செய்திகள் :

தூத்துக்குடி: வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்கிய கும்பல் கைது; கொலைத் திட்டமா?

post image

தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த கும்பல் ஒன்று தனிப்பிரிவு போலீஸாரிடம் சிக்கியது. அந்த கும்பலிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் கபில்தேவ், அஜித்குமார் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில், இருவரின் வீட்டிலும் சந்தேகத்தின் பேரில் போலீஸார் சோதனை நடத்தினர்.

தெற்கு காவல் நிலையம்

அப்போது அஜித்குமாரின் மனைவி எஸ்தர் மற்றும் மாமியார் ரீத்தம்மாள் ஆகியோர் வசித்து வரும் வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பையில் 8 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வல்லநாடு மலை அடிவாரத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, தொழில்நுட்ப ரீதியாக செயலிழக்கச் செய்தனர்.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி சீனு என்பவர் உப்பளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் கபில்தேவ் முதல் குற்றவாளியாக சேர்கப்பட்டார். இதனால் சீனுவின் நண்பரான ஜப்பான் அஜித் என்பவருக்கும் கபில்தேவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.

தெற்கு காவல் நிலையம்

இருவரும் தனித்தனி கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். அஜித் கும்பலை பழிவாங்க கபில்தேவ் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. அஜித்குமார் மீது 8 வழக்குகளும், கபில்தேவ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.  வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைபதுக்கி வைத்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர்: கர்ப்பிணி மனைவியைக் கொன்றுவிட்டு, உயிரை மாய்த்த கணவன் - அதிர்ச்சி பின்னணி!

திருப்பூர் மாவட்டம், கருமாரபாளையம் அருகில் உள்ள மூகாம்பிகை நகரில் ஒரு வீட்டில் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். தகவலின் அடிப்படையில் அ... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜி பூர்வீக வீட்டில் அவரது தம்பிக்கு சம்மன் வழங்கிய போலீஸார்! - கரூர் பரபரப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் பேரம் பேசியதாகக் கூறப்படும் வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும்... மேலும் பார்க்க

"ஜாமீன் வேண்டாம்; நிரபராதியாகத்தான் வெளியே வருவேன்"- போக்ஸோ வழக்கில் இளைஞர் விடுதலையான பின்னணி என்ன?

சேலம் மாவட்டம் எம். காளிப்பட்டியைச் சேர்ந்தவர் 32 வயதான கார்த்திக். சேலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி கர்ப்பமாக்கியதாக கடந்த 2024- ம்‌ ஆண்டு இவர் மீது புகார் கொடு... மேலும் பார்க்க

அயோத்தி ராமர் கோயிலைத் தொடர்ந்து பத்ரிநாத் கோயில் உண்டியல் பணமும் திருட்டு; வைரலாகும் வீடியோ

அயோத்தி ராமர் கோயிலில் நன்கொடை கையாடல் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இப்போது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத் கோயிலிலும் காணிக்கை மற்றும் நன்கொடைகள் முறைகேடு செய... மேலும் பார்க்க

வீட்டுக்கு முன்பு விளையாடிய சிறுமிக்குப் பாலியல் தொல்லை; கட்டட மேஸ்திரியை அடித்து உதைத்த ஊர் மக்கள்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் 7 வயது சிறுமி, தனது வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது, எதிரே உள்ள வீட்டில் கட்டட வேலை செய்துகொண்டிருந்த அரவட்லா மலை ... மேலும் பார்க்க

பாயசத்தில் விஷம்; கணவனைக் கொன்று குளியலறையில் புதைத்து நாடகமாடிய மனைவி; சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள சிகந்தரா என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுரேந்திரா. இவரது மனைவி ரூபி. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. சுரேந்திரா கடந்த மே மாதம் திடீரென காணாமல் போய்... மேலும் பார்க்க