செய்திகள் :

பஞ்சாப்: குருத்வாரா அருகில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேராய் சுட்டுக்கொலை; பின்னணி என்ன?

post image

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள மாடல் டவுனில் இருக்கும் குருத்வாராவிற்கு வெளியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் லக்கி ஒபேரா இன்று காலை தனது காரை நிறுத்திக்கொண்டிருந்தார்.

அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் லக்கி ஒபேராய் இருந்த காரை நோக்கி சரமாரியாகச் சுட்டுவிட்டு சம்பவ இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

இது குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து லக்கி ஒபேராயை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்குள் ஒபேராய் இறந்து போனார். மர்ம நபர்கள் லக்கி ஒபேராய் மீது 5 முறை துப்பாக்கியால் சுட்டதாகத் தெரிகிறது. இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். லக்கி ஒபேராய் மனைவி சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

லக்கி ஒபேராய்யின் கார்
லக்கி ஒபேராய்யின் கார்

இச்சம்பவம் குறித்து எதிர்க்கட்சித்தலைவர் பர்தாப் சிங் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், ''முதல்வர் பகவான் மான் நிர்வாகத்தில் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. பட்டப்பகலில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது இதனை உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

ஆளும் கட்சித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லையெனில் சாதாரண குடிமக்களுக்கு என்ன உத்தரவாதம்? இன்று பஞ்சாப் அச்சம், கும்பல் வன்முறை மற்றும் நிர்வாக முடக்கத்தால் சூழப்பட்டுள்ளது.

அதே சமயம், ஆம் ஆத்மி அரசு இதற்குச் சாக்குப்போக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறது. இந்த முழுமையான சீர்குலைவுக்கு யார் பொறுப்பு என்று முதலமைச்சர் பகவந்த் மான் பதிலளிக்க வேண்டும்'' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

டெல்லி: இந்தாண்டின் முதல் 15 நாள்களில் 800 பேர் மாயம்; 'இது சராசரிதான்' - போலீஸ் `அதிர்ச்சி' பதில்!

டெல்லியில் 'நபர்கள் காணாமல் போகும் வழக்குகள்' தொடர்ந்து அதிகம் பதிவாகி வருகின்றன. PTI வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை, 807 பேர் டெல்லியில் காணாமல் போயிர... மேலும் பார்க்க

மேகாலயா: சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து; 18 உடல்கள் மீட்பு; பிரதமர் இரங்கல்; என்ன நடந்தது?

மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலைப்பகுதியில் அமைந்துள்ள சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 18 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத... மேலும் பார்க்க

சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன... மேலும் பார்க்க

கணவன், மனைவி சண்டையை விலக்கிவிடச் சென்ற டிரைவர் கொலை; திருவள்ளூரில் சோகம்!

திருவள்ளூரை அடுத்த புட்லூரைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரின் மனைவி இந்துமதி. இவர்கள் காக்களூர் பகுதியில் வசித்து வந்தனர். இந்துமதிக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில், அசோக்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்... மேலும் பார்க்க

Honeymoon murder: மேகாலயா சம்பவ பாணியில் `தேனிலவு அதிர்ச்சி' - கணவனைக் காதலன் மூலம் கொலைசெய்த மனைவி!

ராஜஸ்தான் மாநிலம், ஸ்ரீகங்காநகர் பகுதியில் ஒரு தம்பதி மயங்கிய நிலையில் கிடப்பதாக, போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸார் விரைந்து சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `மது போதை’ நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறு - விலக்கி வைக்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுச்சேரி கிராமப்புற மதுக்கடை ஒன்றில் இளைஞர் அடித்து படுகொலை செய்யப்பட்ட சி.சி.டி.வி காட்சி, பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. சுமார் இரண்டு நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோ காட்சியில் ஒரு இளைஞரு... மேலும் பார்க்க