செய்திகள் :

``பாஜகவுக்கு சாமரம் வீச அதிமுக SIR-ஐ ஆதரிக்கிறது'' - திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ

post image

"2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என திமுக சட்டத்துறைச் செயலாளரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர். இளங்கோ சென்னையில் நேற்று (நவ.18) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார்.

SIR
SIR

" தேர்தல் ஆணையம், ஒரு மாத காலத்துக்குள் பொதுமக்கள் கணக்கெடுப்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும் என்கிறது. முழுக்க முழுக்க பி.எல்.ஓ.க்களை நம்பி செயல்படும் இந்த முறையில், அவர்களுக்கு ஒரு நாள் மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது.

பி.எல்.ஓ.க்கள், மக்களிடம் உள்ள எதிர்ப்பையும், தேர்தல் ஆணையத்தின் அழுத்தத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

படிவங்கள் முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இரண்டு படிவங்கள் வர வேண்டிய இடங்களில் ஒரு படிவம் மட்டுமே வந்திருக்கிறது.

இந்த நடவடிக்கையால், பல லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது, இது தமிழ்நாட்டின் ஜனநாயகத்திற்குப் பேராபத்து.

Election Commission - தேர்தல் ஆணையம்
Election Commission - தேர்தல் ஆணையம்

அதிமுகவினர், எஸ்ஐஆர்-ஐ வரவேற்றுப் பேசியது, அதில் உள்ள பிரச்னைகளை அறிந்து கொள்ளாமல், பாஜகவுக்கு சாமரம் வீச வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே. எஸ்ஐஆர் நிறைவேற்றத் தொடங்கிய பிறகே, பொதுமக்களுடைய வாக்குகளைப் பறிக்கக்கூடிய வகையில் இது இருப்பதை அதிமுக தொண்டர்கள் உணர்ந்து தங்கள் கட்சி எடுத்த நிலை தவறு என்று அறிந்திருக்கிறார்கள்.

திமுக எப்போதும் நேர்மையான வாக்காளர் பட்டியல் வேண்டும் என்று வலியுறுத்துகிறது. திமுகவினர் மீது அதிமுக விமர்சனம் வைப்பது இயலாமையின் வெளிப்பாடு.

2026-ல் முறையற்ற முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டால், நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என்று பேசியிருக்கிறார்.

'முதல்வர் பயணித்த வெளிநாடுகள் 7; ஈர்க்கப்பட்ட முதலீடு 0’ - அடுக்கடுக்காக குற்றஞ்சாட்டும் அன்புமணி

தமிழக அரசின் தொழில் முதலீடுகள் சார்ந்து கேள்வி கேட்டு, 'திமுக அரசின் பொய் முதலீடுகள்' என்ற பெயரில் பா.ம.க தலைவர் அன்புமணி ஆவணம் ஒன்றை இன்று சென்னையில் வெளியிட்டிருந்தார்.அன்புமணிஅந்த ஆவணத்தை வெளியிட்ட... மேலும் பார்க்க

இராமேஸ்வரம்: `இந்த அவல நிலைக்கு யார் பொறுப்பு?’- பள்ளி மாணவி குத்தி கொல்லப்பட்ட விவகாரத்தில் கண்டனம்

இராமேஸ்வரத்தில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த 12-ம் வகுப்பு மாணவியை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காதலிக்க மறுத்ததால் இளைஞர் கொலை செய்ததாகக் கூறப... மேலும் பார்க்க

``நடிகர் விஜய் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்துடன் ஒன்றுபட்டுள்ளார்' - அப்பாவு

நெல்லையில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக விஜய் போராட வேண்டுமென்றால் டெல்லியில் உள்ள தேர்தல்... மேலும் பார்க்க

``விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன்'' - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் திண்டுக்கல்லில் நேற்று வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.பின்னர் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித... மேலும் பார்க்க