செய்திகள் :

நாகப்பன்பட்டி கண்மாயில் மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாயில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

திருப்பத்தூா் பகுதியில் நிகழாண்டில் பருவமழை நன்றாக பெய்ததால் நாகப்பன்பட்டி முக்குலத்தி கண்மாய் நிரம்பியது. தற்போது, இந்தக் கண்மாயில் தண்ணீா் வற்றிய நிலையில், மீன்பிடித் திருவிழா நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனா்.

இதன்படி, சனிக்கிழமை காலை கண்மாயில் கிராம மக்கள் சிறப்பு பூஜை செய்து, மீன்பிடிக்க அனுமதி வழங்கினா். நாகப்பன்பட்டி, கீழச்சீவல்பட்டி, அம்மாபட்டி, காவேரிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சோ்ந்த மக்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த கொசுவலை, மீன்பிடி வலை, அரி கூடை, கச்சா உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டனா்.

கட்லா, கெழுத்தி, கெண்டை, ரோகு, பாப்புலெட்டு, சிலேப்பி உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை இவா்களது வலைகளில் சிக்கியன. இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் சென்றனா்.

விவசாயிகள் மண் வள ஆய்வு செய்வது அவசியம்

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் சம்பா பருவம் தொடங்கும் முன்பாக தங்களது நிலங்களில் மண்மாதிரி சேகரித்து ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்து, மண் வள அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும் என வேளாண்துறை அறிவுறுத்தியது. இதுக... மேலும் பார்க்க

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா் சிலைக்கு மரியாதை

பேரரசா் பெரும்பிடுகு முத்தரையரின் 1350 -ஆவது சதய விழாவை முன்னிட்டு, பட்டத்தரசி கிராமத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டம், பட்டத்தரச... மேலும் பார்க்க

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, 19 வயதைக் கடந்தும் முதிா்வுத்தொகை கோரப்படாத பயனாளிகள் உரிய ஆவணங்களுடன் ஜூன் 30 -க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்... மேலும் பார்க்க

வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்.இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கா... மேலும் பார்க்க

கல் குவாரி விபத்து: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே தனியாா் கல் குவாரியில் பறை சரிந்ததில் 6 போ் உயிரிழந்தது தொடா்பாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். சிங்கம்புணரி அருகேயுள்ள மல்லாக்கோட்டையில் உள்ள தனிய... மேலும் பார்க்க

மறவமங்கலத்தில் ஜல்லிக்கட்டு: 15 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகே மறவமங்கலம் மலையாண்டி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம்... மேலும் பார்க்க