செய்திகள் :

நீதிமன்றத்தையே ஏமாற்றிய கும்பல்: கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளுக்கு ஜாமீன் - தரகர்கள் கைது!

post image

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில், தொழில்முறை `ஜாமீன் தரகர்களாக'ச் செயல்பட்ட ஒரு கும்பலை காவல்துறை கடந்த புதன்கிழமை கைதுசெய்திருக்கிறது.

கொலை, பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெற்றுத் தருவதற்காக, போலி நில வருவாய் ஆவணங்கள், போலியான ஆதார் அட்டைகள் மற்றும் போலியான அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு ஜாமீன் பெறப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணை குறித்து தெரிவித்த காவல்துறை, ``இந்தக் கும்பல் குறைந்தபட்சம் 23 வழக்குகளில் மோசடியாகப் பிணை பெற்றுத் தந்துள்ளது தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ராம் கிஷோர் 13 வழக்குகளில் போலியான நில வருவாய் ஆவணங்களை ஏற்பாடு செய்தது தெரியவந்திருக்கிறது.

கைது
கைது

அவரது கூட்டாளிகளான விஸ்வநாத் பாண்டே, பிரவீன் தீட்சித், தர்மேந்திரா மற்றொரு கூட்டாளியான அமித் மூன்று வழக்குகளிலும் ஜாமீன் தாரர்களாக வேலைபார்த்திருக்கிறார்கள். பிரவீன் தீட்சித் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கொலைக் குற்றவாளி. தற்போது உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஜாமீனில் வெளியே இருந்தார்.

பிரேம் சங்கர் நீதிமன்ற வளாகத்தில், தொழில்முறை குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாரர்களையும், போலி ஆவணங்களையும் ஏற்பாடு செய்வதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.

நீதிமன்றத்தையே ஏமாற்றி ஜாமீன் பெற்றவர்களில் ஒரு கொலைக் குற்றவாளி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். இந்தக் கும்பல் ஒரு வழக்குக்கு சுமார் ரூ.20,000 வரை கட்டணமாக வசூலித்தாகக் கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்றது.

சித்தப்பாவுடன் தொடர்பு... கணவனைக் கொலைசெய்த மனைவி கைது - கோவையில் `பகீர்!'

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே உள்ள நல்லட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவா என்கிற ரதீஷ் (27). ரதீஷ் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் இந்திராணி (26) என்கிற பெண்ணுக்கும் சமூகவலைதளத்... மேலும் பார்க்க

பகலில் ஓட்டுநர்.. இரவில் திருடன்.. வீட்டின் பூட்டை உடைக்காமலேயே கொள்ளை - சிக்கிய கோவை திருடன்!

கோவை குனியமுத்தூர் நரசிம்மபுரம் ஐயப்ப நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெபா மார்டின். இவர் கடந்த வாரம் ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 103 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்... மேலும் பார்க்க

சபரிமலை தங்கக் கொள்ளை வழக்கு: "உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு உதவினேனா?" - CPM முன்னாள் அமைச்சர் விளக்கம்

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவாரபாலவர்கள் சிற்பம், திருநடை ஆகியவற்றில் பொதிந்த தங்கத்தகடுகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கை கேரளா கோர்ட் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.இந்த வழ... மேலும் பார்க்க

ராமேஸ்வரம்: காணிக்கை பணத்தில் கைவைத்த கோயில் ஊழியர் - சிக்கவைத்த சிசிடிவி!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதிலும் இருந்து வந்து செல்கின்றனர். இவர்கள் கோயிலில் உள்ள பல்வேறு சன்னிதிகள் முன் வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கைய... மேலும் பார்க்க

லிஃப்ட் கொடுப்பதாக காருக்குள் அழைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை; இளம்பெண்ணை சாலையில் வீசிய கும்பல்!

ஹரியானா மாநிலம், ஃபரிதாபாத்தில் இரவு நேரத்தில் 28 வயது பெண் ஒருவர் சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த கார் அப்பெண் அருகில் வந்து நின்றது. காரில் இருந்தவர்கள் அப்பெண்ணிடம் எங்கு செல்ல வே... மேலும் பார்க்க

ஒடிசா இளைஞர் மீதான தாக்குதல்; `இந்தச் சம்பவத்திற்கு தற்போதைய சினிமாவும் காரணம்தான்'- பேரரசு

திருத்தணி ரயில் நிலையம் அருகே கடந்த சனிக்கிழமை (டிச. 27) 4 சிறுவர்கள் ஒடிசா இளைஞரை வழிமறித்து கத்தியால் தாக்கி, துன்புறுத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.அந்த 4 இளைஞர்களை போலீஸார் கைது செய... மேலும் பார்க்க