செய்திகள் :

`பலூன், மலர்களால் ஏ.சி முதல்வகுப்பு பெட்டி அலங்காரம்' - ரயிலை தேனிலவு அறையாக மாற்றிய புதுமணத்தம்பதி

post image

ரயில்களை எதாவது நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் அதன் முழு இருக்கைகளும் முன்பதிவு செய்யப்படுவது வழக்கம். ஆனால் மகாராஷ்டிரா தம்பதியினர் சற்று வித்தியாசமாக ரயிலை தங்களது தேனிலவு அறையாக மாற்றியுள்ளனர்.

பல்ஹார்ஷா - மும்பை நந்திகிராம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் வகுப்பு ஏசி (AC) கூபே அறை, புதுமணத் தம்பதிக்காக மலர்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட தேனிலவு அறையாக மாற்றப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.

அந்த ரயிலில் உள்ள ஒரு தனி அறை முழுவதும் பலூன்கள், பூக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரோஜா இதழ்களால் அலங்கரிக்கப்பட்டிருந்ததுடன், அதன் சுவரில் ஐ லவ் யூ என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது. ரயில் ஓடிக்கொண்டிருந்த போதே இந்த காதல்மயமான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்ததை அந்த வீடியோ காட்டியது.

அந்த புதுமணத் தம்பதி கடந்த 6ம் தேதி அன்று சத்ரபதி சம்பாஜிநகரிலிருந்து (முன்பு அவுரங்காபாத்) மும்பைக்குப் பயணம் செய்வதற்காக, முதல் வகுப்பு ஏசி பெட்டியில் உள்ள ஜி கூபே அறையை முன்பதிவு செய்திருந்தனர்.

ஜால்னாவைச் சேர்ந்த தம்பதியினர் ரயிலில் ஏறுவதற்கு முன்பாகவே, 'ராஹத் ரூம் டெக்கரேஷன் நிறுவன ஊழியர்கள் ஜால்னா ரயில் நிலையத்தில் வைத்து அந்த ஏசி பெட்டியை அலங்கரித்துள்ளனர். தங்களது கூபே அறையை அலங்கரிப்பதற்காக ஜால்னாவைச் சேர்ந்த ராஹத் டெக்கரேட்டர் நிறுவனத்தை ஒரு ஆன்லைன் தளம் மூலமாகத் அத்தம்பதி தன்னிச்சையாக வாடகைக்கு அமர்த்தியுள்ளனர்.

அந்த அலங்கார நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த அலங்கார வேலைகளைச் செய்வதற்காக ஜால்னா ரயில் நிலையத்தில் வைத்து, அந்த சொகுசு ஏசி பெட்டிக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர். இதற்காக அவர்கள் அனுமதியின்றி ரயிலுக்குள் நுழைந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த தனியார் நிறுவனம் மீது அத்துமீறி நுழைதல் மற்றும் டிக்கெட் இன்றி பயணித்தல் ஆகிய குற்றங்களுக்காக ரயில்வே சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த பாதுகாப்பு குறைபாட்டிற்காக அன்றைய தினம் பணியில் இருந்த தலைமை பயணச்சீட்டு பரிசோதகர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஓடும் ரயிலுக்குள் அனுமதியின்றி ஒரு தனியார் வணிக நிறுவன ஊழியரை அனுமதிப்பதும், ரயிலை மாற்றி அமைப்பதும் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை மிகக் கடுமையாக மீறும் செயலாகும் என்று ரயில்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்! | க்யூட் கிளிக்ஸ்

விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!விம்பிள்டனில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்!... மேலும் பார்க்க

மகாராஷ்டிராவில் கனமழை: ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3000 கேஸ் சிலிண்டர்கள்!

மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பன்வெல் தாலுகாவில் உள்ளசவானே தொழிற்பேட்டையில் எச்பிசிஎல் நி... மேலும் பார்க்க

அதிகாலை 3 மணிக்கு போன்; காலையில் வந்தடைந்த பணம்- அமிதாப்பின் அயோத்தி முதலீடு குறித்து அபிநந்தன் லோதா

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை நிலத்தில் முதலீடு செய்து வருகிறார். அமிதாப் பச்சனின் சொந்த ஊரான உத்தரப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் இந்த முதலீடுகளை செய்து... மேலும் பார்க்க

சூடான சமோசா வாங்க ரயிலை நடுவழியில் நிறுத்திய பைலட் ? - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?

ரயில்களை தேவையில்லாமல் நிறுத்தம் இல்லாத இடங்களில் நிறுத்தக்கூடாது. ஆனால் சில நேரங்களில் தொழில் நுட்ப காரணங்களுக்காக ரயில் சில இடங்களில் நிறுத்தப்படுவதுண்டு. ஆனால் மத்திய பிரதேசத்தில் ரயில் டிரைவர்கள் ... மேலும் பார்க்க

சிங்கத்தின் பிடியில் `திக்... திக்' 30 நிமிடங்கள்! - என்ன செய்து உயிர்பிழைத்தார் குஜராத் நபர்?

குஜராத்தில் உள்ள கிர் (Gir) காடுகள், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆசியச் சிங்கங்கள் வாழ்வது வழக்கம். ஆனால், சமீப காலமாக உணவு மற்றும் இடப்பற்றாக்குறை காரணமாக அவை அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து விட... மேலும் பார்க்க

AI மூலம் ஆடம்பரம்... உயிருக்கே விலைபேசிய நண்பன்! - வாட்ஸ்அப் ஸ்டேட்டஸால் நடந்த விபரீதம்

சமூக வலைதளங்களில் நாம் பகிரும் ஒரு புகைப்படம், ஒரு வீடியோ... அது வெறும் பொழுதுபோக்கு மட்டும்தானா? அல்லது, நமக்கே தெரியாமல் நமக்கெதிரான ஒரு கண்ணியாக மாறி, நமது நிம்மதியையே குலைத்துவிடுமா? நாக்பூரில் நட... மேலும் பார்க்க