செய்திகள் :

பாஜக: "விஜய் Spoiler-ஆ? பியூஷ் கோயலிடம் பேசியது என்ன?" - நயினார் நாகேந்திரன் தகவல்

post image

மத்திய அமைச்சரும், பாஜக தமிழ்நாடு தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வந்திருந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.

பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை
பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை

அப்போது தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், அதிமுக – பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்தச் சந்திப்பில் தமிழ்நாட்டின் கள நிலவரம் எப்படி இருக்கிறது, தேர்தல் கள நிலவரம் எப்படி என்பது குறித்துப் பேசப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது

தொகுதிப் பங்கீடு குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை. மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து இன்னும் தயாராகவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எப்படி நடந்தது என்பது குறித்து ஆலோசித்தோம்.

தமிழ்நாட்டில் திமுக அகற்றப்பட வேண்டும். ஒருமித்த கருத்துடையவர்கள் ஓரணியில் இணைய வேண்டும். தினகரன், ஓபிஎஸ்ஸை இணைப்பது பற்றியோ, விஜய் குறித்தோ எதுவும் பேசப்படவில்லை.

விஜய் ஸ்பாயிலர் என்று எப்படிச் சொல்ல முடியும். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. பொங்கல் முடிந்து கூட நல்ல காரியங்கள் நடக்கலாம். தை பிறந்தால் வழி பிறக்கும் வாய்ப்புள்ளது” என்றார்.

சகோதரிக்கு வழிவிடுவாரா ராகுல்? `பிரியங்கா காந்தி பிரதமராவது தவிர்க்க முடியாதது' என்கிறார் வதேரா

பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அரசியல் செய்யக்கூடிய தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை என்ற விமர்சனம் இருந்து வருகிறது. ராகுல் காந்தியால் நரேந்திர மோடியை சமாளிக்க முடியவில்லை என்று காங்கிரஸ் தலைவர்களே... மேலும் பார்க்க

போலி மருந்து விவகாரம்: பாஜக ஆதரவு முன்னாள் ஐ.எஃப்.எஸ் அதிகாரியை தூக்கிய புதுச்சேரி போலீஸ்

இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான `சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகாரளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலி மருந்துக் கும்பலிடம் சபாநாயகர் லஞ்சம் வாங்கியிருக்கிறார்!’ – நாராயணசாமி பகீர்

`தீபாவளி பரிசு வழங்க ரூ.42 லட்சம்...’புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விற்பனை செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்... மேலும் பார்க்க

Vijay : 'தூத்துக்குடி மட்டுமா?' ஓடும் விஜய்; பதுங்கும் ஆனந்த்! - கோஷ்டி பூசலில் தவெக

விஜய்யின் பனையூர் தவெக அலுவலகத்தை அல்லோலகலப்படுத்தியிருக்கிறார் தூத்துக்குடி பெண் நிர்வாகி அஜிதா ஆக்னல். விஜய் காரின் குறுக்கே விழுந்து கட்டையை போட்டவர், ஒரு கட்டத்தில் அலுவலகத்தின் கேட் முன்பு அமர்ந்... மேலும் பார்க்க

மும்பை தேர்தல்: `தாக்கரே சகோதரர்கள் வென்று விடுவார்கள்' - பாஜக-விடம் அதிக இடங்களை கேட்கும் ஷிண்டே

மும்பை மாநகராட்சிக்கு வரும் ஜனவரி 15ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு இத்தேர்தல் நடைபெறுகிறது. அதுவும் சிவசேனா உடைந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தலாக இருப்பதால் மும்பையில் உத்தவ் தாக... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸுக்கு இம்முறை வாய்ப்பு மறுப்பா? - குளச்சலில் அலையடிக்கும் அரசியல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன. இயற்கை துறைமுக தொகுதி என்ற சிறப்பை பெற்ற குளச்சலில் தி.மு.க ஒருமுறையும், அ... மேலும் பார்க்க