செய்திகள் :

தேயிலை தோட்டத்தில் கிழிந்த உடைகள்; வனத்தில் உடல் பாகங்கள் - கோத்தகிரியை உறைய வைத்த பழங்குடி மரணம்!

post image

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகில் உள்ள கூவக்கரை பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயதான வெள்ளியங்கிரி. கூலித்தொழிலாளியான இவர் கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேலை செய்து குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். கடந்த மாதம் 29 - ம் தேதி கோத்தகிரி அருகில் உள்ள அரவேணு பகுதிக்கு கூலி வேலைக்குச் சென்ற இவர், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

அவரின் மனைவி மற்றும் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் வெள்ளியங்கிரியை கண்டுபிடிக்க முடியவில்லை. காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அரவேணு பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் அவரின் உடைகள் கிழிந்த நிலையில் கிடைப்பதைக் கண்டறிந்துள்ளனர். வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அருகில் இருந்த வனப்பகுதியில் வெள்ளியங்கிரியின் தலை, கை உள்ளிட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக கிடப்பதைக் கண்டறிந்துள்ளனர். அழுகிய நிலையில் காணப்பட்ட உடல் பாகங்களை மீட்டு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். எஞ்சிய உடல் பாகங்களை தேடும் பணியில் இரு துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

உடல் பாகங்கள் மீட்பு

பின்னணி குறித்து தெரிவித்த வனத்துறை அதிகாரி ஒருவர், "வெள்ளியங்கிரியின் உடல் பாகங்கள் கிடந்த பகுதியில் சிறுத்தையின் கால் தடங்கள் காணப்பட்டுள்ளது. சிறுத்தை தாக்கியதில் இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே உறுதியான முடிவுக்கு வர முடியும். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார்.

வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரின் உடல் பாகங்கள் வனப்பகுதியில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், கோத்தகிரியை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

மகாராஷ்டிரா: தேர்தலில் போட்டியிட தடையாக இருந்த 6 வயது மகளை கொன்ற கொடூர தந்தை - என்ன நடந்தது?

மகாராஷ்டிராவில் வரும் 5-ம் தேதி பஞ்சாயத்து மற்றும் ஜில்லா பரிஷத் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட வேண்டியிட விரும்புபவர்களுக்கு இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பத்தர்கள் வந்து செல்கின்றனர்.விழா காலங்கள் ... மேலும் பார்க்க

கோவை: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை - இறப்பதற்கு முன்பு செய்த `செயல்!'

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள சாந்திமேடு, தம்பு நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் (48). இவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்த... மேலும் பார்க்க

நெல்லை: திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்ட நிலையில் மணப்பெண் உயிரிழப்பு; ஆணவக்கொலையா?- நடந்தது என்ன?

நெல்லை, பேட்டை செக்கடி தெருவைச் சேர்ந்தவர் பச்சிராஜன். இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி, ரேவதி. தனியார் பள்ளி ஆசிரியை. இவர்களது முதல் மகளுக்கு திருமணமான... மேலும் பார்க்க

UP: 9 ஆண்டு காதல்; 2 மாதத் திருமண வாழ்க்கை; கழுத்தை நெரித்து கணவன் கொலை; மனைவி சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேசத்தில் 9 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்த காதல் கணவனை மனைவி இரண்டு மாதத்தில் கொலை செய்துள்ளார்.அங்குள்ள பரேலி என்ற இடத்தில் வசிப்பவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஒப்பந்த அடிப்படையில் நடத்துந... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: சென்னையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை; சாட்சியாக மாற்ற முடிவா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்ட... மேலும் பார்க்க