிலாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் நேற்று முடிவாகி உள்ளது' - இது தான் இன்று எந்தப் பக்கம் திரும்பினாலும், அதிகம் பேசப்படும் ஒன்று. இந்தியா - நியூசிலாந்து பேச்சுவார்த்தை இந்தியா, ... மேலும் பார்க்க

TVK : 'காரை மறித்த பெண் நிர்வாகி; நிற்காமல் சென்ற விஜய்! - என்ன நடந்தது?

பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு வருகை தந்த விஜய்யின் காரை பெண் நிர்வாகி ஒருவர் மறிக்க, நிற்காமல் விஜய்யின் கார் கடந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.Ajithaதவெக சார்பில் ஏற்கெனவே 120 ... மேலும் பார்க்க

"SIR -ல் என் குடும்பத்தினரின் ஓட்டையே பிரித்துவிட்டார்கள்" - செல்லூர் ராஜூ

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் தெப்பக்குளம் பகுதியிலுள்ள அரங்கத்தில் நடந்தது.செல்லூர் ராஜூஇக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்போ... மேலும் பார்க்க

'உழைச்சவங்களுக்கு மதிப்பே இல்லையா?' - பனையூர் அலுவலகம் முற்றுகை; குமுறும் நிர்வாகிகள்!

பனையூரில் உள்ள தவெகவின் தலைமை அலுவலகத்தை நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் முற்றுகையிட்டிருப்பதால் பரபரப்பாகியிருக்கிறது.பனையூர்தவெக சார்பில் 120 மாவட்டச் செயலாளர்களை விஜய் ஏற்கனவே அறிவித்திருக்கிறார்.இன்னு... மேலும் பார்க்க

மும்பை தேர்தலில் மனைவி, வாரிசு, உறவுகளுக்கு சீட் கேட்கும் தலைவர்கள்: நெருக்கடியில் அரசியல் கட்சிகள்!

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கி இருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற... மேலும் பார்க்க

வேலூர் விஐடியில் நடந்த சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாடு

வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இதில், தமிழக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பே... மேலும் பார்க்க