செய்திகள் :

``தைவானை தாக்கினால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கே தெரியும்" - சீனாவை எச்சரித்த ட்ரம்ப்

post image

31-ம் தேதி தென் கொரியாவில் ஆசியா - பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் பங்குகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் தென் கொரியா சென்றிருந்தனர். அப்போது இரு நாட்டின் தலைவர்களும் சந்தித்துக்கொண்டனர்.

அமெரிக்க அதிபரின் சீனா பொருள்கள் மீதான வரி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பேசுபொருளான நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பும் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

இந்த சந்திப்புக்குப் பிறகு அமெரிக்கா சென்ற அதிபர் ட்ரம்ப், தனியார் செய்தி நிறுவனத்தின் நேர்காணல் ஒன்றி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நேர்காணலில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.

டொனால்ட் ட்ரம்ப்
டொனால்ட் ட்ரம்ப்

அப்போது,``சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சீனாவில் உள்ள மக்களும் தைவானை தாக்கினால், அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அறிந்திருக்கிறார்கள்' என்றார்.

சீனா தைவான் மீது இராணுவ ரீதியாக நடவடிக்கை எடுத்தால் அமெரிக்க இராணுவம் அதில் தலையிடுமா என்றக் கேள்விக்கு, ``எனது ரகசியங்களை வெளியிட முடியாது. இது நடந்தால் அது நடக்கும் என உங்களுக்கு என்னால் தெளிவாக சொல்ல விரும்பவில்லை.

நீங்கள் கேள்வி கேட்பதால் மட்டும் நான் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்பவன் அல்ல. ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பதை சீனா புரிந்துகொள்கிறது.

சீன அதிபர் மக்களிடம் உரையாற்றும்போது வெளிப்படையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிபராக இருக்கும்வரை நாம் எதுவும் செய்ய மாட்டோம்' எனக் கூறியிருக்கிறார்." என்றார்.

ஆனால் சமீபகாலமாக சீனா விரிவான இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. கிட்டத்தட்ட தினமும் தைவானின் வான்வெளிக்கு அருகில் போர் விமானங்களை அனுப்புகிறது.

சீனா Vs தைவான்
சீனா Vs தைவான்

தைவான் ஜலசந்தியில் சாத்தியமான மோதல் குறித்த அச்சங்களை அதிகரித்துள்ளது என தி எபோக் டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

2027 ஆம் ஆண்டுக்குள் சாத்தியமான படையெடுப்பிற்கு தயாராகுமாறு சீன இராணுவத்தை ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறையும் மதிப்பீட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bihar: 10-வது முறையாக முதல்வராகும் நிதீஷ் குமார்; புதிய அமைச்சரவை குறித்து வெளியான தகவல்!

பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி எப்போதும் இல்லாத அளவுக்கு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் 206 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சிகளின் மகாகட்பந்தன் ... மேலும் பார்க்க

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க