செய்திகள் :

நாகை: செயின் திருட்டில் சிக்கிய தவெக பொறுப்பாளர்; தங்கை திருமணச் செலவுக்குத் திருடியது அம்பலம்

post image

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள இருக்கை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கஸ்தூரி (73). மூதாட்டியான இவர் தனது வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது முகத்தில் துணி கட்டிக் கொண்டு வந்த நபர் ஒருவர் வீட்டுக்குள் புகுந்து கஸ்தூரி கழுத்தில் இருந்த தங்க செயினைப் பறிக்க முயன்றுள்ளார்.

இதையடுத்து அவர் சத்தம் போட்டு கத்த உடனே அவரது மருமகள் சரண்யா வெளியே வந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட பாரதி
கைது செய்யப்பட்ட பாரதி

உடனே, திருட வந்தவன் அங்கிருந்து கருவேலங்காட்டுக்குள் தப்பிச் சென்றார். கஸ்தூரி சத்தமிட்டதால் அக்கம் பக்கத்தினரும் ஒடி வந்துடன் கருவேலங்காட்டிற்குள் சென்று பதுங்கியிருந்த செயின் பறிக்க முயன்றவனைப் பிடித்து வந்தனர்.

பின்னர் லைட் மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வந்த போலீஸார் அந்த நபரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த பாரதி(26) என்பதும் தவெக-வில் கிளை கழகப் பொறுப்பாளராக இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஏப்ரல் 30ம் தேதி தில்ஷாத்பேகம் என்ற முதியவரிடம் 14 கிராம் தங்க நகை திருடியதையும் போலீஸரிடம் ஒப்புக்கொண்டார்.

பாரதியிடம் இருந்து அந்த 14 கிராம் நகை மீட்ட போலீஸார் பாரதியை நாகை சிறையில் அடைத்தனர். இது குறித்து சிலரிடம் பேசினோம், பாரதிக்கு 4 அக்கா, 1 தங்கை உள்ளனர். தங்கை சிவரஞ்சனி திருமணம் ஜூன் 17ம் தேதி நடக்க உள்ளது.

திருட்டு சம்பவத்தில் சிக்கிய பாரதி
திருட்டு சம்பவத்தில் சிக்கிய பாரதி

இந்நிலையில் தங்கையின் திருமணச் செலவிற்காகவே பாரதி இந்தத் திருட்டில் ஈடுபட்டுதாக போலீஸில் தெரிவித்துள்ளான். கஸ்தூரியின் வீட்டில் ஒரு மாதத்திற்கு முன்பு பெயிண்ட் அடிக்கும் வேலைக்குச் சென்றுள்ளான். அப்போது வீட்டில் அடிக்கடி தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்டவன், சில தினங்களுக்கு முன்பும் வீட்டை நோட்டமிட்டு திருட்டில் ஈடுப்பட்டவன் சிக்கி கொண்டான் என்கிறார்கள்.

இதே பகுதியில் கடந்த சில தினங்களாக மோட்டார், ஆடுகள் மற்றும் நகை திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதியினர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது என்றனர்.

கோவை ஈஷா யோக மையத்தில் வாலிபர் மர்ம மரணம்; காவல் துறையின் விளக்கம் என்ன?

விழுப்புரம் மாவட்டம், சிறுவாடி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (29). இவர் கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில், நேற்றிரவு கார்த்திக் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மர்... மேலும் பார்க்க

திருச்சி: நர்சிங் மாணவி உயிரிழப்பு; தடைசெய்யப்பட மருந்தை பயன்படுத்திய 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம்

திருச்சி அரசு மருத்துவமனையில் மூக்கு சதை அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த, நர்சிங் கல்லூரி மாணவி சீதாலட்சுமி, கடந்த மாதம் 23-ம் திடீரென இறந்தார். அவரது சாவுக்கு மய... மேலும் பார்க்க

கர்நாடகா: ஆன்லைன் விளையாட்டைத் தடுத்ததால் ஆத்திரம்? - தந்தை, சகோதரியை குத்திக் கொலைசெய்த வாலிபர்!

கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் உள்ள ஹோசா அயோத்தி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட் நாயுடு. இவர் தனது மகனிடம் ஆன்லைன் மொபைல் கேம்களை விளையாட வேண்டாம் என்று கண்டித்தார். இதனால் க... மேலும் பார்க்க

ஈரோடு: செல்போன் பார்ப்பதைக் கண்டித்த பெற்றோர், விபரீத முடிவெடுத்த பிளஸ் டூ மாணவி!

ஈரோடு மாவட்டம், நடுப்பாளையம் அருகில் உள்ள மணக்காட்டுப்புதூரைச் சேர்ந்த 17 வயதான சிறுமி, அருகில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12- ம் வகுப்பு பயின்று வந்திருக்கிறார். இவரின் தந்தை தனியார் வங்கி ஒன்றில்... மேலும் பார்க்க

வாடகை வீட்டை விற்க மறுத்த பேராசிரியை; 1,400 கி.மீ பயணித்து வந்து கொலைசெய்த தம்பதி - பகீர் சம்பவம்!

டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள சத்யம் என்ற கட்டடத்தில் தபோஸ்மிதா என்ற பெண் தனியாக வசித்து வந்தார். அவர் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் உதவி பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். கடந்த சில நாள்களுக... மேலும் பார்க்க

பார்சல் மூலம் போதைப்பொருள் வாங்கிய விஞ்ஞானி - கூரியர் ஊழியர்கள் தகவலால் போலீசில் சிக்கியது எப்படி?

மகாராஷ்டிரா மாநிலம், புனே ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத் சர்காலே (39). விஞ்ஞானியான இவர் கேரள மாநிலம் ஆலப்புழா தேசிய வைராலஜி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெக்னிக்கல் ஆபீசர்' ஆகப் பணி... மேலும் பார்க்க