செய்திகள் :

பாராமதி: `நாளை பேசுகிறேன் அப்பா' - விமானப் பணிப்பெண் பிங்கி மாலி பேசிய கடைசி வார்த்தைகள்

post image

பாராமதி விமான நிலைய ஓடுதளம் அருகே நடந்த விமான விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், அந்த விமானத்தில் பணியாற்றிய விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, தனது தந்தையுடன் விபத்துக்கு முன் பேசிய கடைசி தொலைபேசி உரையாடல் தற்போது வெளிவந்துள்ளது.

“நாளை பேசலாம்” என்ற கடைசி வார்த்தை

மும்பை வொர்லியைச் சேர்ந்த பிங்கி மாலி, தனது தந்தை சிவ்குமார் மாலியிடம் “அப்பா, நான் அஜித் பவாருடன் பாராமதிக்கு பறக்கிறேன். அவரை இறக்கிவிட்ட பிறகு நான் நாந்தேட் செல்கிறேன். நாளை பேசலாம்” என்று கூறியுள்ளார்.

ஆனால் அந்த “நாளை” இனி ஒருபோதும் வராது என அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

“நான் என் மகளை இழந்துவிட்டேன். என்ன நடந்தது என்பது பற்றி எனக்கு எந்த தொழில்நுட்ப அறிவும் இல்லை. நான் முற்றிலும் உடைந்து போயிருக்கிறேன். என் மகளின் உடலை மட்டும் தர வேண்டும். மரியாதையுடன் அவளது இறுதி சடங்கை செய்ய வேண்டும். அதுதான் எனது ஒரே விருப்பம்,”என்று சிவ்குமார் மாலி தெரிவித்துள்ளார்.

பிங்கி மாலி சமீப காலமாக அஜித் பவாருடன், அதே சிறிய ரக விமானத்தில் பல பயணங்களில் இணைந்து சென்றதாகவும், அந்த நாளும் வழக்கம்போல தனது பணிக்காகவே விமானத்தில் இருந்ததாகவும் சிவ்குமார் கூறியுள்ளார்.

இந்த விமான விபத்து புதன்கிழமை காலை, புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி விமான நிலையம் அருகே நடந்தது. டெல்லியைச் சேர்ந்த VSR வெஞ்சர்ஸ் நிறுவனம் இயக்கிய Learjet 45 ரக விமானம் (பதிவு எண்: VT-SSK) விபத்துக்குள்ளானது.

இந்த விமானத்தில் மொத்தம் ஐந்து பேர் பயணம் செய்தனர். மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி விதிப் ஜாதவ், விமானப் பணிப்பெண் பிங்கி மாலி, பிரதான விமானி சுமித் கபூர் மற்றும் இணை விமானி ஷம்பாவி பாதக். இந்த விபத்தில் ஐவரும் உயிரிழந்தனர்.

விமானப் போக்குவரத்து விவரங்களின்படி, இந்த Learjet 45 விமானம் காலை 8.10 மணிக்கு மும்பையிலிருந்து புறப்பட்டது. காலை 8.45 மணியளவில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், காலை 8.50 மணியளவில் பாராமதி அருகே விமானம் விபத்துக்குள்ளானது.

அஜித் பவார், பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவிருந்த மாவட்ட ஊராட்சி (Zilla Parishad) தேர்தல்களை முன்னிட்டு நடைபெற இருந்த நான்கு தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உரையாற்றுவதற்காக பயணம் செய்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானம் தரையிறங்கும் முயற்சியின் போது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில், விபத்து தகவல் கிடைத்த உடனேயே அவசர மீட்பு குழுக்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கப்பட்டன.

விசாரணைக்கு AAIB குழு

இந்த விமான விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, விமான விபத்து விசாரணை பணியகம் (Aircraft Accident Investigation Bureau – AAIB) சார்ந்த ஒரு குழு, டெல்லியிலிருந்து புனேவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

'அவர்' மீது எங்களுக்கு எவ்வளவு கோபம், எவ்வளவு ஆசை, எவ்வளவு வியப்பு இருக்கிறது தெரியுமா? - சு.வெ

ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழாவில், பெருந்தமிழர் விருது பெற்ற எஸ்.வி.ராஜதுறை குறித்து சு.வெங்கடேசன் எம்.பி பேசுகையில், "விகடனுடைய 'பெருந்தமிழர்' விருது பெறுகிற தோழர் எஸ்.வி.ஆர்., நம் சமகாலத்தின... மேலும் பார்க்க

``தோப்புக்கரணம் போடு என்றால், நான்-ஸ்டாப்பாக பல்டி அடிப்பார் பழனிசாமி’’ - ஸ்டாலின் கடும் தாக்கு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மண்டலவாடியில், தி.மு.க வடக்கு மண்டலத்துக்குட்பட்ட 47 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குச்சாவடிக் குழுவினருக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

'த்ரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது வருத்தம்' - வானதி சீனிவாசன்

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “மகளிர் உரிமைத் தொகையை பாஜக தடுக்க பார்க்கிறது என்று திமுகவினர் முட்டாள்தனமான பேசுகிறார்கள். ... மேலும் பார்க்க

'புதுச்சேரி நிதியில் ரூ.15,000 கோடி ஊழல் செய்தவர் நாராயணசாமி!' – காரைக்காலில் கடுகடுத்த அமித் ஷா

``தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்கிறேன்...”புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷ... மேலும் பார்க்க

`அமித் ஷா உள்ளிட்டோர் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வேண்டும்; அப்படி வந்தால்தான்...' - அன்பில் மகேஸ்

திருச்சி, திருவெறும்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எதிரணியினருக்குதான் தேர்தல் பயம். மக்களுக்கான நலத்திட்டங்களை சூழ்ச்சி செய்து யா... மேலும் பார்க்க

அண்ணா அறியாலயத்தில் ஒருபக்கம் ரெய்டு; மறுப்பக்கம் கூட்டணி பேச்சு! - காங்கிரஸ் ஆடிய அரசியல் ஆடுபுலி

`ஆட்சியில் பங்கு'அரசியல் ஆடுபுலி 05ஆட்சியில் பங்கு வேண்டும் என்கிற கோரிக்கையோடு, அதிமுக கூட்டணியில் பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரசும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சினைத் தொடங்... மேலும் பார்க்க